#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் முகங்களும்... சிவபுராண உண்மைகளும்!
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிப் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்..."
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய இந்த வரிகளை நாம் தினமும் பக்தியோடு ஓதுகிறோம். ஆனால், இதன் ஆழமான பொருளைச் சிந்தித்ததுண்டா?
ஒவ்வொரு ஆன்மாவும் புல், புழு, மிருகம், பறவை எனப் பல பிறவிகளைக் கடந்துதான் மனித நிலையை அடைகிறது என்கிறது நம் சமயம். இறைநிலை என்பது மனித உருவத்தில் மட்டுமே அடங்கியது அல்ல; அது அண்ட சராசரத்தில் உள்ள அத்தனை உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.
யோகினியரின் விசித்திர முகங்கள் எதைக் குறிக்கின்றன?
பக்கத்தில் பதிவிடும் யோகினியரின் விலங்கு முகங்களைக் கண்டு சிலர் "விசித்திரமாக இருக்கிறது", "தெய்வ நிந்தனை" "ஆதாரமே இல்லையே", "நிர்வாகிகளுக்குப் புகார் அளிப்பேன்" என்று மிரட்டுவது போல விமர்சிக்கிறீர்கள். உண்மையில், இந்த உருவங்கள் மேற்சொன்ன சிவபுராணத் தத்துவத்தின் நேரடி வடிவங்கள்!
மிருக பறவை முக யோகினியர்: ஆன்மாக்கள் கடந்த வந்த பாதையையும், அனைத்து உயிர்களிலும் பொதிந்துள்ள தெய்விகத்தையும் நமக்கு நினைவூட்டுகிறார்கள்.
நரி முகமும், பூனை முகமும் உங்களுக்கு விசித்திரமாகத் தெரிகிறதா? சிவபுராணம் பாடும் 'பல்விருகமாகி' (பல மிருகங்களாகப் பிறந்து) என்ற தத்துவத்தின் நேரடி உருவங்கள் இவை.
ஒவ்வொரு விலங்கு முகமும் மனிதன் கடந்து வந்த பரிணாமத்தின் சாட்சி. உன்னதமான ஆன்மாக்கள் எந்த உருவிலும் வரலாம் என்பதை உணர மறுப்பவர்கள், சிவபுராணத்தின் பொருளை உணரவில்லை என்பதே அர்த்தம்!"
கடவுளுக்கு எல்லை வகுக்க நீங்கள் யார்?
வாழ்க்கையில் நரியின் தந்திரத்தையும், குரங்கின் சுறுசுறுப்பையும், புலியின் வேகத்தையும் கடைபிடிக்கும் நாம்... அதே உருவங்களை தெய்வமாகப் பார்க்க ஏன் தயங்குகிறோம்?
இறைவன் என்பவன் வெறும் மனித உருவம் மட்டுமல்ல; அவன் 'அதிபுல்லாகிப் பூடாகி' வந்த பரிணாமத்தின் உச்சம். ஒரு பறவையின் சிறகிலும், நரியின் நுட்பத்திலும், பாம்பின் வேகத்திலும் கடவுள் இருக்கிறார்.
"இயற்கையைத் தாண்டி கடவுள் எங்கே இருக்கிறார் என்று உங்களால் சொல்ல முடியுமா? அல்லது அவர் இத்தோடுதான் முடிந்து போகிறார் என்று எல்லை வகுக்க முடியுமா?"
யோகினியரின் விசித்திர முகங்கள் நம் அகங்காரத்தை உடைக்க வந்தவை. உருவத்தைக் கடந்து உள்ளிருக்கும் தத்துவத்தைப் பாருங்கள்!
யாவற்றையும் படைத்தவன்... யாவற்றிலும் இருப்பான்
"அணுவிலே அண்டம், அண்டத்திலே அணு" என்கின்றனர் சித்தர்களும் ஞானிகளும். ஒரு சின்ன எறும்பில் இருந்து யானை வரை அனைத்திலும் அந்தப் பரம்பொருள் இருக்கிறது. மனிதன் மட்டும் உயர்ந்தவன், மற்றவை தாழ்ந்தவை என்று பிரித்துப் பார்ப்பதே மிகப்பெரிய அறியாமை (Ego).
