திரைபாரதி
ShareChat
click to see wallet page
@thiraibharathi
thiraibharathi
திரைபாரதி
@thiraibharathi
ஐ லவ் ஷேர்சாட்.
திருவாளர் பானாசீனாவின் பலே கணக்கு! ஒரு முறை ஜனநாயகப் பேரவை என்ற பெயருடன் காங்கிரஸ் கோட்டையில் ஊடு செங்கல் உருவிய ப. சிதம்பரம் மீண்டும் அதே கைங்கரியத்தை ரிபீட் செய்வதற்கு நாள் குறித்து விட்டதாகச் சொல்லப் படுகிறது. அது எந்த நாள்? அது, ஒருவேளை, காங்கிரஸ் கட்சி 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைப்பதாக இருந்தால், அந்த கூட்டணி அமையும் நாள் என்க. இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெல்லுமா அல்லது தவெக வெல்லுமா என்பது ப.சி. அவர்களுக்கு முக்கியமில்லை. இவருக்கு மீண்டும் ராஜ்யபா MP ஆக வேண்டும். இவரது மகன் கார்த்தி அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று MP ஆக வேண்டும். அம்புட்டுதேன். அவருடைய கணக்கில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. அதாவது, தவெகவே சட்ட மன்றத் தேர்தலில் வென்றாலும் அந்தக் கட்சியில் இவருக்கு எந்த விதமான மரியாதை கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அதாவது, அங்கே அப்பா பிள்ளை இருவரும் MP க்கள் ஆவதற்கு தவெக எதிர்காலத்தில் உதவும் என்ற கேரண்டி இல்லை. அதே சமயம், எதிர்வரும் தேர்தலில் திமுக கூட்டணி தோற்றாலும், அதனால் இவருக்கு பாதகம் எதுவும் இல்லை. ஆனால், திமுக ஒரே தேர்தலில் அழிந்துவிடப் போவதில்லை என்பது உறுதி. எனவே, அப்பா பிள்ளை இருவருக்குமே திமுக தயவில் நாளை மீண்டும் MP ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில், சிதம்பரம் அவர்களுக்கு திமுக மேலிடத்திடம் நல்ல நெருக்கம் உள்ளது. இதெல்லாம் போக, இந்த 2026 தேர்தலில் தன்னை நம்பி இருக்கும் சிலருக்கு திமுக கூட்டணியில் சீட்டுகள் வாங்கிக் கொடுக்கவும் இவரால் முடியும். அதாவது ஒரே கல்லில் இரண்டல்ல மூன்று காய்களை அடிப்பதற்கு அப்பச்சி 'காய்' நகர்த்துகிறார் என்று சொல்லப் படுகிறது. என்னே ஒரு தொலை நோக்குப் பார்வை! முன்னாள் நிதியமைச்சரின் மூளை சாதாரணமான மூளை இல்லை! அவர் மட்டுமல்ல, காங்கிரசின் பெரும்பாலான தூண்கள் இப்படிப்பட்டவைதான். இவர்களை நம்பித்தான் ராகுலும் கட்சியை நடத்துகிறார். அதனால்தான் சாண் ஏறினால், முழம் சறுக்குகிறது! பின் குறிப்பு: MLA ஆக விரும்பும் சில காங்கிரஸ் சிட்டிங் MLA க்கள் ப.சி. அவர்களுடன் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி MLA ஆகிறவர்கள் தேர்தலுக்குப்பின் அப்போதைய நிலவரத்தைப் பொறுத்து, குதிரை பேரங்களின் மூலம் ஏதாவது ஒரு கூட்டணி ஆட்சி அமைவதற்கு உதவக்கூடும். இந்தத் தேர்தலில் என்னென்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கக் கூடும் என சொல்வதற்கில்லை. #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:10
தேர்தல் 1967 to 2026 மாறாத விஷயங்களின் மாறிய கோணங்கள்! 1967 தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பாகிறது. தி. நகர் பனகல் பார்க்கில் அமைந்துள்ள ரேடியோவில் இரவு 7-00 மணி செய்தியைக் கேட்க திருவிழா போல் கூட்டம். "ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி" என்று செய்தி ஆரம்பித்ததும் 'பின் ட்ராப்' சைலன்ஸ். "நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விருதுநகர் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை தொடர்கிறது. முடிவு பின்னர் அறிவிக்கப்படும்" என்று செய்தி வரும்போது மக்களுக்கு சப்பென்று இருக்கும். சுதந்திரா கட்சியும் கம்யூனிஸ்டுகளும் திராவிட இயக்கத்துடன் கைகோத்து களத்தில் நின்றன. பச்சைத் தமிழன் காமராஜருக்கு ஓட்டுப் போடுங்கள் என பெரியார் பிரச்சாரம் செய்தார்!பூவராகன் ஒருவரைத் தவிர மற்ற மந்திரிகள் எல்லாம் தோற்ற போது, காமராஜர் என்ன ஆனார் என்ற கேள்வியே ரேடியோ செய்திகளை கேட்டுக் கொண்டிருந்த மக்கள் மனதில் பிரதானமாக இருந்தது. கடைசியில் காமராஜரும் தோற்றார். 1967 தேர்தல் தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஓர் யுகப்புரட்சி ஆகும். அது, அகில இந்திய அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த மாநிலமான தமிழகத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்த வரலாறு. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற இருக்கும் 2026 தேர்தலில் அதே பிரச்சினைகள் பேசப்பட்டாலும், அவற்றின் கோணங்கள் மாறுபட்டுள்ளன. இந்தி எதிர்ப்பு: இந்தியை எதிர்த்து தமிழை காப்போம், தமிழரைக் காப்போம் என்ற அதே 1967 பல்லவியை 2026 லும் திமுகவினர் பாடுகிறார்கள். இவர்கள் காப்பாற்ற வேண்டிய நிலையில் தமிழ் என்றுமே இருந்தில்லை. இலங்கைத் தமிழர் விவகாரதில் கருணாநிதியை வசைபாடிய வைகோவும் திருமாவும் இன்று திமுக பக்கம். தமிழ் தானே வளர்ந்த மரம், தனியாக நின்ற மரம். இன்று கூகுள், சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) போன்றவை மொழிபெயர்ப்பு, புதிய தமிழ் சொற்கள், பிழை திருத்தல் போன்று பல்வேறு வேலைகளை திறம்பட செய்து தமிழ் மட்டுமல்லாமல், அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கின்றன. திமுக தமது குடும்ப நிறுவனங்களின் பெயர்களில் தமிழை வளர்த்த இலட்சணத்தை தமிழர்கள் அறிவார்கள். ஊழல்: 67இல் காங்கிரஸ் மந்திரிகளை ஊழல் பெருச்சாளிகள் என திமுக பிரச்சாரம் செய்தது. ஆனால், உண்மை நிலை என்ன?பக்தவத்சலம், கக்கன் போன்ற தலைவர்களின் வழித்தோன்றல்கள் யாரும் இன்று இருக்கிற இடம் தெரியவில்லை. காமராஜர் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டிருக்கிறார், காங்கிரஸ் ஆட்சி என்பது தொழிலதிபர்கள் மற்றும் மிட்டா மிராசுகளின் ஆட்சி என்றெல்லாம் பிரச்சாரம் செய்து திமுக ஆட்சியை பிடித்தது. ஓட்டுக்கு துட்டு: காங்கிரஸ் ஓட்டுக்கு துட்டு தந்தால், அதை வாங்கிக் கொண்டு ஓட்டை எங்களுக்குப் போடுங்கள் என்று திமுக பிரச்சாரம் செய்தது. அப்படி செய்ததில் ஒரு சூட்சுமம் இருந்தாக சொல்வார்கள். அதாவது, ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்றாலும், "காங்கிரஸ் பணம் தருவதாக சொல்லப்படுகிறதே, நமக்கு ஏன் வரவில்லை" என்ற கோபத்தில் மக்கள் திமுகவிற்கு போடட்டும் என்ற நல்லெண்ணம்தான்! இன்று, பணத்தை தேர்தல் கமிஷனுக்குத் தெரியாமல் எப்படி மக்களுக்கு வினியோகிப்பது என்று "திருமங்கலம்" போன்றபல பார்முலாக்களை கண்டுபிடித்து விட்டனர்! வேட்பாளர் தேர்வில் கேட்கப்படும் முதல் கேள்வியே "உங்களால் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?" என்பதுதான். இன்றைய தேர்தலில் காமராஜர், கக்கன்களுக்கு இடமில்லை. வாரிசு அரசியல்: இந்தியாவில் நேரு குடும்பத்தின் வாரிசு அரசியல் நடக்கிறது என்று 1967 தேர்தலில் மேடைதோறும் திமுக தலைவர்கள் முழங்கினார்கள். இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. திமுகவில் வாரிசு அரசியல் என்று எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்வதை திமுக தலைமையினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தொழில் வளர்ச்சி: தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்தாலும் 1967 தேர்தலில் "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. இன்றைய நிலை என்ன? 16-வது நிதிக் குழுவின் அறிக்கையின் படி, 2022-23 ஆம் ஆண்டில், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் (SPSEs) கடும் நஷ்டத்தில், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக, தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. அதற்கு காரணம் நிர்வாகச் சீர்கேடுகளும் ஊழலும்தான். சினிமா கவர்ச்சி: 1967 இல் திமுகவின் வளர்ச்சிக்கும் பிரச்சாரத்திற்கும் பத்திரிகை மற்றும் சினிமா துறை பக்கபலமாக இருந்தது. இன்று, பத்திரிகை, டிவி, சினிமா, சமூக ஊடகங்கள் அனைத்திலும் கட்சித் தலைமையின் 'குடும்ப' ஆதிக்கமே கோலோச்சுகிறது! இன்று மீண்டும் 'பராசக்தி'! 1967 தேர்தலில் பேசப்பட்ட அதே விஷயங்களே 2026 தேர்தலில் மீண்டும் பேசப்படுகின்றன. அவற்றின் கோணங்கள்தான் வேறாக இருக்கின்றன. பிரச்சார பலத்தை வைத்தும், பண பலத்தை வைத்தும் ஆட்சியை பிடிக்கமுடியுமா என்ற கேள்விக்கு எதிர்வரும் சட்டட மன்றத் தேர்தலில் மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும். மற்றப்படி, மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு, சாதி வன்கொடுமை, பெண்கள் பாதுகாப்பு, பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம், மணல் கொள்ளை, வணிகமயமான கல்வி, அரசு கல்வி நிலையங்களில் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு சமாச்சாரங்களைப் பற்றி யாராவது பேசிவிட்டால், அவர்கள் மதவாதிகள், பிற்போக்குவாதிகள்! #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:05
