தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா (25). பென்னாகரத்தைச் சேர்ந்த ஒருவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர் இரு ஆண் குழந்தைகளின் தாயாக உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் டிக்டாக் நிகழ்ச்சிகளுக்காக இரு பெண்கள் உதவியுடன் பயிற்சி எடுக்கச் சென்றார்.
பிப்ரவரி 3-ம் தேதி, 'டிக்டாக் பயிற்சிக்குச் சென்று வருவதாக' பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியேறிய சித்ரா, 6 நாட்கள் வரை வீட்டுக்கு வரவில்லை. செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால் அதிர்ச்சியுற்ற பெற்றோர், தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் சித்ராவைக் கண்டுபிடித்து, நேற்று தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
சென்னை அண்ணா நகரில் பிரபல முடி மாற்று அறுவை சிகிச்சை மையம் சீல் வைப்பு.. பின்னணி என்ன
விசாரணையில், டிக்டாக் பயிற்சியாளருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகத் தெரியவந்தது. சித்ரா, 'பெற்றோரிடம் செல்ல மாட்டேன், கள்ளக்காதலுடன் வாழ வேண்டும்' என போலீஸ் முன் தெரிவித்தார். இதை எதிர்த்து பெற்றோர், 'மகளை எங்களுடன் அனுப்புங்கள். அந்த பயிற்சியாளர் பல பெண்களை சீரழித்துள்ளார். பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக உள்ளது எனக் கூறி, போலீஸ் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவில் உண்மையில் நடந்தது இதுதான்.. சின்ன புத்தி இல்லை.. பட்டிமன்றம் ராஜா முழு விளக்கம்
இதனிடையே கணவனை பிரிந்து பல வருடமாக வாழ்ந்து வந்த சித்ரா கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று பிடிவாதமாக இருந்தாக கூறப்படுகிறது. அவருடன் சென்றால் வாழ்வேன்.. இல்லை என்றால் போக மாட்டேன் என்று பிடிவாதம் தொடர்ந்து பிடித்தாராம். சுமார் 1 மணி நேரம் நீடித்த இப்போராட்டத்தில், தொப்பூர் போலீசார் 'பெண்ணின் விருப்பப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கிறோம்' என கூறினார்களாம். அத்துடன் சித்ராவை - இரு ஆண் குழந்தைகளுடன் கள்ளக்காதலின் தரப்பினருடன் காரில் அனுப்பிவைத்தனர்.
நீதி கேட்டு வந்த குடும்பத்தினர், மகளின் முடிவால் ஆடிப்போனார்கள். போலீசார் சித்ராவை காதலனுடன் அனுப்பி வைத்ததை ஏற்க முடியாது என்று விரக்தியுடன் சென்றார்கள். #📢 பிப்ரவரி 11 முக்கிய தகவல் 🤗 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔


