🥀🌺🍂🥀🌺🍂🥀🌺🍂🥀🌺🍂
நம் தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர். கேட்பதோடு விட்டுவிடாமல் ஜெபத்திற்கு பதிலும் கொடுக்கிறவர்.
அவரிடத்தில் நீங்கள் கேட்கும் அனைத்தையும் அவர் உங்களுக்கு கொடுக்க போதுமானவராய் இருக்கிறார்.
சரியான நேரத்தில் நீங்கள் வேண்டிக் கொண்ட அனைத்தையும் ஒவ்வொன்றாய் தருவார். சில ஆசீர்வாதங்களை நீங்கள் பெறாமல் இருப்பது உங்களுடைய நன்மைக்கே. ஏற்ற காலத்தில் அவைகளெல்லாம் உங்களை வந்து சேரும்.
நீங்கள் வேண்டிக் கொள்வதையெல்லாம் அவர் உங்களுக்கு செய்வார். வாக்கு மாறா நல்ல தேவன் அவர். ஒன்றன்பின் ஒன்றாய் ஒவ்வொன்றாய் அனுபவியுங்கள்.
"நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்கு செய்வேன்."
🌺🥀🍂🥀🌺🍂🥀🌺🍂🥀🌺🍂 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்


