ShareChat
click to see wallet page
search
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் *தோசையில் மறைந்திருக்கும்* ஆன்மிக அதிசயம்!* உங்களுக்குத் தெரியுமா?* தோசைக்குள் ஆன்மிகமா? உங்களுக்குத் தெரியுமா நாம் தினமும் சாப்பிடுகின்ற தோசை மாவுக்குப் பயன்படுத்துகின்ற பொருட்களில் நவகிரக குணங்கள் அடங்கியுள்ளன. தோசை சுட பயன்படும் அக்னி சூரியபகவான். மாவில் முக்கியபங்கான அரிசியில் சந்திர பகவானும் உளுந்தில் சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் உள்ளனர். வெந்தயத்தில் புத்தியை சுத்திகரிக்கும் புதன் பகவானும், தோசைக்கல் இரும்பில் சனி பகவானும், தோசையின் நிறத்தில் செவ்வாய் பகவானும் உள்ளனர். தோசையை சாப்பிடும் ஆண்களில் குரு பகவானும், பெண்களில் சுக்ர பகவானும் உள்ளனர். தோசையின் வட்ட வடிவு இந்த பிரபஞ்சத்தையே குறிக்கிறது. தோசையை முன்பக்கம் பின்பக்கம் வேக வைப்பது, அதாவது கடிகார வடிவில் சுற்றுவது இந்த உலகம் சுற்றுவதை குறிக்கிறது. ஆரம்ப காலங்களில் விசேஷ நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படைத்து வழிபட்டார்கள். இப்பொழுதும் மதுரை கள்ளழகர் கோவிலில் பெருமாளுக்கு தோசையை படைத்து பிரசாதமாக வழங்குகிறார்கள். காஞ்சிபுரம் வரதராஜபெருமாளுக்கு தோசை மாவில் மிளகு சீரகம் சேர்த்து படைக்கிறார்கள் பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில் பெருமாளுக்கு மிளகு தோசையை பித்தளை பானைகளில் வைத்து படைக்கிறார்கள். சீரங்கம் கோவிலில் பச்சரிசி, கருப்பு உளுந்து, மிளகு, சீரகம் சேர்த்து, தோசை நெய்யில் வார்க்கப்பட்டு பெருமாளுக்கு படைக்கப்படுகிறது; இதை சாம்பார் தோசை என்று கூறுகிறார்கள்.🌹
ஆன்மீக - Budha Sukra Chandra Angaraka Guru Surya Rethu snani R Budha Sukra Chandra Angaraka Guru Surya Rethu snani R - ShareChat