ராமதாஸ்-பாமகவை திமுக உதாசீனப்படுத்தியது எதைக்காட்டுகிறது? அதன் பின்விளைவுகள் திமுக கூட்டணிக்கு எப்படி இருக்கும்? எவ்வளவோ மன்றாடிய பின்னும் ராமதாஸ்-பாமகவிற்கு திமுக கூட்டணியில் இடம் இல்லை. ஏனென்றால், அதற்கு விசிக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அன்புமணியின் பின்னால்தான் பாமகவின் தொண்டர்களும் அனுதாபிகளும் நிற்கிறார்கள் என்பதை திமுகவின் உதாசீனம் உறுதிப்படுத்துகிறது. அதாவது, ஒன்றுபட்ட பாமகவில் டாக்டர் ராமதாசுக்கு குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு செல்வாக்கு இருந்திருந்தாலும் ஓட்டுக் கணக்கை கருத்தில் கொண்டு விசிகவை உதறித் தள்ளிவிட்டு, ராமதாஸ்-பாமகவை திமுக அணைத்துக் கொண்டு போயிருக்கும். இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லப்போனால், திருமாவளவனால் திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க முடிகிறது, அல்லது ராமதாசை விலக்கி வைக்க மறைமுகமாக நிர்ப்பந்திக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் 2026 தேர்தலில் டாக்டர் ராமதாசைவிட திருமாவளவனுக்கு ஓட்டுக்கள் அதிகம் கிடைக்கும் என்ற கணக்குதான். ஒன்றுபட்ட பாமகவின் கிட்டத்தட்ட தொண்டர்கள் 90 சதவீதம் பேரும், ஆதரவாளர்களில் 80 சதவீத மக்களும் அன்புமணி-பாமக வின் பக்கமே நிற்கிறார்கள். அன்புமணியே பாமகவின் எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்பது நிதர்சனம். இது அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கும் ஒருபடி மேலே போய், ஒன்றுபட்ட பாமகவின் தொண்டர்களும் சரி, பாமகவின் அனுதாபிகளும் சரி, திமுக கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு நேர்ந்த அவமானங்களை ரசிக்கவில்லை. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது பழைய சொல்லாடல். இது தேர்தலில், திமுக கூட்டணிக்கு பாதகமாக, முக்கியமாக விசிகவுக்கு வரவேண்டிய திமுக வாக்குகளில், எதிரொலிக்கும். திருமாவளவனுடைய கண்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தவாக போன்ற கட்சிகளை விட பாமகதான் சாதிமத அடிப்படையிலான கட்சியாகத் தெரிகிறதா? இது வெறுப்பு அரசியலின் உச்சமாகத் தெரியவில்லையா? என்ன இருந்தாலும், டாக்டர் பாமகவின் ஸ்தாபகர். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காக பல்வேறு போராட்டங்களை முன்னிறுத்தி நடத்தியவர் என்ற வகையில் வன்னியர்கள் மட்டுமல்லாமல், பிற சமுதாயத்தை சேர்ந்வர்களிடமும் அவருக்கென தனி மரியாதை உண்டு. திமுக கூட்டணியில் ராமதாசின் வருகையை திருமாவளவன் ஆதரித்திருந்தால், சாதிகளால் பிளவுபட்ட தமிழகத்தில், அது சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்திருக்கும். அந்த வாய்ப்பினை திருமாவளவன் தவறவிட்டுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவரிடம் அப்படி ஒரு பரந்த மனப்பான்மை இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்! எதிர்வரும் தேர்தலில் இந்த கூட்டணி சலசலப்புகள் நிச்சயம் வடதமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு சாதகமாக ஏதிரொலிக்க வாய்ப்புள்ளது. #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:05
