*துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையின் வரலாறு, நவநாள் செபம் மற்றும் புகழ்மாலை.*
🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨
*துன்ப முடிச்சிகளை அவிழ்க்கும் அன்னையிடம் ஜெபம்*
💖⚜️💖⚜️💖⚜️💖⚜️💖⚜️💖⚜️
கன்னிமரியே! அழகு அன்புத்தாயே! மன்றாடும் குழந்தையை/ ஒருபோதும் புறக்கணியாத அன்னையே! உமது திருஇதயத்திலிருந்து/ பெருக்கெடுத்து வழியும் அன்பினாலும்/ முடிவில்லாத இரக்கத்தினாலும்/ குழந்தைகள் எமக்காய் அயராது உழைக்கும்/ திருக்கரங்கள் கொண்ட திருவே/ உமது கருணைப் பார்வையை எம்மீது திருப்பி/ எனது வாழ்வைத் திணறவைக்கும் முடிச்சுக்களைக் கண்ணோக்கியருளும/ எனது துன்பம்/ வலி/ செயலிழக்கச் செய்யும் துன்பமுடிச்சுக்கள்/ அனைத்தையும் நீர் அறிவீர் / எங்கள் வாழ்க்கை நூலில் விழும் முடிச்சுக்களை அவிழ்க்க/ கடவுளிடமிருந்து பொறுப்பு பெற்றதாயே/ உமது திருக்கரங்களில் எனது வாழ்வை ஒப்படைக்கிறேன்/ உமது இரக்கப்பெருக்கை /ஒருபோதும் ஒருவரும் நிறுத்த முடியாதென்றும்/ உம்மால் அவிழ்க்க முடியாத முடிச்சு/ உலகில் ஒன்றுமில்லை என்றும் நம்புகிறேன்/ வல்லமையின் தாயே/ ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசும் உமது பலத்தினால்/ என்னை வாட்டி வதைக்கும் இச்சிக்கலான துன்பமுடிச்சுகளை/
_*(அமைதியாக ஒரு நிமிடம் துன்ப முடிச்சுக்களை மனக்கண்முன் கொண்டுவரவும்)*_
உமது தூய திருக்கரங்களில் பெற்றுக்கொள்ளும்/ தந்தையாம் கடவுளின் உன்னத மகிமை வெளிப்படும்படி/ எனது துன்பமுடிச்சுக்களை/ இப்பொழுதும்/ என்றென்றைக்கும் அவிழ்த்துப்போடும்/ எனக்கு ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்டவர் நீர் / எனது பலவீனத்தில் என் வலிமை நீர் / உம் திருமகன் இயேசுவிடமிருந்து/ என்னைப்பிரிக்கும் சக்திகளை அழிப்பவரும் நீரே அம்மா எனக்குப் பதில் தாரும்/ பாதுகாத்தருளும்/ வழிநடத்தும்/ காப்பாற்றும்/ ஏனெனில் நீரே என் உறுதியான அடைக்கலம்/ உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன்.
*ஆமென்.*
எங்கள் துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் பரிசுத்த அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
*ஆமென்🙏🏻*
🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨
*துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையிடம் நவநாள் செபம்*
🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨
*முன்னுரை:*
ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் 1182ல் Germany யில் உள்ள Augsburg நகரின் மத்தியில் 1182ல் கட்டப்பட்ட St. Peter am Perlach தேவாலயத்தில் தனிப்பட்ட மையச் சிறப்புத் தன்மையுடன் இவ்வன்னையின் படம் இருக்கிறது.
*இதில் சித்தரிக்கப்படும் காட்சியானது:*
நிலவு வளையத்தின் மேல் கன்னிமரியாள் நிற்பது போலவும், அவரது காலின் கீழ் பாம்பின் தலை மிதிக்கப்படுவதாகவும் அமைந்திருக்கின்றது.
