ShareChat
click to see wallet page
search
🌹பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி 3 🌹 வீண் விரயங்கள் பழிச்சொற்கள் விலக.. 🚩பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும் கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய் விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக 🌹விளக்கம்: 🔹இந்தக் கலியுகத்தில், நண்பர்களும் உறவினர்களும் எங்களிடம் பொருளை அன்போடு கேட்டுப் பெறுகிறார்கள். திருப்பிக் கேட்கும் போதோ, அன்பான வார்த்தைகளைத் தவிர்த்து கடுஞ்சொற்களால் வசைபாடுகிறார்கள். 🔹தரிசித்த கணமே துன்பங்களை நீக்கி ஆனந்தம் அருளும் யானைமுகக் கணபதியே, கஷ்டங்கள் நிறைந்த இந்தத் தருணத்தில், திருக்கண்களைத் திறந்து தங்களின் அருள் பார்வையை எங்கள் மீது விழச்செய்ய வேண்டும்; எங்களுடைய துயரங்களுக்குத் தீர்வு காண, நல்ல வழியை அருளவேண்டும். 🔹எங்களது வாழ்வில் பொருள் நஷ்டம் எதுவும் ஏற்பட்டுவிடாமலும், கையை விட்டுச் சென்ற திரவியங்கள் மீண்டும் எங்களை வந்து அடையும்படியும் அருள் பாலிக்க வேண்டும். தோரண கணபதியே எங்கள் முன் ஒரு கணம் தோன்றி, வீண் விரயங்களும் வீண் பழிச் சொற்களும் வராதபடி எங்களை காப்பாற்றவேண்டும். 🌹விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி... 🌹02.04.2026...நேசமுடன் விஜயராகவன்.... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️சதுர்த்தி விரதம்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ஒமீகம்கணபதயேநம் விஜயராகவன் எத்தனை கஷ்டம் வந்தாலும் கவலைப்படாதே, ன்கூடவே விஜயராகனண் ருக்கிறேன் துணையாய் நான் ஒமீகம்கணபதயேநம் விஜயராகவன் எத்தனை கஷ்டம் வந்தாலும் கவலைப்படாதே, ன்கூடவே விஜயராகனண் ருக்கிறேன் துணையாய் நான் - ShareChat