“கடல்கள் யாருடைய சொத்தும் அல்ல!” – அட்லாண்டிக் பெருங்கடலில் இந்தியாவின் துணிச்சலான தடம் ஒரு காலத்தில், சோழர்கள் பரந்துபட்ட உலகின் அன்றைய முக்கிய கடல் வழிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் என்பது வரலாறு. அதன் பின்னர் சமீப காலம் வரை இந்திய கடற்படை இந்தியப் பெருங்கடல் பகுதியில் மட்டுமே செயல் படுகிறது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது; இந்தியா தனது கடற்படையின் திறனை உலகத்திற்கு காட்டிக் கொண்டிருக்கிறது. அதற்குச் சிறந்த உதாரணம் – அட்லாண்டிக் பெருங்கடலில் இந்திய போர்க் கப்பல்களின் ரோந்து ஆகும். INS Trikand, INS Tushil, INS Tarkash போன்ற நவீன ஸ்டெல்த் ஃபிரிகேட் கப்பல்கள் தற்போது அட்லாண்டிக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவை சாதாரண பயணங்கள் அல்ல. கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, கூட்டு ராணுவப் பயிற்சிகள், மற்றும் சர்வதேச நட்பு உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவை இதன் நோக்கமாகும். INS Tushil என்ற ஏவுகணை ஃபிரிகேட் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் கடற்கொள்ளை எதிர்ப்பு பணியில் ஈடுபட்டது. அதோடு, இங்கிலாந்து, பிரான்ஸ், மொராக்கோ போன்ற நாடுகளில் துறைமுகங்களுக்கு வருகை புரிந்து பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தியது. இது இந்தியாவின் வளர்ந்து வரும் கடற்படை திறனை உலக நாடுகளுக்கு முன் வெளிப்படுத்துகிறது. INS Tarkash 4,315 கடல் மைல்கள் தாண்டி மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு அட்லாண்டிக் பகுதிகளில் கடல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டது. இது கூட்டு பயிற்சிகள், பாதுகாப்பு திறன் மேம்பாடு மற்றும் கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக கினி வளைகுடா (Gulf of Guinea) பகுதியில் கடற்கொள்ளை பிரச்சினை அதிகம் உள்ளதால், இந்தியாவின் பங்கு அந்த பிராந்தியத்திற்கு பெரும் ஆதரவாக உள்ளது. INS Trikand மத்தியதரைக் கடல் மற்றும் வட அட்லாண்டிக் பகுதிகளில் பயணித்து, பல நாடுகளுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டது. இது இந்தியாவின் கடற்படை நடவடிக்கைகள் இந்தியப் பெருங்கடலைத் தாண்டி உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளதைக் காட்டுகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு முக்கிய செய்தியை உலகிற்கு தெரிவிக்கின்றன: “கடல்கள் எந்த ஒரு வல்லரசு நாட்டின் சொத்தும் அல்ல.” கடல்களில் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து என்பது உலகின் அனைத்து நாடுகளின் உரிமை. எந்த ஒரு நாடும் கடற்பரப்பில் தனிப்பட்ட அதிகாரம் செலுத்த முடியாது. இந்தியா இந்தக் கொள்கையை உறுதியாக நம்புகிறது. உலகளாவிய கடல் பாதுகாப்பு என்பதில் கூட்டுப் பொறுப்பு என்ற புரிதலுடன் இந்தியா செயல்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், “புதிய இந்தியா” உலக அரங்கில் தன்னம்பிக்கையுடன் குரல் கொடுக்கிறது. பாதுகாப்பு, தன்னாட்சி, மற்றும் சர்வதேச நட்பு – இவை மூன்றையும் இணைத்து இந்தியா தனது பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் இந்தியக் கப்பல்கள் பயணம் செய்வது ஒரு ராணுவச் செயல்பாடு மட்டுமல்ல - * அது ஓர் அரசியல் பிரகடனம். * அது ஒரு தன்னம்பிக்கை அறிவிப்பு. * அது ஒரு உலக ஒத்துழைப்புக்கான அழைப்பு. இந்தியாவின் இந்த முன்னேற்றம், எதிர்காலத்தில் உலக கடல் பாதுகாப்பில் இந்தியா முக்கிய பங்காற்றும் என்பதற்கான வலுவான சான்றாகும். கடல்கள் எல்லையற்றவை. இந்தியாவின் பார்வையும் அதேபோல் எல்லையற்றது. #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:10
தினம் ஒரு அறிவிப்பு, தினந்தோறும் தீபாவளி! இன்றைய செய்தி சிறப்பு உதவி: தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் சிறப்பு உதவியாக பிப்ரவரி 13, 2026 அன்று ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாதம் ₹1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய சிறப்புத் திட்டமாக இந்த கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பயனாளிகளின் கணக்கில் பணம் சேர்ந்ததற்கான குறுஞ்செய்திகள் (SMS) வரத் தொடங்கியுள்ளன.  இன்றைய செய்தி (13 பிப். 