பாம்பு வடிவில் இருக்கும் நெருக்கமான பல முடிச்சுக்களை உடைய கயிறு ஒன்றை அன்னைமரியாள் தனது கையில் வைத்திருக்கின்றார். வானதூதர் ஒருவர் சிக்கலான பல முடிச்சுக்களை உடைய கயிற்றை அன்னை மரியாளிடம் ஒப்படைக்க, அதை மரியாள் தனது பொறுமை, முழுமையான அர்ப்பணிப்பின் மூலம் அவிழ்த்து சிக்கல்கள் இல்லாத மென்மையான கயிறாக மற்றொரு வானதூதரிடம் கையளிக்கின்றார். முடிச்சுக்களின் மாதா அல்லது முடிச்சுக்களை அவிழ்ப்பவர் என்று ஓவியத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இப்படம் 1700ல் உருவாக்கப்பட்டது. வசதி படைத்த பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ieronymus Ambrosius Langenmantel இன் வேண்டுகோளுக்கிணங்க, St. Peter am Perlach தேவாலயத்தில் ஸ்தாபகம் செய்யப்பட்டுள்ள அன்னை மரியாளின் படமானது Joh ann Georg Sch midtner என்னும் பெயருடைய ஓவியரால் வரையப்பட்டது. பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த Langznmantel இன் தம்பதிகளுக்கிடையேயான சொந்தக் குடும்பப் பிரச்சனைகளை, மரியன்னை தீர்த்து வைத்தார். இந்த நம்பிக்கையின் காரணமாக, மரியன்னையின் படத்தை வரைய இம்மனிதர் பண உதவியைச் செய்தார்.
படத்தின் கீழே ஒரு வானதூதர், மனிதன் ஒருவரை மரியாளிடம் அழைத்துச் செல்வதைக் காண்கின்றோம் . நமது வாழ்க்கையில் உள்ள குழப்பங்கள், சிக்கல்கள் அனைத்தையும் நீக்கவும், நாங்கள் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கும், இறைவனிடம் பரிந்து பேசுவதற்கு அன்னை மரியாளின் உதவியை நாடும்படியும் அவ்வானதூதர் நம்மை அழைத்துச் செல்கின்றார்.
இப்படத்தில் ஒரு வலுவான ஈர்ப்பும், அருட்சியும் உள்ளது. இங்கு கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களும், பிறமதத்தைச் சேர்ந்த அனைத்து வயதுப் பிரிவினரும், மற்றும் அனைத்து சமூக அமைப்பினரும் தினமும் வந்து தங்கள் கவலைகளை முறையிடுகிறார்கள். 1985 இல் இத்தேவாலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் வருகை தந்ததின் பின் இதன் பக்தி வழிபாடு, தென் அமெரிக்காவில் வெகுவேகமாகப் பரவி உள்ளது. இத்தேவாலயத்திலுள்ள மக்களின் வேண்டுதல்களை பிராத்தனை செய்யும்படி, குறிப்பிடும் பிராத்தனைப் புத்தகத்தில் இருக்கும் குறிப்புகளின்படி, அனைத்துக் கண்டங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் பக்தர்கள், வழிபாட்டாளர்கள் துன்பக்கட்டுக்களை அவிழ்க்கும் அன்னை மரியாவை நோக்கி வருவதைக் காட்டுகின்றது. மீண்டும் மீண்டும் இவ்வன்னையின் வழிகாட்டுதலும், அவர் முன் பிராத்தனை செய்யும் ஆசையும் சமீபத்தில் ஏராளமாக வெளிப்பட்டுள்ளது.
ஆகவே இதை நிறைவேற்றும் விதமாக துன்பக்கட்டுகளை அவிழ்க்கும் அன்னையின் நவநாள் செபம், இதே தேவாலயத்தின் பொறுப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து சமூகங்களும் இவ்வன்னையின் நவநாள் செபத்தை செபிப்பதன் மூலம், தங்கள் இறைநம்பிக்கையை அனைவரும் மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். அத்துடன் அன்னைமரியாளின் பரிந்துரையையும் நிறைவாகப் பெறமுடியும்.
*🌹செபம்🌹:*
பரிசுத்த கன்னிமரித்தாயே! நீர் கடவுளின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து திறந்த மனதுடன் அதை ஏற்றுக் கொண்டீர். உமது வாழ்க்கைப் பாதை கஷ்டங்கள், பிரச்சனைகள், சோதனைகள் நிறைந்ததாய் இருந்தாலும், இறைவனில் நம்பிக்கை வைத்து புத்துணர்வுடன் இருந்தீர். ஆகவே துன்பமுடிச்சுக்களை அவிழ்க்கும் தாயே! எல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்காக பொறுமையுடனும், மகிழ்வுடனும் தங்களைத் தயார்படுத்தவும், பிள்ளைகளினதும் இளைஞர்களினதும் எதிர்கால வாழ்வு நல்ல முறையில் அமையவும், எங்கள் குடும்பங்களின் சகல தேவைகளும் நிறைவேறவும் வேண்டும் என்று தாயே உம்மை மன்றாடுகிறோம்.
*(சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்.)*
அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
*ஆமென்.🙏🏻*
🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨
*துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையின் மன்றாட்டு மாலை*
🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨
ஆண்டவரே இரக்கமாயிரும்- 2
கிறிஸ்துவே இரக்கமாயிரும்-2
ஆண்டவரே இரக்கமாயிரும்-2
உலகத்தை படைத்த தந்தையே
இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட மகனே இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை நல்வழிபடுத்தும்
தூய ஆவியே இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
என்றும் ஒன்றித்து
வாழும் மூவொரு இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
இறைவனால் தோ்ந்து கொள்ளப்பட்ட எம்
துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையே
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*பெண்களுள் பேறுபெற்ற*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*கடவுளின் தாயே*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*விண்ணக அரசியே*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*அழகோவியமே*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தூய ஆவியைப் புறா வடிவில் சிரமதில் பெற்ற*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*பன்னிரு விண்மீன்களை முடியென கொண்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தூய ஆவியைப் புறா வடிவில் சிரமதில் பெற்ற*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*பன்னிரு விண்மீன்களை முடியென கொண்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தூய்மையும்*
*கனிவும் கொண்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*சிளீத்த* *முகத்தோடு*
*பொலிவோடு இருக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*நிலவின் மேல் வீற்றிருக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*அலகையென்னும்*
*பாம்பினை* *நசுக்கிய*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தீமையை வென்ற*
*புதிய ஏவாளே*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*வானதூதா்கள் புடை சூழ வீற்றிருக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*எலிசபெத்துக்கு உதவிய*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*காணவூாின்* *திருமண வீட்டாாின்*
*துயா்துடைத்த*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*அவா்சொல்வதெல்லாம்செய்யுங்கள*்
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*திருக்குடும்பத்தின்முகவொளியே*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*இயேசுவின் முதல் சீடரான*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*திருச்சபையின் துணை இரட்சகியான*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*திருச்சபையின்*
*தாயே*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*விடுதலை கீதம்*
*பாடிய*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*ஆகட்டும் என்று சொன்ன*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தாழ்ந்தோரை* *உயா்த்தசொன்ன*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*பசித்தோரை நலன்களால் நிரப்பச்சொன்ன*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*இறைவனிடம்*
*இடைவிடாமல்*
*பாிந்து பேசும்*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*திருமண வரம்தரும்*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*குழந்தை பாக்கியம் தரும்*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தாம்பத்திய வாழ்வின் குறை நீக்கும்*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*திருமண விவாகரத்தை முறியடிக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*குடும்ப உறவை நிறைவாக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*வியாபாரம்,தொழிலில்வரும் தடைகளைத் தகா்க்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*கண்ணீரோடு வருவோாின்* *துயா்*
*துடைக்கும்*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*மனபாரத்தோடு*
*வருவோா்க்கு* *மகிழ்வினை தரும்*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*உடல்* *நோய்களைத்*
*தீா்க்கும்*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*பில்லி சூனியம்,மந்திர*
*கட்டுகளை உடைக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*உல்வ்காங் சோஃபி*
*தம்பதியரை இணைத்த*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*தந்தை எரனிமாஸ்*
*என்பவரால் உருவாக்கப்பட்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*யோகன் ஸ்மித்னாா்* *என்பவாரால் தீட்டப்பட்ட ஒவியமே*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*பவோியப் புனித பேதுருஆலயத்தில்வீற்றிருக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*போா்களினாலும்,விபத்தினாலும் அழியாத ஒவியமான*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*பல்வேறு சமயத்தவா்க்கும்*
*அடைக்கலமான*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*அலகு அன்பு தாயே*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*மன்றாடுவோ ரைப்*
*புறக்கணியாத*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*எமக்கு அயராது உழைக்கும் திருக்கரங்கள் கொண்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*கருணைப் பாா்வையை எம்மீது திருப்பும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*பலவீனத்தில் வலிமையான*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*துன்ப முடிச்சுகள் அனைத்தும் அறிந்த*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*இந்திய மண்ணில்*
*முதன் முதலாய் தாழம்பூாில் ஆலயம் கொண்ட*:
எந்நேரமும் எங்களுக்காக வேண்டாக் கொள்ளும்:
எங்களுக்காக எப்போதும் காத்திருக்கும்:
எம்மோடு வாழ்ந்து வரும்:
*🌹மாியே வாழ்க- 3🌹*
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்


