ShareChat
click to see wallet page
search
#azagaana vaalkkay thathuvam மேலே படத்தை உற்று பார்த்தேன், ஆனால் அவர்களில் *அரசியல்வாதியை*_ _*என்னால் அடையாளம் காண முடியவில்லை.* நான் இரண்டு முறை மீண்டும் மீண்டும் பார்த்தேன், ஆனால் அவர்களில் மிகவும்_ _*பணக்காரரை*_ _*என்னால் அடையாளம் காண முடியவில்லை.*_ _நான் படத்தை கண்ணுக்கு அருகில் வைத்து பெரிதுபடுத்திப் பார்த்தேன், ஆனாலும் அவர்களில்_ _*மிகவும் படித்த*_ _அல்லது_ _*செல்வாக்கு மிக்க மனிதரை*_ _*என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.*_ _அப்போது நான் எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்,_ "*_நிச்சயமாக,_ _வாழ்க்கை என்பது_ _நிரந்தரமில்லாது"._* _வெள்ளையாக இருந்தாலும் சரி,_ _கருப்பாக இருந்தாலும் சரி,_ _ஏழையாக இருந்தாலும் சரி,_ _பணக்காரராக இருந்தாலும் சரி,_ _உயரமாக இருந்தாலும் சரி,_ _குள்ளமாக இருந்தாலும் சரி,_ _அழகாக இருந்தாலும் சரி,_ _அசிங்கமாக இருந்தாலும் சரி,_ _படித்தவராக இருந்தாலும் சரி,_ _படிக்காதவராக இருந்தாலும் சரி,_ *_இயற்கையின் அழைப்பு தவிர்க்க முடியாதது. எனவே, பணிவாக இருங்கள்!_* _உங்கள் முதலீடுகள்,_ _வாழ்நாள்_ _சேமிப்புகள் மற்றும் சாதனைகள்,_ _பட்டங்கள் அல்லது கல்வித் தகுதிகளைப் பற்றிப்_ _பெருமையாகப் பேசிக்கொண்டு, "நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?", "நீ எனக்கு_ _சமமானவனா?", "நாம் ஒரே அந்தஸ்தில் இருக்கிறோமா?",_ _"உங்களுக்கு ஆட்களைத் தெரியுமா?", "உங்களுக்கு என் ஜாதி பற்றி தெரியுமா?", "உங்களுக்கு யாரைத் தெரியும்?" என்பது போன்ற கேள்விகளை சகா மனிதர்களிடம் கேட்கிறீர்கள்._ _*நீங்கள் வாழும் வாழ்க்கையே உறுதியற்றதாக இருக்கும்போது ஏன் பெருமை பேசுகிறீர்கள்?*_ _நீங்கள் யார் என்று மக்களுக்குத் தெரியுமா என்று கேட்கிறீர்கள், உண்மையில் எல்லோருமே மண்ணுக்கடியில் வெறும் தூசி, துகள்களே..._ _*மேலே உள்ள படத்தில் ஏழைகளையும் பணக்காரர்களையும் அல்லது பட்டதாரிகளையும் படிக்காதவர்களையும் உங்களால் வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், தயவுசெய்து பணிவாக இருக்க முயற்சி செய்யுங்கள், உங்கள் அகந்தையைக் குறைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.*_ _தற் பெருமையின் காரணமாக நீங்கள் புறக்கணித்த அந்த மனிதர்களை அரவணையுங்கள், நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கியவர்களை, குறைகள் இருந்தாலும் அவர்களை மன்னியுங்கள்._ _*மீண்டும் ஒருபோதும் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்த நபர்களுடன் சமாதானம் செய்து, மீண்டும் நட்பாக இணையுங்கள்.*_ _வாழ்க்கை கணிக்க முடியாதது!_ _*ஒரு நல்ல வாழ்க்கை வாழுங்கள், நீங்கள் இங்கு என்றென்றும் இருக்கப் போவதில்லை.*_ _இன்று நீங்கள் உயிருடன் இருந்தால்,_ _வாழ்க்கைக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்._
azagaana vaalkkay thathuvam - ShareChat