💞அல்லாஹ்வே !
எங்கள் எஜமானே!
எங்களை படைத்தவனே !
ரிஜ்க் அளிப்பவனே !
மன்னிப்பவனே !
அருட் கொடையாளனே !
நீ தான் எங்கள் பாதுகாவலன் !
நீ தான் வணக்கத்துக்குரியவன் எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக!
எங்களுடைய தவறுகளை பொருட்படுத்தாமல்
விட்டுவிடு வாயாக !
குறைவாக இருந்தாலும் உன் மார்க்க சேவையில் ஈடுபட தவ்பீக்
செய்வாயாக !
நீ எங்களை படைத்தவன் !
நாங்கள் படைக்கப்பட்டவர்கள்!
நீ ரிஜ்க் அளிப்பவன்!
நாங்கள் ரிஜ்க் அளிக்கப்படுபவர்கள்!
நீ மன்னிப்பவன் நாங்கள் உன்னிடம் மன்னிப்பை தேடுபவர்கள்!
நீ அருட்கொடையாளன்!
நாங்கள் உன்னிடம் யாசிப்பவர்கள்!
இந்த ஏழை உன்னுடைய தர்பாரில் கை யேந்தி நிற்கிறேன்!
நாங்கள் எந்த நிலையிலும் நீ மட்டுமே எங்களின் வணக்கத்துக்குரியவன் ,
என உன்னை மட்டுமே
வணங்கிவருபவர்கள்!
எங்கள் பாவங்களை மன்னித்து எங்களின் இம்மை மறுமை தேவைகளை நிறைவேற்று வாயாக !
யா அல்லாஹ்!
எங்களில் நோயுற்றவர்களுக்கு பூரண உடல் நலத்தைத் தருவாயாக!
எங்களில் மறைந்துவிட்டவர்களின் மீது கருணை காட்டுவாயாக!
சோதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியத்தை அளிப்பாயாக!
எங்களின் பிளவுகளை ஒன்றினைப்பாயாக!
எங்களின் பசிக்கு உணவளிப்பாயாக!
எங்களின் அச்சத்திலிருந்து பாதுகாப்பு தருவாயாக!
எங்களின் பலவீனத்தை சக்தியாக மாற்றுவாயாக!
நாங்கள் அறியாதவற்றை கற்றுக்கொடுப்பாயாக!
எங்களை வழிகேட்டிலிருந்து நேர்வழி காட்டுவாயாக!
யா அர்ஹமுர் ராஹிமீன்!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!
#🕌இஸ்லாம்