2026) தொடர்கிறது... "₹32,000 கோடி முதலீட்டில் 52 பணிகள் தொடக்கம்: 82,000 பேருக்கு வேலை வாய்ப்பு. மேலும் 71 புதிய திட்டங்களுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்." (தினத்தந்தி). நேற்றைய செய்தி (12 பிப். 2026) "பேரூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள் தீவிரம்." (தினத்தந்தி). இவைல்லாம் சாம்பிள்கள்தான். இந்த மாதிரியான அறிவிப்புகளை ஆளும் கட்சியினரால்தானே (அறிவிப்புகளை மட்டுமே!) வெளியிட முடியும் என்பதால், காற்றுள்ளபோதே திமுக தூற்றிக்கொள்கிறது. பிற கட்சிகள் வயிறெரிந்து பார்க்க வேண்டியதுதான். தேர்தல் நெருங்க நெருங்க செய்திகள் மேலும் தூள் பறக்கும். தேர்தல் முடிந்து ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், தமக்குத்தாமே பாராட்டு விழாக்களை நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும். ஆட்சிக்கு வந்து நான்கரை வருடங்களாக தீர்க்கமுடியாமல் இருந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம், சாலைகள், பாலங்கள் போன்ற பல பிரச்சினைகள் அசுர கதியில் இரண்டே மாதங்களுக்குள் தீர்க்கப் படுகின்றன. பணத்தை தண்ணீராக வாரி இறைப்பதற்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது? ஒரு ஜனநாயக நாட்டில் கடன்களை வாங்கி இப்படி சிறப்பு உதவி, இலவசத் திட்டங்கள், நஷ்டத்தில் இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இலவச பயணங்கள் போன்ற உறுப்படியில்லாத வேலைகளை பொறுப்பற்ற முறையில் அரசுகள் செய்வதைத் தடுக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லையா? இதெல்லாம் எங்கே போய் முடியும்? தற்போது சட்டத்தில் அதற்கு இடம் இல்லாவிட்டால், அப்படி ஒரு சட்டத்தை இயற்ற வேண்டியது அவசியம் இல்லையா? இல்லையென்றால் அரசியல்வாதிகள் நாட்டையே அடகு வைத்து விடுவார்களே! மன்னிக்கவும், இப்போதும் அதுதான் நடக்கிறது... இந்த நிலை நீடித்தால் பிற மாநிலங்களிலும் இருக்கும் ஆளும் கட்சிகளும், வாக்காளர்களை கவர்ந்து இழுப்பதற்கு தமிழகம் தொடங்கி வைத்த இதே நடைமுறையை பின்பற்ற ஆரம்பித்தால் அதற்கு முடிவேது? ஊழலை திறம்பட செய்வதற்கும், தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை வாரி வழங்குவதற்கும் திமுகதானே பிற மாநிலங்களுக்கு வழிகாட்டி? ஒருபக்கம் பொறுப்பற்ற பொருளாதாரக் கொள்கைகள். மறுபக்கம் தோல்விகளுக்கு மத்திய அரசைக் கைகாட்டுகிற மனப்பாங்கு. அது போதாது என்று திராவிட மாடல் என்கிற பிரிவினைவாதம் வேறு. விளங்கின மாதிரிதான். பிறகு? ரேஷனில் அரிசி முதற்கொண்டு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், வளர்ச்சி மட்டும் திராவிட மாடலுக்கு சொந்தம். பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் மத்திய அரசு என்றால், அதற்கு என்ன பொருள்? தேர்தலுக்கு முதல்நாள் வரை அறிவிப்புகளும் அன்பளிப்புகளும் தொடரும்! #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:10
இந்த நாள் எப்படிப் போகும்? அதை யாரே சொல்ல வல்லார்? தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களத்தில் புயல் வேகத்தில் காட்சிகள் மாறுகின்றன. * காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்காது, தவெகவில் இணையவே வாய்ப்பு அதிகம் - இது காலைச் செய்தி. காங்கிரஸ் திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறது. இது மாலையில் நிலைமை. * பேரம் படிந்தது, திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் (காலை). நாங்கள் யாருடனும் பேரம் பேசவில்லை - பிரேமலதா (மதியம்) அதிமுக கூட்டணியில் தேமுதிக? BJP தலைவர் பேச்சு. (இரவு) * ராமதாஸ் ஸ்டாலினிடம் உருக்கமான வேண்டுகோள். (காலை) பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது - திருமாவளவன். (இரவு) ராமதாஸ்-பாமக தவெகவுடன் பேச்சுவார்த்தை. (நள்ளிரவு) தினம் தினம் இதே செய்திகள் வெவ்வேறு விதமாக ஊடகங்களில் வெளிவரும். டிவியில் விவாதங்கள் நடக்கும். பலவிதமான கருத்துக் கணிப்புகள் வெளிவரும். ஒன்றில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று வந்தால் மற்றொன்றில் அதிமுக அல்லது தவெக என்று வரும். எந்த கட்சி எந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளது என்று தேர்தலுக்கு முதல் நாள் தெரிந்தால் அது பெரிய விஷயம். இடையிடையே ஜோசியர்களின் ஆரூடங்களுக்கும் பஞ்சமில்லை. கடைசியில், ஓட்டுக்களுக்காக மக்களுக்குக் கொடுக்கப்படும் பணமும் அன்பளிப்புகளும் ஒருவேளை தேர்தல் வெற்றியை தீர்மானிக்கலாம். எனவே மக்களில் ஒரு சாரார், ஓட்டுப் போடுவதே வேஸ்ட் என்றும், ஓட்டு போட்டே ஆகவேண்டும் என்றால் நோட்டாவிற்குப் போடுவது மேல் என்ற மனநிலையிலும் இருக்கிறார்கள். என்றாலும், ஜனநாயகத்தை விட சிறப்பானதோர் ஆட்சிமுறையை மனித குலம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. அது ஒருக்காலும் சாத்தியம் இல்லை என்பதே சத்தியம். Best of a bad lot எது? என்று கண்டு பிடித்து ஓட்டுப் போடுவதில்தான் மக்களுடைய சாமர்த்தியம் இருக்கிறது. மேலும், அது மக்களின் கடமை. இலவசங்கள், சலுகைகள், அன்பளிப்புகள் ஆகியவை ஒரு புறம் வரிசை கட்டி வந்தாலும் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன? தீண்டாமை வன்கொடுமைகள் சாராய கலாச்சாரம் கல், மணல் கொள்ளை அநியாய கல்விக் கட்டணங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை போதை வஸ்துக்கள் நடமாட்டம் கொலை, கொள்ளை & கற்பழிப்பு அராஜகம் & கட்டை பஞ்சாயத்து - இதெல்லாம் அதிக விலை என்ற ஞானோதயம் மக்களிடம் பிறக்கும் போதுதான் நல்லாட்சி மலர்கிறது. ஆட்சியை மாற்றும் அதிகாரம் மக்களிடம் உள்ளது என்பதே ஜனநாயகத்தின் பலமான அஸ்திவாரம். இன்றைய காலகட்டத்தில் தேர்தலில் போட்டி போடுவது சாதாரண காரியமில்லை. ஆனால், மக்கள் நினைத்தால் கட்சிகளுக்கு வெற்றி அல்லது தோல்வியை பரிசாகத் தர முடியும்! மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றம் இல்லையென்றால் தேக்கநிலை தொடரும்; ஏமாற்றமே மிஞ்சும். #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:10
காங்கிரஸ் ஓர் அழுகிய தக்காளி... காங்கிரஸ் கட்சியானது ராஜதந்திரம் என்று நினைத்துக் கொண்டு செய்கிற போக்குக் காட்டுகிற வேலைகள் அந்தக் கட்சியை மட்டுமல்லாது அனைத்து கட்சிகளின் செயல் திட்டங்களிலும் மண்ணை அள்ளிப் போட்டு வருகிறது. சும்மாவா, ஒரு அழுகிய தக்காளி இருந்தால் போதும், கூடையில் உள்ள அனைத்துமே சடுதியில் அழுகிவிடும். ஒருவேளை அதன் உள்நோக்கமே அதுதானோ, அல்லது இது திமுகவின் கண்ணசைவில் நடக்கிறதோ என்ற பீதியிலும் கட்சிகள் உள்ளன. எதுவும் சொல்வதற்கில்லை! தவெக NDAவில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்ல அதுதான் அரசியல் விவேகம். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பதைப்போல, தேர்தலொன்று போனால், அரசியல் வாழ்வில் ஐந்து வருடங்கள் காலி. தேர்தல் முடிந்தபின் உப்புசப்பில்லாமல் வெறும் காற்றில் வியூகங்களை அமைத்து காலங்கள் எப்படி உருண்டோடின என்று சசிகலா & கோ விடம் கேட்டால் தெரியும். அரசியலில் ஐந்து வருடங்கள் காத்திருப்பது சாதாரணமான காரியம் இல்லை. 'நொஞ்ச மாட்டில்தான் ஈ வந்து ஒட்டும்' என்பது பழமொழி. கட்சி கண்ணெதிரே கரைந்து கொண்டிருப்பதை தடுக்க இயலாமல் கையறு நிலையில் வேடிக்கை பார்க்க வேண்டும். மதிமுகவை, வைத்து செய்ததைப் போல திமுக தவெகவை செதில் செதிலாக செதுக்கி சிதைக்கப்போவது திண்ணம். அடுத்து காங்கிரசின் வாசலையே பார்த்துக்கொண்டு தேமுதிக. இந்த காத்திருப்பிலேயே அண்ணியார் நொந்து போய்விட்டார். திரும்பிய பக்கமெல்லாம் கேள்விக் கணைகளுடன் நிருபர்கள். இரு அணிகளுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொல்ல முடியாமல், கூட்டணி பற்றிய அறிவிப்புக்கு தேதி கொடுத்தும், யாருடனும் பேரம் பேசவில்லை ஏன்றும், தனித்துப் போட்டியிடுவோம் என சொல்லியும் வேளாவேளைக்கு எதையாவது பேசி செய்திகளில் அடிபடுகிறார். காங்கிரசின் முடிவை வைத்து தேமுதிக மற்றும் ராமதாஸ்-பாமக ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து இறுதியான முடிவெடுக்க வேண்டும் என் நிலையில் திமுக. அப்படியே அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வரை திரிசங்கு