ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀 வரலாறுகள் பல படைத்த வரலாறு திரு சாண்டில்யன் என்கிற பாஷ்யம் அய்யங்கார்.. குமுதம் இதழில் வாராவாரம் தொடராக வெளிவந்த சாண்டில்யனின் ‘ராஜதிலகம்’ வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான நாவல். சாண்டில்யன் எழுத்தின் சிறப்பே, காட்சி நிகழ்விடத்தைப் பற்றிய வர்ணணை தான். வாசகனை அந்த சூழலுக்கு உள்ளேயே இழுத்துச் செல்லும் சக்தி மிகுந்த எழுத்து அவருடையது. பெரும்பாலும் இவருடைய கதைகளுக்கு ஓவியர் லதா அவர்கள்தான் அதிகமாக ஓவியங்களை வரைந்து இருப்பார்.. காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் இளவரசனாக இருந்து சாளுக்கியர்களை வெற்றி கொண்ட வரலாற்றை விவரிக்கிற கதை அது. பின்னாளில் ராஜசிம்மன் ஆட்சிக்கு வந்ததும் சீனம் வரை சென்று பல வெளிநாடுகளிலும் வெற்றிக் கொடி நாட்டினான். ”எனக்கு ஆயுளும் சமயமும் வாய்த்தால் பின்னொரு சமயம் அதை எழுதுகிறேன்.” என்று சாண்டில்யன் அத்தொடரை நிறைவு செய்கையில் குறிப்பிட்டிருந்தார. பல சமூக நாவல்களையும் எழுதியுள்ள சாண்டில்யன் என்கிற பாஷ்யம் அய்யங்கார் வரலாற்று புதினங்களில் முத்திரை படைத்தார்.. யவனராணி கடல்புறா ஜலதீபம் கன்னிமாடம் மன்னன் மகள் உட்பட ஏறத்தாழ 48 வரலாற்று நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀 *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*