நாம் வாழும் உலகம் - டான்டலஸின் நரகமா?
எதிர் பாராமல் லாட்டரி அடித்த மாதிரி அக்கவுண்டில் வந்து சுளையாக 5000 ரூபாய் விழுந்ததில் மக்கள் எல்லாம் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். ஒரு நாள் காலைப் பொழுதில் நாடே நரி முகத்தில் விழித்தது மாதிரி இருந்தது! அடுத்து 10000 (கருணைத் தொகை) பற்றி பேச்சாக இருக்கிறது. எனவே, முதலில் மேற்கண்ட கேள்வியை இந்த சமயத்தில் கேட்டதே தவறு. அது சரி, யாரந்த டான்டலஸ்?
பண்டைய கிரேக்கக் கதையில் வரும் டான்டலஸ் என்பவன், செழிப்பின் நடுவில் தண்டனை அனுபவித்த மனிதன். கழுத்தளவு தண்ணீரில் நின்றாலும் தாகம் தீர்க்க முடியாமல் தவித்தான். தலைக்கு மேல் பழங்கள் தொங்கின; ஆனால் எட்டினால் அவை விலகின. அருகிலேயே இருந்தும் அனுபவிக்க முடியாத தண்டனை! இன்று அந்த 'டான்டலஸ் நரகம்' கதையல்ல. அது உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் நடைமுறை உண்மை.
இன்றைய உலகில் செல்வத்திற்கு குறைவில்லை. உணவு உற்பத்தி அதிகம். தொழில்நுட்பம் எல்லையை தாண்டி வளர்ந்துள்ளது. ஆனால் மக்களில் பெரும்பான்மையினர் அடிப்படை தேவைகளுக்கே போராடுகின்றனர். ஒரு பக்கம் அபரிமிதம், மறுபக்கம் பற்றாக்குறை. காரணம் இயற்கையல்ல — மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகள். அரசு தரும் இலவசங்கள் எல்லாம் எத்தனை நாட்களுக்கு வரும்? அரசியல் போர் நடத்துகிறது; போர் அரசியலை இயக்குகிறது. சூப்பர் பவர்களின் ஆயுதங்கள் இன்று துப்பாக்கிகள் அல்ல — பொருளாதார தடைகள்.
* 100%, 300%, 500% வரி விதிப்புகள் – யாருக்காக?
* முழுமையான இறக்குமதி தடை – யாரை பாதிக்கிறது?
* பாதுகாப்பு கொள்கை, எதிர் பாதுகாப்பு திட்டங்கள், அதனால் ஆகும் செலவுகள் – இதன் முடிவில் பாதிக்கப்படுவது யார்?
பணம் என்பது பரிமாற்றத்தின் சின்னம். ஆனால் அதன் சுதந்திரம் மறுக்கப்படும் போது, பணமே தனது அர்த்தத்தை இழக்கிறது. உதாரணமாக, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் டாலர் முதலீடுகள் முடக்கப்பட்டுள்ளன, வர்த்தம் தடைசெய்யப் பட்டுள்ளது. வாங்க முடியாத பணம், வாழ முடியாத மனிதனை உருவாக்குகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகப் புகழ்பெற்ற ஒரு ஆடைகள் தயாரிப்பு நிறுவனம், கோடிக்கணக்கான மதிப்புள்ள விற்கப்படாத உடைகளை அழித்தது. காரணம் – பிராண்டு மதிப்பு காக்கப்பட வேண்டும் என்ற கொள்கை. அதே நேரத்தில், கோடிக்கணக்கான மக்கள் உடுத்த உடையின்றி தவிக்கின்றனர். அந்த அழிப்பு சட்டவிரோதமல்ல; ஆனால் மனிதத்துக்கு எதிரான குற்றம்.
இயற்கை மனிதனுக்கு பாகுபாடின்றி எல்லாவற்றையும் கொடுக்கிறது. ஆனால் அரசுகளின் சட்டங்களும், நிறுவனங்களின் கொள்கைகளும் அதை மறுக்கின்றன. பழம் தொங்குகிறது — எட்ட முடியவில்லை.
தண்ணீர் உள்ளது — தாகம் தீரவில்லை. கம்யூனிசம், காபிடலிசம், சோஷலிசம் போன்ற எண்ணற்ற சித்தாந்தங்கள். எதுவும் மனிதனை முழுமையாக்கவில்லை. காரணம் அவை அரசமைப்புகளை மாற்றின; மனித மனங்களை மாற்றவில்லை.
அதனால்தான் இன்று மேற்கத்திய உலகின் பார்வை வேதாந்தத்தின் பக்கம் திரும்புகிறது. வேதாந்தம் கடவுளைப் பற்றியது மட்டுமல்ல.
அது அறிவின் உச்சம். ஆசை, உரிமை, பிரிவினை ஆகிய அனைத்தும் மாயை என்று அது சொல்கிறது. மனிதகுலத்திற்கு இன்றைய தேவை ஒரு புதிய சித்தாந்தம் அல்ல; மன மாற்றம், உலகளாவிய பண்பாட்டு மாற்றம். ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அமைப்புகள் புறக்கணிக்கப்படும் வரை, இது கனவாகவே இருக்கும்.
ஆனால் நம்பிக்கை என்னும் ஓர் ஒளிக்கீற்று இருக்கிறது.
