ShareChat
click to see wallet page
search
திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்களின் பேனர் சரிந்து விழுந்ததில், அங்கு நின்று கொண்டிருந்த பள்ளி மாணவி படுகாயமடைந்துள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடத்தில், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனரால் ஒரு பிஞ்சு உயிர் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டிக்கத்தக்கது. இப்பகுதியில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுவது குறித்து பலமுறை பொதுமக்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பவர்களின் பேனர் என்பதால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்தது ஏன்? சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளின் இந்த மெத்தனப்போக்கே இன்று ஒரு மாணவியின் காயத்திற்கு நேரடி காரணமாகியுள்ளது. பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றமும், தமிழக அரசும் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால், திமுக ஆட்சியில் தங்களுக்கு நெருக்கமானவர்களின் பேனர்களை அகற்ற அதிகாரிகள் தயங்குவது, "சட்டம் அனைவருக்கும் சமம்" என்ற கூற்றைப் பொய்யாக்கியுள்ளது. அனுமதி பெறாத பேனர்களை முன்கூட்டியே அகற்றியிருந்தால், இன்று இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது. இந்த சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீதும், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் தமிழக அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் காயமடைந்த மாணவிக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். "விளம்பர மோகத்திற்காக" பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இந்த ஆபத்தான போக்கை திமுக அரசு இனியாவது கை விட வேண்டும். #📰தமிழக அப்டேட்🗞️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 ##கையாலாகாத_திமுக #dmkfails #dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள் #✨💗TVKFORTN💗✨
📰தமிழக அப்டேட்🗞️ - TKHOWINGOFFL திமுக பேனர் சரிந்து விழுந்து பள்ளி மாணவி படுகாயம் ! TKHOWINGOFFL திமுக பேனர் சரிந்து விழுந்து பள்ளி மாணவி படுகாயம் ! - ShareChat