சொர்க்கத்தில் இருந்தாலும் அதற்கு வசதிதான். ராமதாஸ்-பாமக விஷயத்தில் திமுக எடுக்கப் போகிற நிலைப்பாட்டினை வைத்து விசிக தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை. கையை பிசைந்துகொண்டு நடப்பதை வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு வேறென்ன செய்வது? அதாவது, காங்கிரஸ் என்றால் அதற்கு குழப்பத்தின் உச்சம் என்று பொருள். இறுதிவரை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். சோனியா மவுனம் காப்பார். ராகுல் அதை விட்டு வேறு எதையாவது பேசிக் கொண்டிருப்பார். ராகுல் எடுப்பதுதான் இறுதி முடிவு. மற்றப்படி, கார்கே, வேணுகோபால் எல்லாம் ஒப்புக்கு சப்பாணிதான். ராகுலை வைத்துக்கொண்டு கூட்டணி பேரங்கள் எல்லாம் சாதாரணமாக முடிவுக்கு வரக்கூடிய பிரச்சினை இல்லை. இதற்கெல்லாம் ஒரே மருந்து தேர்தல் தேதி அறிவிப்புதான். அப்போதும்கூட பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு வேட்புமனு வாபஸ் வாங்குகிற கடைசி நாள் வரையில் கூட்டணி வியாபாரங்கள் தொடரலாம். #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:05
Inflation-Proof Currencies in an Era of the Financial Revolution “Fiat currencies depreciate by design. Cryptocurrencies resist it by architecture.” Depreciation is an inherent feature of national currencies. Therefore, hedging against inflation has been a complicated exercise so far, especially for the middle-class families. Cryptocurrencies entered this landscape as an alternative medium of transaction, but their role has gradually evolved. In the long run, major cryptocurrencies — most notably Bitcoin — have demonstrated an ability to act as a hedge against inflation for long-term holders. Governments print money to fund deficits, manage crises, and stimulate growth, while citizens quietly absorb the cost through inflation. What was meant to be a neutral medium of exchange has become a steadily leaking store of value. In this environment, the search for inflation-resistant alternatives is no longer ideological — it is practical. Cryptocurrencies emerged as transactional tools, but their role has expanded far beyond that. Over time, leading cryptocurrencies have demonstrated a critical trait that fiat currencies lack: resistance to arbitrary expansion. With supply governed by code rather than policy, they offer a structural safeguard against inflation. This is not a promise made by politicians or central bankers — it is a rule embedded in software. The defining strength of cryptocurrencies lies in their independence from central banks. Their issuance, movement, and validation are not subject to interest rate cycles, quantitative easing, or political pressure. Monetary policy decisions taken in one capital do not ripple through decentralized networks. In a world where currencies are routinely weaponized or devalued, this insulation is a radical departure from the past. Efficiency strengthens the case further. Traditional financial systems are slow, layered, and expensive, especially across borders. Cryptocurrencies enable direct, peer-to-peer transactions that are faster, cheaper, and always on. For global trade, remittances, and digital commerce, they eliminate friction that has long been accepted as inevitable. The shift is no longer theoretical. Governments that once dismissed cryptocurrencies as fringe experiments are now responding with regulation, taxation, and cautious adoption. Some are exploring limited reserve exposure; others are developing central bank digital currencies — an implicit admission that blockchain based finance is unavoidable. While states may resist decentralization, they cannot ignore its efficiency or appeal. Critics often point to volatility, regulation, and security risks — and rightly so. Cryptocurrencies are not perfect, nor are they a universal replacement for national currencies. But perfection is not the benchmark. The real comparison is with fiat systems that guarantee depreciation over time. Cryptocurrencies represent a financial rebellion — not against money itself, but against unchecked monetary control. In an age of inflation and institutional fatigue, they are not just speculative assets. They are a statement: that money can exist beyond politics, and value beyond manipulation. #📈பங்குச்சந்தை தகவல்
📈பங்குச்சந்தை தகவல் - ShareChat
00:10
#📺அரசியல் 360🔴
📺அரசியல் 360🔴 - ShareChat
00:10
விசிகவின் வேலையால் திமுகவிற்கு ஆபத்தா? ராமதாஸ் இருக்கிற கூட்டணியில் விசிக இடம் பெறாது என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் தற்போது வரை உறுதியாக இருக்கிறார். எனவே ராமதாஸ்-பாமகவினால் திமுக கூட்டணியில் இன்று வரை இடம் பெற முடியவில்லை. பேச்சு வார்த்தையையும் தொடர முடியவில்லை என சொல்லப் படுகிறது. இப்போது இதுதான் 2026 தேர்தலில் திமுகவிற்கு பெரிய தலைவலியாக மாறிவருகிறது. அது எப்படி? ராமதாசின் பாமகவானது திமுக கூட்டணிக்கு தீண்டத் தகாத கட்சி என்றால், தேர்தலில் வன்னியர்களின் ஓட்டுக்கள் மட்டும் எப்படி அவர்களுக்குக் கிடைக்கும்? இது அரசியலைத் தாண்டி ஏதோ ஒரு வகையில் எதிர்பாராத அளவில் சாதிப் பிரச்சினையாக மாறிவிட்டதே என திமுக வட்டாரங்களிலேயே ஆதங்கத்துடன் விவாதிக்கப் படுகிறது. இந்த விஷயத்தில் பொதுமக்கள் கருத்துகூட திமுக கூட்டணிக்கு சாதகமாக இல்லை. இது தேர்தலில் பலமாக எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. சாதி... சாதி... சாதி... இல்லையா பிறகு? மனிதன் செவ்வாய் கிரகத்தில் காலனிகளை உருவாக்க முனையும் இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளியே கிடையாதா? இதுதான் தமிழக மக்களின் ஆதங்கம். ஆ. ராசா போன்ற தலைவர்களும் பொறுப்பற்ற வகையில் பேசி வைத்தது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல ஆகிவிட்டது. நாளை கூட்டணி வெற்றிகரமாக அமைந்தாலும், கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒற்றுமையுடன் தேர்தல் வேலை பார்ப்பார்களா? அப்படியே அவர்கள் பார்த்தாலும் பல்வேறு சமுதாய மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இன்று இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான், பல வட மாநிலங்களை விடவும் சாதிரீதியாக மக்கள் அதிகம் பிளவு பட்டு நிற்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. வேங்கைவயல் சாதி சம்பவங்கள் இன்னும் தொடர்கின்றன. காலங்காலமாக சமூக நீதியையும் பகுத்தறிவையும் வாயளவில் பேசிக்கொண்டே சாதித்தீயை வளர்த்து விட்டது திராவிடக் கட்சிகள்தான். 1967க்குப்பின், கடந்தகால வரலாற்றினை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் BJP, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளைக்கூட இந்த விஷயத்தில் குறை சொல்ல முடியாது. கிட்டத்தட்ட இன்றுவரை அது தொடர்கிறது என்றும் கூறலாம். அதே போல புதிய கட்சிகளான தவெக மற்றும் நாதக கட்சிகளையும் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. எப்படிப் பார்த்தாலும், இந்த தேர்தல் திமுகவிற்கு ஓர் அக்கினிப் பரீட்சையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே கடந்த தேர்தல்களைப் போலவே திராவிடம், மதவாதம், மத்திய அரசின் மேல் பழி, பிராமண எதிர்ப்பு இவற்றையே பேசி, மத ஆதரவு மற்றும் சாதிக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக கரைசேர முடியுமா என்பது டிரில்லியன் டாலர் கேள்வி! #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:05