இணையம், மொபைல் போன்,
சமூக ஊடகங்கள் போன்ற அறிவியல் வளர்ச்சிகள் எல்லைகளை உடைத்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம் பல நாடுகளை ஒரே சந்தையாக மாற்றியது. பறவைகளுக்கு எல்லைகள் இல்லை, மனிதர்களுக்கு ஏன்? உலகம் ஒரே சந்தையாக மாற வேண்டும். உலகமே ஓர் உயிரினமாக மாறும்போது, ஓர் இடத்தில் வலி என்றால், மற்ற இடங்களிலும் அதிர்வு ஏற்படும். அந்த நாளில், தீர்வுகள் அரசுகளிடமிருந்து அல்ல — பொறுப்புள்ள நிறுவனங்களிடமிருந்து வரும்.
உலகத் தலைவர்கள் அணுகுண்டுகள் மற்றும் பாதுகாப்புக் கேடையங்கள் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் பேச வேண்டியது “அமைதியான மனிதகுலம்” பற்றி. இன்றைய கல்வி திறமைகளை கற்றுத் தருகிறது; நெறிகளை அல்ல. மனிதன் செல்வத்தை நாடுகிறான் — மன மகிழ்ச்சிக்காக, அமைதிக்காக.
ஆனால் மற்ற மனிதர்களின் மகிழ்ச்சிசயையும் அமைதியையும் பலியிட்டு அதைப் பெற முயல்கிறான்.
நரகம் டான்டலசுக்கு கிட்டிய தண்டனை. நாம் வாழும் நரகம் — நாம் எடுத்துக் கொண்ட தேர்வு. தண்ணீர் இங்கேயே உள்ளது. பழமும் அருகிலேயே உள்ளது. அவற்றை அனுபவிக்க தடையாக நிற்கும் சுவர்களை இடிப்பதே இன்றைய மனிதனின் உண்மையான அறிவு.
#tn #TNPolitics #Tantalus
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
மத்திய கிழக்கில் இந்தியாவின் புதிய சமநிலை அரசியல்
பிரதமர் மோடி அவர்களின் இஸ்ரேல் விஜயம் சமீப கால சர்வதேச அரசியலில் முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா - ஈரான் இடையில் நிலவி வரும் ஒரு பதற்றமான சூழலில், இந்தியா–இஸ்ரேல் உறவு சில வட்டாரங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆனால், இந்த உறவை ஒரே கோணத்தில் பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.
வரலாற்றை நோக்கினால், இந்தியா காலங்காலமாக பாலஸ்தீன பிரச்சினையிலும், வளைகுடா அரசியல் விவகாரங்களிலும் அரபு நாடுகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது. ஐ.நா. சபை விவாதங்களில் இந்தியா பலமுறை பாலஸ்தீன மக்களின் உரிமையை வலியுறுத்தியுள்ளது. அதேவேளை, காஷ்மீர் பிரச்சினையில் பல அரபு நாடுகள் பாகிஸ்தான்பக்கம் சாய்ந்து செயல்பட்ட நிகழ்வுகளும் உள்ளன. இதனால் சர்வதேச அரசியல் என்பது நிரந்தர நண்பர்களும் நிரந்தர விரோதிகளும் இல்லாத ஒரு தளமாக இருப்பது தெளிவாகிறது.
சமீப காலத்தைய சவுதி அரேபியா–பாகிஸ்தான் இராணுவ ஒத்துழைப்பை எடுத்துக்கொள்வோம். இது, “ஒரு தரப்பு தாக்கப்பட்டால், அது இருநாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும்" என்ற பரஸ்பர பாதுகாப்பு ஷரத்தினைக் கொண்ட ஓர் ஒப்பந்தமாகும். துருக்கி போன்ற நாடுகளும் பாகிஸ்தானுடன் பல்வேறு தளங்களில் நெருக்கம் காட்டி வருகின்றன. இதையெல்லாம் இந்தியா விமர்சனம் செய்ததில்லை. அதே சமயம், இந்தியா -இஸ்ரேல் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறது!
பாகிஸ்தானைப் போலவே இந்தியா மத்திய கிழக்கில் தன்னுடைய தேசிய நலன்களை பாதுகாக்க ஒரு வலுவான கூட்டாளியைத் தேடுவதில் தவறு இல்லையே? மேலும், பாக் அதை எதிர்க்கிறது என்றால், அது இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை!
NATO போன்ற அமைப்புகள் பாதுகாப்பு அடிப்படையில் உருவானவை. அதைப் போலவே, சில முஸ்லிம் நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது என்பதும் உண்மை. எனவே, இந்தியா–இஸ்ரேல் உறவு பரஸ்பர நலன், தொழில்நுட்ப முன்னேற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வளர்வது இயல்பான ஒன்றே.
இஸ்ரேலுக்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு நம்பகமான நட்பு நாடு தேவைப்படுகிறது; அதேபோல், இந்தியாவுக்கும் மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் புலனாய்வு ஒத்துழைப்பு முக்கியம். இந்த உறவு ஒருவரை எதிர்த்து உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; மாறாக, பரஸ்பர தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு நடைமுறை அரசியல் அணுகுமுறை.
