#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை வரிகள்!!
வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்.
ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே
வெற்றி கிடைக்கும்.அதனால் நம்பிக்கையை
வளர்த்துக் கொள்ளுங்கள்..!
மண்ணில் விழுவது தப்பில்லை ஆனால் விதையாக விழுந்து மரமாக எழு.
எப்போதும் அடக்கமாயிரு. எல்லாமிருந்தும் அமைதியாக இருக்கும் நூலகம் போல.
சாதாரண மனிதன் விழித்திருக்கும் போதும் தூங்குகிறான். சாதிக்கப் பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான் - இதில் நீங்கள் யார்?
புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம். சுவருக்குள் அடைந்து கிடப்பது வாழ்க்கை அல்ல அதையும் தாண்டி சாதனை படைப்பது தான் சிறந்த வாழ்க்கை ....
சிந்தித்துப் பார் ....
சாதனைகளை நிகழ்த்த
வயது ஒரு தடை இல்லை
என்பது நன்றாக விளங்கும் ....
சோதனைகளைக் கண்டு துவண்டு போக மனிதன் பிறக்கவில்லை ....
அந்த சோதனைகளை சாதனையாக மாற்றப் பிறந்தவனே மனிதன் ....
அடிமேல் அடி எடுத்து வை.
நம்பிக்கையுடன் போராடு
சாதனை கூட ஒரு நாள்
உனது தோள் மீது அமர்ந்து இருக்கும் ....
நீயும் இருப்பாய்
சாதனையாளர் பட்டியலில் ....
வெற்றி நிச்சயம்!
உற்சாகமான காலை வணக்கம்.
😊😊😊


