ShareChat
click to see wallet page
search
உ.பி.யில் வீட்டில் தொழுகை நடத்தியவர்கள் மீது வழக்கு: மாவட்ட ஆட்சியர், எஸ்எஸ்பி பதில் அளிக்க நோட்டீஸ் புதுடெல்லி: உத்​தரபிரதேசம் பரேலி​யின் முகமதுகஞ்ச் கிராமத்​தில் மசூதி இல்​லாத நிலை​யில் ரேஷ்மா கான் என்​பவரின் வீட்​டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி கூட்​டாக தொழுகை நடத்​தப்​பட்​டது. இதுகுறித்து ராஷ்டிரிய இந்து தளம், பஜ்ரங் தளம் உள்​ளிட்ட இந்து அமைப்​பு​கள் பிஷாரத் கஞ்ச் காவல் நிலை​யத்​தில் புகார் செய்​தன. இதையடுத்​து, தொழுகை நிறுத்​தப்​பட்​டதுடன் 12 பேர் மீது பொது அமை​தியை குலைத்​த​தாக வழக்​குப் பதி​வானது. இந்​நிலை​யில் வரும் பிப்​ர​வரி 19-ல் ரம்​ஜான் மாத நோன்பு துவங்​கு​கிறது. இந்த நாட்​களில் தனது வீட்​டில் கூட்​டாக தொழுகை நடத்த அக்​கி​ராமத்​தைச் சேர்ந்த தாரீக் கான் என்​பவர் அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​தில் மனு அளித்​திருந்​தார். இந்த மனுவை நீதிப​தி​கள் அத்​துல் ஸ்ரீதரன், எஸ்​.ஏ.சித்​தார்த் நந்​தன் ஆகியோர் விசா​ரித்​தனர். அப்​போது தாரீக் கானிடம் இது​போல் ஒரு மனு அளிக்க வேண்​டிய அவசி​யம் குறித்து கேள்வி எழுப்​பினர். இதற்கு தாரீக் கான் தனது கிராமத்​தில் 12 பேர் மீது பதி​வான வழக்கை சுட்​டிக்​காட்​டி​னார். இதைக் கேட்டு வியப்​படைந்த நீதிப​தி​கள், தனி​யார் வளாகத்​தில் பிரார்த்​தனை செய்​வதற்கு அரசின் அனு​மதி தேவை​யில்லை என்ற முந்​தைய ஒரு தீர்ப்பை நினை​வு​கூர்ந்​தனர். ஒரு கிறிஸ்தவ குழு தொடர்​புடைய வழக்​கில் இத்​தீர்ப்பு கடந்த ஜனவரி 27-ல் வெளி​யானது. எனவே, இந்த விதி முஸ்​லிம்​களின் தொழுகைக்​கும் பொருந்​தும் என்று நீதிப​தி​கள் கூறினர். மேலும் பரேலி கிராமத்​தில் பதி​வான வழக்கு நீதி​மன்ற அவம​திப்​புக்கு உரியது என முடிவு செய்​தனர். இதையடுத்து பரேலி மாவட்ட ஆட்​சி​யர் அவி​னாஷ் சிங், எஸ்​எஸ்பி அனு​ராக் ஆர்யா ஆகியோ​ருக்கு நோட்​டீஸ் அனுப்பி உள்​ளனர். இதில், ‘‘12 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​ததற்​காக உங்​கள் மீது ஏன் நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரக் கூடாது?’’ என கேள்வி எழுப்​பி​யுள்​ளனர். இவ்​வழக்கை மார்ச்​ 11-ம்​ தேதிக்​கு ஒத்​தி வைத்​துள்​ளனர்​. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat