ShareChat
click to see wallet page
search
தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து... 40க்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏவுகணையால கொலை செய்து போரை தொடங்கியிருக்கிறது இசுரேலும் அமெரிக்காவும். இந்த போர் தொடங்குவதற்கு முன்பாக இசுரேல் பிரதமர் சந்தித்த வெளிநாட்டு பிரமுகர் மோடி. போரின் தொடக்கம் தெரிந்தே இசுரேலுக்கான ஆதரவை மோடி வழங்கியுள்ளார். அமெரிக்காவின் பெட்ரோலிய நெருக்கடியில் இந்தியா வீழ்ந்துவிடாமல் காக்கும் வகையில் கச்சா எண்ணையை இந்தியாவிற்கு கொடுத்து கைகொடுத்த ஈரானுக்கு துரோகம் செய்ய வெட்கப்படவில்லை பாஜக-மோடி அரசு. ஈரான் மீதான் போர் என்பது 45 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் நீண்ட நாள் விருப்பம். மத்திய ஆசியாவிற்குள்ளாக கால்பதித்து, ஆசியாவை காலனியாக்க நுழைவாயிலாக ஈரானை அது கருதுகிறது. ஈரான் நிலப்பரப்பு அமெரிக்காவின் கைகளுக்குச் சென்றால் ஒட்டுமொத்த மேற்கு, மத்திய ஆசொயாவையும், தெற்காசியாவையும் கட்டுப்படுத்திவிட முடியுமெனில் கச்சா எண்ணை முதல் கனிமம் வரையில் கொள்ளையடிக்கலாம். சந்தைகளை கட்டுப்படுத்தலாம். ரசியா, சீனா முதலாக இந்தியா வரையில் அனைத்தையும் கைகளுக்குள்ளாக ஆங்கிலப்பேரரசு போல கட்டுபப்டுத்திவிடுவார்கள். இத்தகய போருக்கு ஏதுவாக பல நகர்வுகளை அமெரிக்கா கடந்த 30 ஆண்டுகளில், சோவியத் உடைவிற்கு பின்பு செய்தது. ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான போரில் கப்பற்படை தளத்தின் போதாமையை உணர்ந்த சமயத்தில் ஈழத்தின் திருகோணமலை அவர்களுக்கு தேவையாய் அமைந்தது. இதன்பொருட்டு சிங்களத்தினை தனது ஏவல்நாயாக வளர்த்து புலிகளை அழித்து திருகோணமலை மீதான ஒப்பந்தங்களை போட்டார்கள். அமெரிக்காவுடனான ராணுவ உறவை தவிர்த்த இந்தியா, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நிலைப்பாட்டை மாற்றியது. திருகொக்ணமலையை விட்டுத்தர முடிவெடுத்தது. இதனால் இலங்கை, இந்தியா, அமெரிக்காவின் பொது எதிரியாக புலிகள் அறியப்பட்டனர். மூவரும் சேர்ந்து ஈழத்தை அழித்தார்கள். மீண்டுமொரு போராட்ட அமைப்பு எழாத வண்ணம், சாமானிய மக்களையும் கொன்றழித்தார்கள். ஈரான் மீதான போர் தேவைக்காக ஈழம் அழிக்கப்படும் வகையில் அமெரிக்கா தாக்கும் என மேதகு பிரபாகரன், ஈழ ஆய்வாளர் தராகி சிவராம் ஆகியோர் எச்சரித்தவற்றை நாம் மறக்க இயலாது. இதை சொன்னதற்காகவே தராகி சிவராம் கடத்தி செல்லப்பட்டு படுகொ+லை செய்யபப்ட்டார். இப்படியான அறிவுப்பூர்வமான மக்கள் சார்பு ஆய்வாளர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடையாது. ஆமைக்கறி கதை சொல்லியிடம் சிக்கிய போலி-தமிழ்த்தேசியம், இந்த புவிசார் அரசியலை மக்களிடம் சேர்க்காமல் தடுத்தது. அனைத்தும் கைவசமான பின்னர் மேற்காசியாவில் லெபனான், சிரியா, யேமன் என அனைத்தையும் தாக்கி பலவீனபப்டுத்தினார்கள். ஈரான் தன்மீதான போரை தவிர்க்க உருவாக்கிய போராளிக்குழுக்களாக இருந்த ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுத்தீஸ் ஆகியோரை பலவீனப்படுத்தியது இசுரேல்-அமெரிக்கா. பின்னர் ஈரானின் மீதான வான் தாக்குதலுக்கு ஏதுவாக ஈரான் அருகே இருந்த