ஈரானின் சபஹார் துறைமுகத்தை வாங்கிட்டோம். பாகிஸ்தானுக்கு மரண அடின்னு கூவிய மோ(டுமுட்)டி சங்கீ கூட்டம்.
ஈரான் வெளியுறவு அமைச்சர்
இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி இந்த விவகாரம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது, தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அப்பாஸ் அராச்சி தெரிவித்தார்.
இந்த துறைமுகம் இந்தியாவுக்கு மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடனான இணைப்பை மாற்றியமைக்கக்கூடிய "தங்க வாசல்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தங்க வாசல்
இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாகப் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். சபஹார் துறைமுகத்திற்கு பட்ஜெட் ஒதுக்காதது குறித்துப் பேசிய அவர், "இது ஏமாற்றம் தான். ஈரானுக்கு மட்டுமில்லை.. இந்தியாவுக்கும் கூட இது ஏமாற்றத்தையே தரும் என்று நான் நினைக்கிறேன்.
பிரதமர் மோடி ஒருமுறை முன்பு குறிப்பிட்டது போல், சபஹார் துறைமுகம் என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியை மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பாவுடனும் இணைக்கும் ஒரு முக்கியமான தங்க வாசல்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம். இது முழுமையாக மேம்படுத்தப்பட்டால் ஈரானின் வழியாக மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பா நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்கும்.
அந்த நாடுகளை இந்தியாவுடன் இணைப்பதில் இது மிக முக்கிய பங்காற்றும். இதுவே சிறந்த போக்குவரத்து வழித்தடமாக அமையும் என நான் நினைக்கிறேன்.
ஒரு நாள் இந்த துறைமுகம் முழுமையாக மேம்படுத்தப்படுவதை நாம் காணலாம் என நம்புகிறேன்" என்றார்.
இந்தியாவுக்கு நஷ்டம்
ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சபஹார் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வந்தது. இந்தத் துறைமுகத்தால் பாகிஸ்தானைத் தொட தேவையில்லாமல் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கு நேரடி இந்தியாவால் வர்த்தகம் செய்ய முடியும்.
தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து வழித்தடத்தை இது உருவாக்கும். இது இந்தியாவின் பிராந்திய இணைப்பை மேம்படுத்துகிறது.
மேலும், இந்தத் துறைமுகம் நிலப்பரப்பில் சூழப்பட்ட மத்திய ஆசியச் சந்தைகளுக்கு வர்த்தகத்தை அதிகரிக்கிறது.
பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் சீனாவின் செல்வாக்குக்கு அதிகரித்து வரும் சூழலில், அதற்குப் பதிலடியாக இந்தியாவுக்கு சபஹார் துறைமுகம் இருந்தது.
இந்தத் திட்டம் பிராந்தியத்தில் இந்தியாவின் புவிசார் அரசியல் இருப்பை வலுப்படுத்துகிறது.
சபஹார் திட்டம்
சபஹார் துறைமுகத்தை மேம்படுத்த, இந்தியா 2024இல் ஒப்பந்தம் போட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் சபஹார் துறைமுக மேம்பாட்டிற்குக் கணிசமான நிதி ஒதுக்கப்படும்.
இருப்பினும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இப்போது நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது இதுவே முதல்முறை. கடந்த நிதியாண்டுகளில், இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கி வந்தது.!
பொருளாதாரத் தடை
கடந்த செப்டம்பரில், அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இருப்பினும், சபஹார் திட்டத்தில் இந்தியா தொடர்ந்து ஈடுபடுவதற்கு ஆறு மாதக் கால விலக்கை அமெரிக்கா வழங்கியிருந்தது.
அந்த விலக்கு வரும் ஏப்ரல் 26ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு மேல் இந்தியா மேம்பாடு நடவடிக்கை எடுத்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரலாம்.
இதன் காரணமாகவே இந்தியாவும் நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியுள்ளது.
முன்னதாக சபஹார் தொடர்பான விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதற்கு விலக்கு பெறும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராந்தீர் ஜெய்ச்வால் தெரிவித்தார். #👨மோடி அரசாங்கம்