அதிகார மனப்பான்மை vs ஆன்மீகப் பார்வை
• அதிகாரப் பார்வை: "விலங்குதானே, பறவைதானே... இதை நாம் அடிமைப்படுத்தலாம், வதைக்கலாம் அல்லது அலட்சியப்படுத்தலாம்."
• ஆன்மீகப் பார்வை (யோகினியர் வழி): "இந்த விலங்கு பறவை முகத்திற்குப் பின்னால் ஒரு மகா சக்தி இருக்கிறது. இதன் மூலமும் இறைவன் நமக்கு ஒரு பாடத்தைச் சொல்கிறான்."
"இயற்கையை மதிக்கக் கற்றுக்கொள்; நீ எதைச் சாதாரண விலங்கு பறவை என்று நினைக்கிறாயோ, அதையும் நான் தெய்வமாக உயர்த்திப் பிடிக்கிறேன்."
பரிணாமத்தின் நன்றி மறந்த மனிதன்
சிவபுராணம் சொல்வது போல, நாம் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் புல்லாகவும், புழுவாகவும், மிருகமாகவும் இருந்தவர்கள்தான். அந்தப் பழைய 'வீட்டை' (உடலை) மதிக்கத் தெரியாதவன், தன் ஆன்மாவின் பயணத்தையே அவமதிக்கிறான் என்றுதான் அர்த்தம்.
"மிருகம் தானே என்று அலட்சியப்படுத்துபவர்களே...!"
"விலங்குதானே, பறவைதானே... அதை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதன் முகத்தை தெய்வத்திற்கு வைப்பது அசிங்கம்" என்று நினைப்பவர்களே... உங்கள் அறியாமை வியப்பளிக்கிறது!
காக்கைக்கும், நாய்க்கும் சோறிடும் போதோ, நரியின் தந்திரத்தைக் கையாளும் போதோ வராத 'அசிங்கம்', அதை யோகினி உருவமாகப் பார்க்கும் போது மட்டும் ஏன் வருகிறது?
நீங்கள் எதை 'வெறும் மிருகம்' என்று ஒதுக்குகிறீர்களோ, அதனுள்ளும் அதே 'பரம்பொருள்' தான் இயங்குகிறது. முனிவர்கள், யோகிகள், சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள்...... என அனைவரும் இயற்கையை இறைவனாகப் பார்த்தார்கள்.
உருவத்தைக் கண்டு முகம் சுளிப்பவர்கள், உண்மையில் இயற்கையை அவமதிக்கிறார்கள். இயற்கையை அவமதிப்பவன் இறைவனை உணரவே முடியாது!
இறைவன் எல்லைகளுக்கு உட்பட்டவன் அல்ல; அவன் எருமையிலும் இருப்பான், கழுகிலும் இருப்பான், நரியிலும் இருப்பான்!
"இந்த இயற்கையில் எதுவுமே விசித்திரம் இல்லை, அனைத்தும் இறைவனின் சித்திரம்!"
ஆன்மீகத்தின் ஆழத்தையும், பரந்து விரிந்த அதன் கலைகளையும் படிக்காமல், "ஆதாரமில்லை" என்று கூச்சலிடுவது உங்கள் அறியாமையையே காட்டுகிறது. தெரியாத ஒன்றைப் பொய் என்று சொல்வதற்கு முன், நம் கோயில்களைச் சுற்றியுள்ள சிலைகளையாவது ஒருமுறை பாருங்கள்.
இறைவனை வெறும் "அழகிய பொம்மையாக" மட்டும் பார்க்காமல், அனைத்து உயிர்களின் மூலமாகப் பார்க்கும் பக்குவமே உண்மையான ஆன்மீகம். நம் முன்னோர்கள் செதுக்கி வைத்த சிற்பங்களும், சித்தர்கள் காட்டிய வழியும் கற்பனை அல்ல; அவை ஒவ்வொன்றும் ஒரு அறிவியல் மற்றும் ஆன்மீகப் பாடம்.
புரியாதவர்கள் "அசிங்கம்" என்பார்கள்... புரிந்தவர்கள் அதனுள் இருக்கும் "அருளை"க் காண்பார்கள்!