இந்தக் காலகட்டத்தில் மத அரசியலுக்கும் அப்பாற்பட்டு, சரியோ தவறோ ஒரு நாட்டிற்கு பிற நாடுகளுடன் எல்லைத் தகராறு, பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், வணிகம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியில் போட்டி, நதிகள் மற்றும் கடல்களின் மீதான ஆதிக்கம், பொறாமை போன்ற பல்வேறு காரணங்களை முன்னிட்டு பகைமை ஏற்படுகிறது. எனவே ஒரு நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு இத்தகைய ஒப்பந்தங்கள் தவிர்க்க முடியாதவை, தேவையும் கூட!
உலக அரசியலிலும் கடல்களிலும் அமெரிக்கா தனது ராணுவ வலிமையை வெளிப்படுத்துகிறது என்பதற்காக, பிற நாடுகள் தங்களுக்குள் வணிகம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற நியதி எதுவும் இல்லை. உலக அரசியல் இன்று பல்துறை/பல்முனைக் கூட்டணிகளின் காலகட்டமாக மாறியுள்ளது. தேவைக்கேற்ப ஒரு நாடு பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயல்படுவதைப் பார்க்கிறோம்.
அதனால், இந்தியாவின் புதிய சமநிலை அரசியல் நிலைப்பாட்டினை, "எல்லோருடனும் நட்பு, யாரிடமும் அடிமைத்தனம் இல்லாமல்" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்க வேண்டியது அவசியம். தேசிய நலன்களே இறுதியில் எந்த நாட்டின் வெளிநாட்டு கொள்கையையும் வழிநடத்துகின்றன.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
இந்தியா–மலேஷியா நல்லுறவு: ஒரு நல்ல தொடக்கம்
இந்தியா மற்றும் மலேஷியா இடையிலான நல்லுறவு சமீப காலங்களில் புதிய திசையில் நகர்ந்து வருகிறது. இது ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு அல்ல; உலக அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு உருவாகும் மாற்றத்தின் அறிகுறியாக பார்க்கலாம்.
பல ஆண்டுகளாக பாகிஸ்தான், சில இஸ்லாமிய நாடுகளை இந்தியாவிற்கு எதிராக திருப்ப முயற்சி செய்து வந்தது. குறிப்பாக காஷ்மீர் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து, இந்தியாவை சர்வதேச அரங்கில் விமர்சிக்க முயன்றது. இந்த முயற்சிகளில் சில சமயங்களில் மலேஷியாவும் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரித்தது. இதனால் இந்தியா–மலேஷியா உறவில் சில பதட்டங்கள் ஏற்பட்டன.
ஆனால் உலக நாடுகள் இப்போது நிகழ்வுகளை ஆழமாக கவனிக்கத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானின் உள்நாட்டு நிலைமை, பயங்கரவாத குற்றச்சாட்டுகள், மற்றும் இரட்டை நிலைப்பாடுகள் பலருக்கும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. இதனால் பல இஸ்லாமிய நாடுகள் தங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாகவே இந்தியா–மலேஷியா நல்லுறவின் புதிய தொடக்கம் உருவாகியுள்ளது.
உலகளவில் முஸ்லிம் மக்கள் தொகையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக, சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியா உலகின் மிகப்பெரிய முஸ்லிம் சிறுபான்மை மக்களை கொண்ட நாடாகும். உலக முஸ்லிம் மக்கள் தொகையில் சுமார் 11 சதவீதம் இந்தியர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடி தலைமையில், இந்தியா உலக அரங்கில் நம்பிக்கைக்குரிய நாடாக உருவெடுத்து வருகிறது. பல நாடுகளுடன் இந்தியா வணிகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உறவை வலுப்படுத்தி வருகிறது. இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை தற்போது சமநிலையுடன் செயல்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இது வெறும் அரசியல் கூற்று அல்ல; இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதனை உறுதி செய்கிறது. இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. இஸ்லாமியர்களும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் போன்ற துறைகளில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இன்று மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் இந்துக்களாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் அங்கே ஒற்றுமையாக வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் அவர்கள் “இந்தியர்கள்” என்ற ஒரே அடையாளத்தில்தான் பார்க்கப்படுகிறார்கள். இது இந்திய சமூகவாழ்க்கையின் வலிமையை காட்டுகிறது.
சில நாடுகளில், குறிப்பாக பங்களாதேஷ் போன்ற இடங்களில், அரசியல் இலாபத்திற்காக மத உணர்வுகளை தூண்டி சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராகச் செயல்படும் நிலை காணப்படுகிறது. ஆனால் இந்தியாவில், பல சவால்கள் இருந்தாலும், இந்து–முஸ்லிம் ஒற்றுமை அடிப்படையில் நிலைத்து நிற்கிறது. மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ விரும்புகின்றனர்.
இந்த சூழ்நிலையில், இந்தியா–மலேஷியா நல்லுறவு வளர்ச்சி பெறுவது இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். வணிகம், கல்வி, கலாசாரம், சுற்றுலா போன்ற துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட்டால், அது ஆசியப் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கும் உதவும்.
