ShareChat
click to see wallet page
search
எதுக்கு வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள்,ஆனால் ஒருவரின் அன்பு வேண்டும் என்பதற்காக அழுது வடியாதீர்கள். எதற்கு வேண்டுமானாலும் கெஞ்சிக் கொண்டிருங்கள், ஆனால் ஒருவரின் ப்ரியத்துக்காக கெஞ்சிக் கொண்டிருக்காதீர்கள். எதற்கு வேண்டுமானாலும் ஏங்கி உயிரை விடுங்கள்,ஆனால் ஒருவரின் காதலுக்கு ஏங்கிச் சாவாதீர்கள். எதற்கு வேண்டுமானாலும் தனிமையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்,ஆனால் ஒருவரின் அன்பின் நிராகரிப்பற்காக தனிமையில் வாடாதீர்கள். எதற்கு வேண்டுமானாலும் மண்டியிடுங்கள்,ஆனால் ஒருவரின் உதாசீனத்துக்கு அடிபணிந்து மண்டியிடாதீர்கள். எதற்கு வேண்டுமானாலும் அதிலேயே வெந்து சாம்பாலாகுங்கள்,ஆனால் இந்த நேசத்திற்காக அதிலியே இருந்து வேகாதீர்கள் வெளியேறி விடுங்கள். இந்த அத்தனை வேதனைகளும், இந்த அத்தனைத் துயரங்களும் அன்பிற்காக மட்டுமே நடக்கும். அந்த ஒரு தூய நரகத்தின் ராட்சஸனுக்காக மட்டுமே நிகழும். வேறு எதற்கும் இவ்வளவு சிரமப்பட்டிருக்க மாட்டோம். வேறு எதற்கும் இவ்வளவு அழுதிருக்க மாட்டோம். வேறு எதற்கும் இவ்வளவு வலியை ருசித்திருக்க மாட்டோம். எல்லாம் அந்தப் பாழாய்ப் போன ஒற்றை அன்பிற்காகத் தான் இவ்வளவும்.. #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat