ShareChat
click to see wallet page
search
காங்கிரஸ் ஓர் அழுகிய தக்காளி... காங்கிரஸ் கட்சியானது ராஜதந்திரம் என்று நினைத்துக் கொண்டு செய்கிற போக்குக் காட்டுகிற வேலைகள் அந்தக் கட்சியை மட்டுமல்லாது அனைத்து கட்சிகளின் செயல் திட்டங்களிலும் மண்ணை அள்ளிப் போட்டு வருகிறது. சும்மாவா, ஒரு அழுகிய தக்காளி இருந்தால் போதும், கூடையில் உள்ள அனைத்துமே சடுதியில் அழுகிவிடும். ஒருவேளை அதன் உள்நோக்கமே அதுதானோ, அல்லது இது திமுகவின் கண்ணசைவில் நடக்கிறதோ என்ற பீதியிலும் கட்சிகள் உள்ளன. எதுவும் சொல்வதற்கில்லை! தவெக NDAவில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்ல அதுதான் அரசியல் விவேகம். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பதைப்போல, தேர்தலொன்று போனால், அரசியல் வாழ்வில் ஐந்து வருடங்கள் காலி. தேர்தல் முடிந்தபின் உப்புசப்பில்லாமல் வெறும் காற்றில் வியூகங்களை அமைத்து காலங்கள் எப்படி உருண்டோடின என்று சசிகலா & கோ விடம் கேட்டால் தெரியும். அரசியலில் ஐந்து வருடங்கள் காத்திருப்பது சாதாரணமான காரியம் இல்லை. 'நொஞ்ச மாட்டில்தான் ஈ வந்து ஒட்டும்' என்பது பழமொழி. கட்சி கண்ணெதிரே கரைந்து கொண்டிருப்பதை தடுக்க இயலாமல் கையறு நிலையில் வேடிக்கை பார்க்க வேண்டும். மதிமுகவை, வைத்து செய்ததைப் போல திமுக தவெகவை செதில் செதிலாக செதுக்கி சிதைக்கப்போவது திண்ணம். அடுத்து காங்கிரசின் வாசலையே பார்த்துக்கொண்டு தேமுதிக. இந்த காத்திருப்பிலேயே அண்ணியார் நொந்து போய்விட்டார். திரும்பிய பக்கமெல்லாம் கேள்விக் கணைகளுடன் நிருபர்கள். இரு அணிகளுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொல்ல முடியாமல், கூட்டணி பற்றிய அறிவிப்புக்கு தேதி கொடுத்தும், யாருடனும் பேரம் பேசவில்லை ஏன்றும், தனித்துப் போட்டியிடுவோம் என சொல்லியும் வேளாவேளைக்கு எதையாவது பேசி செய்திகளில் அடிபடுகிறார். காங்கிரசின் முடிவை வைத்து தேமுதிக மற்றும் ராமதாஸ்-பாமக ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து இறுதியான முடிவெடுக்க வேண்டும் என் நிலையில் திமுக. அப்படியே அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வரை திரிசங்கு சொர்க்கத்தில் இருந்தாலும் அதற்கு வசதிதான். ராமதாஸ்-பாமக விஷயத்தில் திமுக எடுக்கப் போகிற நிலைப்பாட்டினை வைத்து விசிக தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை. கையை பிசைந்துகொண்டு நடப்பதை வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு வேறென்ன செய்வது? அதாவது, காங்கிரஸ் என்றால் அதற்கு குழப்பத்தின் உச்சம் என்று பொருள். இறுதிவரை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். சோனியா மவுனம் காப்பார். ராகுல் அதை விட்டு வேறு எதையாவது பேசிக் கொண்டிருப்பார். ராகுல் எடுப்பதுதான் இறுதி முடிவு. மற்றப்படி, கார்கே, வேணுகோபால் எல்லாம் ஒப்புக்கு சப்பாணிதான். ராகுலை வைத்துக்கொண்டு கூட்டணி பேரங்கள் எல்லாம் சாதாரணமாக முடிவுக்கு வரக்கூடிய பிரச்சினை இல்லை. இதற்கெல்லாம் ஒரே மருந்து தேர்தல் தேதி அறிவிப்புதான். அப்போதும்கூட பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு வேட்புமனு வாபஸ் வாங்குகிற கடைசி நாள் வரையில் கூட்டணி வியாபாரங்கள் தொடரலாம். #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:05