முடிவாகச் சொன்னால், இந்தியா–மலேஷியா நல்லுறவு ஒரு நல்ல தொடக்கம் மட்டுமல்ல; அது உலக அரசியல் மாற்றங்களை உணர்ந்து உருவாகும் புதிய புரிதலின் வெளிப்பாடு. இந்த நல்லுறவு தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
The Ledger of Lions: How Florence and the Medici Minted Modern Finance
In the sun-drenched streets of 15th-century Florence, a revolution was unfolding that had nothing to do with paint brushes or marble chisels. While Brunelleschi was raising the dome of the Duomo, a different kind of architecture was being perfected in the counting houses of the Medici Bank: the architecture of modern capitalism. At the heart of this transformation was the double-entry system, a bookkeeping method that would become the "language of business" for centuries to come.
The Florentine Crucible
Before the Renaissance, bookkeeping was often a disorganized list of debts and assets. However, as Florence grew into a global hub for the wool trade and international banking, the complexity of commerce outpaced simple ledgers. The Florentine merchants realized they needed a system that provided a holistic view of financial health — one that could track not just what they had, but where it came from and where it was going.
The double-entry system provided this clarity. By ensuring that every transaction was recorded twice — once as a debit (an entry on the left side of an account) and once as a credit (an entry on the right) — the system created a self-balancing mechanism. This mathematical symmetry ensured that the fundamental accounting equation always remained in equilibrium:
Assets = Liabilities + Equity
The Medici Mastery
While they didn't "invent" the system — that credit often goes to Franciscan friar Luca Pacioli, who first codified it — the Medici family were the ones who weaponized it. Under the leadership of Giovanni di Bicci de’ Medici and later Cosimo "the Elder," the Medici Bank became the most powerful financial institution in Europe.
By utilizing double-entry bookkeeping, the Medici could manage a vast network of branches across London, Geneva, and Naples from their headquarters in Florence. It allowed them to:
Detect fraud and error: If the books didn't balance, a mistake had been made.
Calculate profit accurately: They could distinguish between cash flow and actual wealth.
Manage risk: They could see their total exposure across different currencies and kingdoms at a glance.
A Legacy in Ink
The history of bookkeeping is often dismissed as dry, yet it was the bedrock of the Renaissance. The wealth generated by these precise ledgers funded the masterpieces of Michelangelo and Donatello. The Medici proved that information was just as valuable as gold; by mastering the flow of data through debits and credits, they transitioned from mere money-changers to the "Godfathers of the Renaissance."
Today, every digital spreadsheet and banking app still breathes the spirit of 15th-century Florence. We live in a world built on the balanced ledger — a testament to a time when the stroke of a pen in a Florentine account book changed the course of economic history forever.
#banking #finance #florence #finance
ராகுல் காந்தி கேட்ட மன்னிப்புக்கள்…
பொதுவெளியில் பேசும் அரசியல் தலைவர்களுக்கு சொற்களின் பொறுப்பு மிக அதிகம். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் ஆதாரங்களுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அது அரசியல் விமர்சனம் அல்ல, அவதூறாக மாறிவிடும். ராகுல் காந்தி பல முறை இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு “சௌகிதார் சோர் ஹை” என்ற கூற்றை அவர் தொடர்ந்து பயன்படுத்தினார். இதை நரேந்திர மோடி மீது நேரடி குற்றச்சாட்டாகக் கருதி, விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. அப்போது கருத்தை தவறாகப் பேசிவிட்டதாகக் கூறி, அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் அதற்கு விளக்கமும் அளித்தார்.
அதேபோல் 2023 ஆம் ஆண்டு “மோடி” என்ற குடும்பப்பெயரைப் பற்றிய கருத்து தொடர்பாக சூரத் மாவட்ட நீதிமன்றம் அவதூறு வழக்கில் தண்டனை வழங்கியது. இதனால் அவர் எம்.பி. பதவியையும் இழந்தார். பின்னர் இந்திய உச்சநீதிமன்றம் தண்டனையை இடைநிறுத்தியது. இந்த சம்பவம் அரசியல் பேச்சின் வரம்புகள் குறித்து பெரிய விவாதத்தை எழுப்பியது.
வெளிநாடுகளிலும் அவர் இந்திய அரசியல் சூழலை விமர்சித்துள்ளார். உதாரணமாக University of Cambridge நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக அமைப்புகள் அழுத்தத்துக்கு உள்ளாகின்றன என்று கூறினார். மேலும் ல்வேறு கடல் கடந்த காங்கிரஸ் கட்சி கூட்டங்களிலும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக அரசை விமர்சிப்பது இயல்பு தான்; ஆனால் அந்த விமர்சனம் நாட்டின் கௌரவத்தை பாதிக்கக் கூடாது என்பது மிகவும் முக்கியம்.
சமீபத்தில் எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர் இருப்பதாகவும், அதனால் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அழுத்தங்களுக்கு அவர் அடிபணிந்து போனதாகவும் கூறியதாக செய்திகள் வெளியானது. இத்தகைய குற்றச்சாட்டுகள் மிகவும் மோசமானவை, அரசியல் நாகரீகம் அற்றவை. உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இவ்வாறு பேசுவது பொறுப்பற்ற செயலாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் விவாதங்களில் தீவிரம் இருக்கலாம்; ஆனால் அது நாட்டின் இறையாண்மையை குறை கூறும் அளவுக்கு செல்லக் கூடாது.
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? தவறு நடந்தால் ஆதாரங்களுடன் வெளிப்படுத்த வேண்டும். ஊகங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டக் கூடாது. நீதிமன்ற கண்டனம் வந்தபின் மன்னிப்பு கேட்பது ஒரு நடைமுறை. ஆனால் முதலில் தவறான குற்றச்சாட்டை பரப்பியதில் ஏற்பட்ட பாதிப்பு என்ன? மக்கள் மனதில் உருவான சந்தேகத்தை எப்படி நீக்குவது?
தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் “ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்குகின்றனர்” என்று கூறுவது அரசியல் ரீதியாக பலன் தரலாம். ஆனால் அது நீண்ட காலத்தில் நம்பகத்தன்மையை பாதிக்கும் அபாயமும் உள்ளது. மன்னிப்பு கேட்டால் சட்ட ரீதியாக பிரச்சினை முடிந்துவிடலாம். ஆனால் அரசியலில் நம்பிக்கையை மீண்டும் பெற, சொற்களில் பொறுப்பும், ஆதாரங்களில் தெளிவும் அவசியம்.
ஜனநாயகத்தில் விமர்சனம் அவசியம். அதே நேரத்தில், பொறுப்பும் அவசியம். இரண்டிற்கும் இடையில் சமநிலையை பேணுவதே ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவரின் உண்மையான பலம்.
#Rahul Ghandhi #Modi #Epstein
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
The axis of Trump, Epstein, and Netanyahu...
The political relationship between Donald Trump and Benjamin Netanyahu has often been described as strong, strategic, and sometimes controversial. Over the years, their partnership has been shaped by shared political goals, common rivals, and personal calculations. Recently, new discussions have added the late financier Jeffrey Epstein to this already complicated picture.
During Trump’s first term as U.S. president, he and Netanyahu appeared closely aligned. They agreed on many key issues, especially in the Middle East. One of their main shared goals was taking a hard position against Iran. Netanyahu strongly supported tougher economic sanctions and military pressure on Tehran. Trump withdrew the United States from the Iran nuclear deal and increased sanctions, a move that pleased Netanyahu. Both leaders presented themselves as strong defenders of national security and used their alliance to strengthen support at home.
At the same time, both Trump and Netanyahu have faced serious legal challenges in their own countries. Trump has dealt with multiple investigations and court cases in the United States. Netanyahu has faced corruption charges in Israel and long court battles. Because of these pressures, some observers believe their international partnership also served a domestic purpose. By standing together on the global stage, each leader could project strength and distract from legal troubles at home.
However, reports suggest that their relationship has not always been smooth. In recent years, some media outlets have claimed that Trump privately criticized Netanyahu over his handling of regional conflicts, including tensions in Gaza and negotiations involving Iran. There have even been reports that Trump suggested the idea of a pardon for Netanyahu regarding his corruption trials, though such claims remain politically sensitive and debated.
The situation became more complex when newly released documents and emails from 2026 mentioned Jeffrey Epstein in discussions about U.S.-Israel relations. According to these reports, Epstein once claimed he had influence over diplomatic matters between the two countries. While there is no clear public evidence proving such influence, the mere suggestion has led to intense speculation.
Some political commentators have gone further, suggesting that Netanyahu might have access to complete, unedited Epstein files. This has led to theories that such information could be used as leverage in political negotiations. These claims remain unproven, but they have fueled debates about power, secrecy, and influence at the highest levels of politics.
Epstein also had connections in Israel, including ties to Netanyahu’s political rival, Ehud Barak. Netanyahu has pointed to these connections in political arguments, calling for investigations into those relationships.
Recently, Trump and Netanyahu met in Washington to discuss negotiations with Iran and a Gaza peace initiative described as a “Board of Peace.” Netanyahu has also promoted what he calls a “hexagon” alliance strategy, presenting regional politics as a struggle between opposing power blocs, or “axis versus axis.”
In simple terms, the relationship between Trump and Netanyahu is based on shared interests, political survival, and regional strategy. But it is also surrounded by legal troubles, personal tensions, and ongoing speculation. As new information emerges, the story continues to evolve, showing how global politics is often shaped by both public alliances and private pressures.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
“துரு ஏறாதது உலோகம் அல்ல, தமிழரின் அறிவும் பண்பாடும்!”
திமுக, திராவிடம் என்ற ஒரு கோடு போட்டால் திருமா ரோடு போடுவார்! இருந்தாலும், திருமா போன்றவர்களால் தங்கத்திற்கு நிகரான தமிழரின் வரலாற்றை மறைக்கவோ மாற்றவோ முடியாது! காலங்களை கடந்த தமிழரின் கலாச்சாரம் புடம் போட்ட தங்கத்திற்கு ஒப்பானது. அந்த தங்கத்திற்கே திராவிடம் என்ற குறை வந்து சேரலாம். ஆனால், தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அது தரத்தினில் குறைவதில்லை என்பது கண்ணதாசனின் வாக்கு! சரி, துரு ஏறாத உலோகமான ஐம்பொன் என்ற விஷயத்திற்கு வருவோம்.
“ஐம்பொன்" என்பது கலை, ஆன்மீகம், வரலாறு ஆகிய மூன்றின் சங்கமம், தமிழரின் பண்பாட்டு அடையாளம், பஞ்சபூதங்கள் உறைந்த உலோகம் மற்றும் சோழர்கள் விட்டுச் சென்ற துருவாத செல்வம்! "துருவாத" என்ற சொல், இலக்கிய பிரயோகத்தில் அழியாத, நிலைத்த, மாறாத அல்லது மறையாத என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. குறிப்பாக, "துருவாத முத்தம்" போன்ற வரிகளில் நிலைத்திருக்கும் தன்மையைக் குறிக்கப் பயன்படுகிறது.
“துரு ஏறாத கலவை” என்றால் தமிழர் நினைவுக்கு முதலில் வரும் சொல்லே ஐம்பொன். ஐம்பொன் அல்லது பஞ்சலோகம் என்பது தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம் (துத்தம்) மற்றும் ஈயம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையாகும். ஒவ்வொரு உலோகமும் தனித்துவமான பண்புகளை கொண்டிருந்தாலும், அவை ஒன்றிணையும் போது உருவாகும் கலவை வெறும் உலோகம் அல்ல; அது அறிவியல், ஆன்மீகம், கலை, வரலாறு ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு பண்பாட்டு சின்னமாக மாறுகிறது.
சிலை - தெய்வத் தொழில்நுட்பம்: பழங்காலம் தொட்டே தமிழகக் கோவில்களில் இறை திருமேனிகள் பெரும்பாலும் ஐம்பொன்னால் வடிக்கப்பட்டன. இதற்கு காரணம் அதன் நீடித்த தன்மை மட்டுமல்ல. சிலை வடிப்பில் பயன்படுத்தப்படும் ‘மூலக்கலம்’ (Lost Wax Technique) என்ற நுட்பம், உலகின் பழமையான மற்றும் சிக்கலான உலோகவடிப்பு (Casting) தொழில்நுட்பங்களில் ஒன்று. சோழர்கள் இந்தக் கலையை உச்சத்துக்கு கொண்டு சென்றனர். ஒவ்வொரு சிலையும் ஒரே வார்ப்பில் மட்டும் உருவாகும்; அதனால் ஒவ்வொரு ஐம்பொன் சிலையும் தனித்துவமானது.
விலைமதிப்பற்ற உலோகக் கலவை:
ஐம்பொன் தனிப்பட்ட உலோகங்களை விட விலை உயர்ந்ததாகக் கருதப் படுகிறது. காரணம், அதில் உள்ள தங்கம் போன்ற விலைமதிப்புள்ள உலோகங்கள் மட்டுமல்ல; கலையம்சம், வரலாற்று மதிப்பு, ஆன்மீக நம்பிக்கை ஆகியவை அதன் மதிப்பை பலமடங்கு உயர்த்துகின்றன. குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் இன்று உலகளாவிய கலைச் சந்தையில் கோடிக்கணக்கில் மதிப்பிடப் படுகின்றன.
ஐதீகம் மற்றும் நம்பிக்கை: “சிலைகள் ஐம்பொன்னால் செய்யப்பட வேண்டும்” என்பது வெறும் ஐதீகம் அல்ல; அது ஒரு கலாச்சார விதியாகவே நிலைபெற்றது. காரணம், ஐம்பொன் துரு ஏறாமல் நீண்ட காலம் தாங்கும் தன்மை கொண்டது. அதேசமயம், தெய்வீக சக்திகளை சமநிலையுடன் பிரதிபலிக்கக் கூடியதாகவும் நம்பப்படுகிறது.
அறிவியல் - பாரம்பரிய நம்பிக்கை:
* உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்
* இரத்த ஓட்டத்தை சீராக்கும்
* சரும நோய்களைத் தடுக்க உதவும்
இன்றைய அறிவியல் பார்வையில், சில உலோகங்கள் உடலில் மின்காந்த தாக்கத்தை ஏற்படுத்தி நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடும் என கூறப்படுகிறது. இதுவே “நேர்மறை ஆற்றல்” என்ற பாரம்பரிய கருத்துக்கான அறிவியல் விளக்கம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
ஐம்பொன் ஆபரணங்களை அணிவது, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும், கண் திருஷ்டியை குறைக்கும் மற்றும் மனஅமைதியை தரும் என நம்பப்படுகிறது. குறிப்பாக நவக்கிரக ஆபரணங்கள், யந்திரங்கள் ஆகியவை ஐம்பொன்னில் செய்யப்பட்டால் அதன் பலன் அதிகம் என ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள்.
பஞ்சபூதங்களும் ஐம்புலன்களும்:
ஐம்பொன், பஞ்சபூதங்கள் (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்) மற்றும் ஐம்புலன்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) ஆகியவற்றின் சமநிலையை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. அதனால், ஐம்பொன் ஆபரணங்களை அணிவது உடலும் உள்ளமும் இணையும் சமநிலையை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
வரலாற்று உண்மைகள்: சோழர் காலத்தில் ஐம்பொன் சிலை வடிப்பு ஒரு அரசு ஆதரவு பெற்ற கலை. அந்த சோழ மன்னர்களையே இழிவு படுத்துவதே திராவிடர்களின் வேலை! கோவில்கள் வெறும் வழிபாட்டு இடங்கள் அல்ல; வரலாற்றில் அவை கலைக் கூடங்கள் மற்றும் பொருளாதார மையங்கள் ஆகவும் இருந்தன. அந்தக் கால சிலைகளில் காணப்படும் உடற்கூறு துல்லியம், முகபாவனை, இயக்கம் ஆகியவை இன்றைய நவீன கலைஞர்களையும் வியக்க வைக்கின்றன.