சிரியாவை கைப்பற்றினார்கள். தற்போது முழுமையான தயாரிப்புடன் தாக்குதலை தொடுக்க அணியமாகிறார்கள். இந்நிலையில், அமெரிக்கா-இசுரேலுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக சீனா-ரசியா இயங்கால் இருக்க இயலாது. ஏனெனில் ஈரான் வீழ்ந்தால் சீனா-ரசியா மீது நெருக்கடி மத்திய ஆசியாவில் உருவாகும். ஈரானுக்கு வடக்கே அமெரிக்காவிற்கான தளங்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்நிலையில் சவுதி, பாகிஸ்தான், துருக்கி கூட்டமைப்பு சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் எடுப்பார்கள். ஆனால் என்னிலையிலும் இந்தியா ஆதரவாக இயங்கவோ, இசுரேலுக்கு வெளிப்படையான ஆதரவு நிலையோ எடுக்க மாட்டார்கள். ஆக ஆசியாவில் பெரும்பாலான நாடுகள் தம்மைப்பாதுகாத்துக்கொள்ளும் நிலையில் இயங்குவார்கள். போரில் நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுக்காமல் பின்னரங்கில் இயங்குவார்கள். ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவின், அரபு நாடுகளில் இருக்கும் இராணுவதளங்கள் மீது தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் மீதான இந்தியாவின் சிந்தூர் தாக்குதலில் சீனா ராணுவம் பாகிஸ்தானுக்கு துணையாக இயங்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலின் போது வாய்மூடி மெளனியாக மோடி மாறியதை இந்தியாவின் ராணுவதளபதி புத்தகமாகவே எழுதி விட்டார். இவ்வாறான சூழலில் வலியச் சென்று இசுரேலுக்கு ஆதரவளித்துள்ளார் மோடி. இதன் மூலம் பாகிஸ்தான், ஈரான், சீனா ஆகிய நாடுகளுக்கு எதிரியாக தம்மை நிறுத்தியுள்ளார் மோடி. போர்ச்சூழலில் தீவிரமடைந்து, போர் விரிவடையுமென்றால் தெற்காசியாவில் பதட்டம் உருவாகும். இந்தியப்பெருங்கடல் போரின் மையமாக மாறும் பொழுது, இந்தியாவின் மோடி அரசு தென்னிந்தியாவை இந்த போர் சூழலுக்குள் கொண்டு சென்று நிறுத்தும். சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் அமெரிக்க கடற்படை ராணுவ பயன்பாட்டிற்கு வரும் ஒபப்ந்தத்தின் அடிப்படையில் இயங்க ஆரம்பித்தால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் இணைத்தே தமிழர்கள் யோசிக்க வேண்டும். மே17 இயக்கம் கடந்த 17 ஆண்டுகளாக இந்தவகையான புவிசார் அரசியல் குறித்து தீவிரமாக இயங்கியும், பேசியும், புத்தகங்கள்- கட்டுரைகளை வெளியிட்டும் வருகிறது. இவை பிய கட்சிகளால் கவனமெடுக்கப்படவும் இல்லை. மே17 இயக்கம் முன்வைத்த விவாதங்கள் விரிவடையும் வகையில் சிந்தனையாளர்கள் உரையாடலை உருவாக்கவும் இல்லை எனும் கவலை எமக்குண்டு. ஈரான் தாக்கப்படும் இச்சமயத்தில், தமிழர்கள் புவிசார் அரசியலாகவும், அமெரிக்க-இசுரேல் எதிர்ப்பாகவும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. மே17 இயக்கம் எக்காலத்திலும் தனது ஆய்வை கைவிடாது. எமது இதழான 'குரல்' இதழில் இதுகுறித்து நீண்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளோம். தொடர்ந்து செயல்படுவோம். தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் பிப்ரவரி 28, 2026 #📺அரசியல் 360🔴 #geopolitics #🚨கற்றது அரசியல் ✌️ #தோழர் திருமுருகன் காந்தி #✍️மே17 இயக்கக் குரல்
📺அரசியல் 360🔴 - ShareChat