_*ஏழை நெசவாளி ஒருவன்.*_ _ஊருக்கு வந்த சாமியாரிடம்,_
_'சுலபமான உபதேசம் செய்யுங்க #or azagaana kathay. ள்" என்று கேட்டான்._
_*சாமியார், புன்னகை புரிந்தார்.*_
_"அப்பா திருநீறு பூசிய திருமுகத்தைப் பார்த்த பிறகு தான் ஆகாரம் சாப்பிடுவது என்ற ஒரு கொள்கையை வைத்துக் கொள்" என்று அருளினார்._
_*"அப்படியே*_ _*என்றான் ஏழை*_
_*அவனுடைய பக்கத்து வீடு ஒரு குயவனாருடையது. அந்தக் குயவனார், பரம சிவபக்தர்.*_ _*நெற்றியில் எப்போதும் வெண்ணீறு தரித்துக் கொண்டிருப்பார்அடிக்கடி அவனுடைய வீட்டுப் பக்கம் வருவார்.*_
_திருநீறு பூசிய அவருடைய முகத்தைப் பார்த்த பின்னரே,_
_கூழானாலும் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டான் ஏழை._
_*ஒரு நாள், குயவனார் அவன் வீட்டுப்பக்கம் வரவில்லை. கடும்பசியால் துடித்தான், ஏழை.*_
_''போய் அவர் வீட்டில்தான் பார்த்துவிட்டு வாருங்களேன்" என்றாள் அவன் மனைவி._
_*''சரி" என்று அடுத்த வீட்டுக்கு ஓடினான். அந்த வேளை குயவனார் களிமண் எடுக்கும் பொருட்டு ஏரிக்குச் சென்றிருந்தார். ஒரே ஓட்டமாக ஏரிக் கரைக்கே ஓடினான்.*_
_அங்கே ஒரு பெரியபள்ளம். அதில் குயவனார் மண் வெட்டி எடுக்கும்போது இரண்டு தங்கக் குடங்கள் இருந்தன. யாராவது பார்த்து விட்டால் துன்பமாயிற்றே என்று, மேலே நிமிர்ந்து பார்த்தார்._
_*அந்த நேரத்தில் ஏழை,*_
_*'பார்த்து விட்டேன்" என்று கூறிவிட்டுப் பிடித்தான் ஓட்டம்.*_ _*அவன் பார்த்தது, அவரது விபூதியணிந்த முகத்தைத்தான்.*_
_குயவனார் பதைத்துப்_ _போனார்._
_'இவன் யாரிடமாவது சொல்லி விட்டால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகுமே' என்று அஞ்சினார்._
_*பதட்டத்தோடு அவனை அழைத்த குயவர், ''நீயும் ஏழை, நானும் ஏழை. ஆளுக்கு ஒரு குடம் எடுத்துக் கொள்வோம். இதை வெளிப்படுத்த வேண்டாம்.*_ _*இந்தா, ஒருகுடம்,*_
_*நீ கொண்டு போ"*_ _*என்று கொடுத்து விட்டார்.*_
_'திருநீறு பூசிய முகத்தைப் பார்த்த ஒரு நன்மையின் காரணமாகவே இந்த நலம் எய்தியதே. நாமே திருநீறு பூசி வழிபாடு செய்தால் நலன்கள் எய்துமே'_ _என நினைத்த_ _நெசவாளி, அன்று முதல்,_ _ஆசார_ _அநுஷ்டானங்களை_ _மேற்கொண்டு திருநீறு பூசித்_
_தெய்வ மணம் கமழச்சிறந்து விளங்கினான்._
_*அறியாமல் இறை சிந்தனை*_ _*கொண்டாலும்*_
_*அளப்பரிய நலன் உண்டு.*_