கலைப் பொக்கிஷங்களும் சிலை கடத்தலும்: இத்தகைய மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகள் இன்று சிலை கடத்தல் என்ற பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளன. பல சோழர் கால சிலைகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு அருங்காட்சியகங்களில் அல்லது தனியார் சேகரிப்புகளில் இருக்கின்றன. சமீப ஆண்டுகளில் இந்திய அரசு பல ஐம்பொன் சிலைகளை மீட்டு நாட்டுக்கு கொண்டு வந்துள்ளது; இது ஒரு பண்பாட்டு மீட்பு இயக்கமாகவே பார்க்கப்படுகிறது.
புகழ்பெற்ற ஐம்பொன் சிலைகள்:
* நடராஜர் (சிதம்பரம்) – உலகப் புகழ்பெற்ற சோழர் கலை உச்சம்
* சோமாஸ்கந்தர் சிலை – குடும்ப தெய்வீகத்தின் குறியீடு
* பிரகதீஸ்வரர் கோவில் ஐம்பொன் சிலைகள் (தஞ்சாவூர்)
* திருவாரூர் தியாகராஜர் – அசைவுச் சிலை மரபின் சிறந்த எடுத்துக்காட்டு
முடிவாக, ஐம்பொன் ஒரு உலோகக் கலவை மட்டுமல்ல. அது தமிழர் அறிவியல், ஆன்மீகம், கலை, வரலாறு ஆகியவற்றின் சங்கமம். அதனை திராவிடம் போன்ற கொள்கைகளால் மறைத்துவிட முடியாது. அதை பாதுகாப்பது என்பது ஒரு பொருளை காப்பது அல்ல; ஒரு நாகரிகத்தின் நினைவுகளை பாதுகாப்பதே.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
திவால் மன்னர் டிரம்ப்!
இந்தியாவின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of the People Act, 1951) சட்டம் திவாலானவர்களைத் தேர்தலில் போட்டியிடத் தடை செய்கிறது. நிதி நேர்மையும், பொது நம்பிக்கையும் ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதால், கடன் சுமையால் சட்டரீதியாக திவாலானவர் பொதுப் பதவியில் அமருவது ஏற்றதல்ல என்ற அடிப்படையில் இந்த விதிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒருவர் திவாலான நிலையைச் சட்டப்படி சரிசெய்து (discharge) விட்டால், அவருக்கு மீண்டும் தேர்தலில் நிற்கும் உரிமை கிடைக்கும். அதாவது, சட்டம் தவறை நிரந்தரமாக முத்திரை குத்துவதில்லை; ஆனால் பொது நிதி ஒழுக்கத்தை முன்னிலைப் படுத்துகிறது.
இந்தப் பின்னணியில் Donald Trump குறித்து எழும் விவாதம் சுவாரஸ்யமானது. டிரம்ப் தனது தொழில் நிறுவனங்களுக்காக மொத்தம் ஆறு முறை திவாலான நிலைக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவை அனைத்தும் அவரது நிறுவனங்களைச் சார்ந்தவை; அவர் தனிப்பட்ட முறையில் திவாலானதாக அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சட்ட அமைப்பில் “corporate bankruptcy” என்பது வணிகத் தீர்மானங்களின் ஒரு பகுதி; அது தனிநபர் திவாலாக கருதப்படாது.
1991-ல் அட்லாண்டிக் சிட்டியில் இருந்த Trump Taj Mahal கேசினோ மிகப்பெரிய கடன் சுமையால் திவாலானது. அதன் பின்னர் 1992-ல் Trump Castle மற்றும் Trump Plaza Hotel ஆகிய நிறுவனங்களும் கடன் பிரச்சினையால் திவாலானது. 2004-ல் Trump Hotels and Casino Resorts சுமார் 1.8 பில்லியன் டாலர் கடன் சுமையுடன் மறுசீரமைப்புக்கு சென்றது. 2009 மற்றும் 2014-ல் Trump Entertainment Resorts மீண்டும் திவாலான நிலையை எதிர்கொண்டது.
1991 முதல் 2014 வரை தொடர்ச்சியாக டிரம்பின் வணிகத் தோல்விகள் கணிசமாகத் தெரிகின்றன. கேசினோ மற்றும் கேளிக்கைத் துறையிலேயே அவரது முதலீடுகள் அதிகம் இருந்தன; அவை அதிக ஆபத்தான (high risk) துறைகள் என்பதும் உண்மை. ஆதரவாளர்கள், “இது வணிக உலகின் இயல்பான அபாயம்; சட்டரீதியான மறுசீரமைப்பு மூலம் நிறுவனங்களை மீட்டெடுப்பது திறமையின் அடையாளம்” என வாதிடுகிறார்கள். விமர்சகர்கள், “தொடர்ச்சியான திவால்கள் ஒரு தவறான நிதி மேலாண்மையின் சின்னம்” எனக் கூறுகிறார்கள்.
அமெரிக்க ஜனநாயக அமைப்பு, ஒருவரின் வணிகப் பின்னணியை ஒரு தடையாகக் கருதவில்லை. அதனால் டிரம்ப் சட்டரீதியாக United States ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது: ஒரு தலைவரின் வணிகத் தோல்விகள், அவரது அரசியல் திறனை நிர்ணயிக்க வேண்டுமா? அல்லது அரசியல் என்பது "வேறு திறன்களின்" வெளிப்பாடா?
