ShareChat
click to see wallet page
search
சுந்தரமூர்த்தி நாயனரால் பாடல் பெற்ற பெருமை கொண்ட தலம் கடலூர் மாவட்டம் கீர்த்தனகிரியில் அமைந்துள்ள அருள்மிகு சிவகொழுந்தீஸ்வரர் திருக்கோயில் இந்த ஆலயத்தில் மட்டுமே காணக்கூடிய மிக அற்புதமான மற்றும் அபூர்வமான சிற்பங்களை காணலாம் இக்கோயிலின் மிக முக்கியமான சிறப்பம்சம் இங்குள்ள நடராஜர் சன்னதியாகும் பொதுவாக நடராஜர் தனித்து ஆடுவது போன்ற சிலைகளையே பார்த்திருப்போம் ஆனால் இங்கே ஆடவல்லான் ஆனந்த தாண்டவம் ஆட இவருக்கு கீழ் மகாவிஷ்ணு தனது பாஞ்சஜன்ய சங்கினை முழங்குகிறார் அருகிலேயே நான்முகன் பிரம்மா தனது கரங்களால் மத்தளம் வாசிக்கிறார் மும்மூர்த்திகளும் ஒன்றிணைந்து நிகழ்த்தும் இந்த தெய்வீக இசை நடனக் காட்சியை காண்பது பெரும் பாக்கியம் நடனம் பயிலும் கலைஞர்கள் கலைகளில் சிறந்து விளங்க இங்கு வந்து விசேஷ பூஜை செய்கின்றனர் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 20 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சூரிய பகவான் தனது ஒளிர் கதிர்களால் சிவ கொழுந்தீஸ்வரரை தழுவி சூரிய பூஜை செய்யும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது பழங்காலத்தில் இப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது அப்போது எம்பெருமான் ஒரு முதியவர் வடிவில் வந்து நிலத்தை உழுது நீர் இறைத்து மக்களின் பசியை போக்கியதாக தல வரலாறு கூறுகிறது இதனால் விவசாயம் செய்வும் விளைச்சல் பெருகவும் விவசாயிகள் இத்தல இறைவனை தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்குகின்றனர் மூலவர் இடத்திலிருந்து தானாக தோன்றியவர் ஒப்பில்லா நாயகி மற்றும் நீலாதாஷி என இரு தேவியர் தனித்தனி சன்னதிகளில் அருள் புரிகின்றனர் கருவறைக்கு பின்னால் இருக்கும் லிங்கோத்பவர் சிலையில் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனை வழங்கிய கோலத்தில் இருப்பது மிக அரிதான காட்சி கலைத்திறமை வளரவும் விவசாய வாழ்வு செழிக்கவும் இத்தலம் சென்று ஈசனை வழிபட ஈசன் அருள் கிட்டும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - வேறெங்கும்காண முடியாதஅபூர்வ நடராஜர் தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் சிறப்பகள் வேறெங்கும்காண முடியாதஅபூர்வ நடராஜர் தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் சிறப்பகள் - ShareChat