ஜனநாயகத்தில் இறுதி தீர்ப்பளிப்பவர்கள் மக்கள். அவர்கள் வேட்பாளரின் கடந்தகாலத்தையும், அவரின் வாக்குறுதிகளையும், அவரைச் சுற்றியுள்ள அரசியல் சூழலையும் கணக்கில் கொண்டு முடிவு செய்கிறார்கள். சிலர் அதை மக்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாகப் பார்க்கிறார்கள். மற்றவர்கள் அதை ஓர் அரசியல் கட்சியின் பிரச்சார திறமையாகக் கருதுகிறார்கள்.
டிரம்ப் சட்டப்படியே அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலும், ஒரு பாரம்பரியமிக்க ஜனநாயக நாடான அமெரிக்காவை ஆள்வதற்கு மக்கள் எப்பேர்ப்பட்ட தலைவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் நமக்கு அதன் மாண்பை எண்ணி பெருமிதமாக இருக்கிறது. பொதுமக்களை பாராட்டுவதா அல்லது அவர் சார்ந்த கட்சியை பாராட்டுவதா? தலை சுற்றுகிறது!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
அரசியல் வரலாறு Vs வரலாற்று அரசியல்
அரசியல் வரலாறு (Political History) என்பது கடந்த காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள், தலைவர்கள், அமைப்புகள், தேர்தல்கள் மற்றும் கொள்கைகளை வரிசைப்படுத்துவது.
மையப்புள்ளி: "கடந்த காலத்தில் என்ன நடந்தது?" என்பதை அப்படியே ஆவணப்படுத்துவது இதன் நோக்கம்.
எடுத்துக்காட்டு: இந்திய சுதந்திரப் போராட்டம், சோழர் கால நிர்வாக முறை அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியின் எழுச்சி பற்றி படிப்பது.
வரலாற்று அரசியல் (Politics of History): தற்போதைய அரசியல் நலன்களுக்காக அல்லது ஒரு குறிப்பிட்ட கருத்தியலை நிலைநிறுத்துவதற்காக வரலாற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் (அல்லது மாற்றுகிறார்கள்) என்பது.
மையப்புள்ளி: "வரலாறு ஏன் இவ்வாறு சொல்லப்படுகிறது?" என்பது இதன் நோக்கம். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்குச் சாதகமாக வரலாற்றை விளக்குவது அல்லது சில பகுதிகளை மறைப்பது இதில் அடங்கும்.
எடுத்துக்காட்டு: பாடப்புத்தகங்களில் சில வரலாற்றுத் தலைவர்களை மட்டும் முன்னிலைப்படுத்துவது அல்லது சில நிகழ்வுகளைத் தங்களுக்குச் சாதகமாகத் திரித்துக் கூறுவது.
சுருக்கமாகச் சொசன்னால்,
அரசியல் வரலாறு என்பது அரசியலின் கடந்த காலம்; வரலாற்று அரசியல் என்பது கடந்த காலத்தை வைத்துச் செய்யப்படும் அரசியல்.
வரலாற்று அரசியலும் திரிபுகளும்: வரலாறு என்பது உண்மைகளின் தொகுப்பாக இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் 'அரசியல் வரலாறு' என்பது பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிக்கேற்ப 'வரலாற்று அரசியலாக' மாற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுருக்கப்பட்டு, பல தியாகிகளின் பங்களிப்புகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டன என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. இது ஒருதலைப்பட்சமான வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் செயலாகும்.
இதே நிலைதான் தமிழகத்திலும் தொடர்கிறது. திராவிட இயக்கங்கள் தங்களின் அரசியல் இருப்பை நிலைநிறுத்த, வரலாற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. இதில் திராவிடக் கட்சிகள் மட்டுமன்றி, விசிக போன்ற இயக்கங்களும் ஒரு குறிப்பிட்ட கருத்தியலை நோக்கி வரலாற்றைத் திருப்புகின்றன.
குறிப்பாக, தமிழ் மன்னர்களின் அடையாளங்கள் சிதைக்கப்படுவது கவலையளிக்கிறது. உலகமே வியந்து பார்க்கும் சோழர்களைத் 'தெலுங்கர்கள்' என்று அடையாளப்படுத்துவதும், பல்லவர்களைத் 'தமிழர்கள் இல்லை' என ஒதுக்குவதும் தமிழர்களின் உண்மையான பெருமையைச் சிறுமைப்படுத்தும் செயலாகும்.
வரலாற்றைத் திரிப்பது என்பது வெறும் அரசியல் உத்தி மட்டுமல்ல, அது எதிர்காலச் சந்ததியினரின் வேர்களை அறுக்கும் திசைதிருப்பும் செயல். ஒரு இனத்தின் உண்மையான அடையாளத்தை மறைத்து, கற்பிதங்களை வரலாறாக மாற்றுவது அந்த இனத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உண்மையான வரலாற்றுத் தரவுகளை மறைப்பதோ அல்லது திரிப்பதோ தமிழர்களுக்கு எந்தப் பெருமையையும் தந்துவிடாது. மாறாக, நம் முன்னோர்களின் உண்மையான வீரத்தையும் கலாச்சாரத்தையும் சிதைப்பதாகவே அமையும். எனவே, அரசியல் கலப்பற்ற உண்மையான வரலாற்றைக் கற்பிப்பதே எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்யும் நீதியாகும்.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை



