*பத்மாவதி தாயார்...* 🙏🌹
ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் பிறந்ததால், பத்மாவதி என்று அழைக்கப்பட்டார். சீனிவாசனாக பிறவி எடுத்த வெங்கடேசப் பெருமாள் இவரை மணப்பதற்காகத்தான் குபேரனிடம் கடன் பெற்றார் .
ஆகாசராஜன்: புராண காலத்தில் திருப்பதி பகுதியை ஆட்சி செய்தவர். இவர் மகளாகத்தான் பத்மாவதி தாயார் வளர்ந்து வந்தார்.
வகுளாதேவி: யசோதையின் மறுஅவதாரமாக வகுளாதேவி பார்க்கப்படுகிறார். சீனிவாசன் இவரது ஆசிரமத்தில்தான் தங்கி இருந்தார். இவர் சமைத்த உணவைத்தான் விரும்பி சாப்பிடுவார். இன்னமும் திருமலையில் இருக்கும் மடப்பள்ளியில் இவரது திரு உருவச்சிலை வைக்கப்பட்டிருக்கும். இவரது மேற்பார்வையில்தான் நைவேத்தியத்துக்கு உரிய உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆண்டாள்: சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாளின் மகிமையைப் போற்றும் வண்ணம் இப்போதும் பிரம்மோத்ஸவத்தின் போது ஶ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாளுக்கு அணிந்த மாலையை கொண்டுவர அதை பெருமாள் பரம சந்தோஷத்துடன் அணிந்து கொள்கிறார். ஆண்டாளின் மேன்மையான பக்தியைப் போற்றும் விதமாக மார்கழி மாதத்தில் சுப்ரபாதம் இசைக்கப்படுவதில்லை அவரது திருப்பாவை மட்டுமே பாடப்படுகின்றது.
தொண்டைமான் சக்கரவர்த்தி: திருப்பதி ஏழுமலையான் குடி கொண்டிருக்கும் ஆனந்த நிலையம், தங்கத்தகடுகளால் ஜொலிக்கும் பேரழகு, எல்லோரையும் கவரும் ஓர் அரிய அம்சம். அந்த ஆனந்த நிலையத்தை அமைத்தவர் தொண்டைமான் சக்கரவர்த்தி.
ஶ்ரீராமாநுஜர் : திருமலையில் வெங்கடேசப் பெருமாளுக்கு வைகானாஸ முறைப்படி ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் அத்தனை பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்குக் காரணம் இவரே. உடையவர், யதிராஜர் எனப் பலராலும் அன்போடு அழைக்கப்படும் இவர், திருமலை முழுவதும் பெருமாளே என்று அபிப்பிராயமும் நம்பிக்கையும் உள்ளவர். அதனால் இவர் முழங்காலிட்டுதான் திருமலைப் படிகளைக் கட்ந்து வந்து சாமி தரிசனம் செய்தார். இப்போது நடக்கும் ஆர்ஜித சேவைகள், பிரமோத்ஸவம் எல்லாமே இவரது கட்டளைப்படியே நடந்து வருகின்றன.
திருமலைநம்பி: ஶ்ரீராமாநுஜரின் தாய்மாமன். அவருக்கு ஆசிரியராக இருந்து பலவற்றையும் கற்றுத்தந்தவர். கோவிந்தப் பெருமாளின் மேல் மாறாத பக்தி கொண்டவர். பெருமாளின் அபிஷேகத்துக்கு உரிய புனித நீரை தினமும் ஆகாச கங்கையிலிருந்து சுமந்து வந்து பூஜித்தவர். ஶ்ரீராமாநுஜரால் வைகானஸ ஆகம முறைப்படி திருமலையில் இன்று வரை நடைபெறும் கைங்கர்யங்களுக்கு காரணகர்த்தா இவர்தான்.
குலசேகர ஆழ்வார்: செடிகொடிகள் போல அடர்ந்திருக்கும் தீய வினைகளை அகற்றும் திருமாலே! உன் கோயிலின் வாசல் படியாகக் கிடந்து, அடியவர்களும் வானவரும், அரம்பையரும் ஏறி இறங்கும் படியாகக் கிடப்பேன் என பாசுரங்கள் பாடி பெருமாளின் அன்பைப்பெற்றவர்.
கிருஷ்ண தேவராயர் : விஜய நகர பேரரசர். வெங்கடேசப் பெருமாளின் பரம பக்தர். இவர் வழங்கிய நகைகளும் நன்கொடைகளும் இன்றளவும் திருப்பதியின் பெரும் சொத்தாகத் திகழ்கின்றன. ஆந்திராவிலிருக்கும் நாகலாபுரம் இவரது தாயார் பிறந்த ஊராகும். திருப்பதி வெங்கடேசப்பெருமாளின் பெருமையை நிலைநாட்டும் விதமாக, இவரது ஆட்சிகாலத்தில், தமிழகத்திலும்,ஆந்திராவிலும் கட்டப்பட்ட பெருமாள் கோயில்களின் எண்ணிக்கை ஏராளம். வைணவம் தழைக்க இவர் ஆற்றிய பணிகள் அளவிடமுடியாதவை.
அன்னமய்யா: - தாளப்பாக்கம் அன்னமய்யாவின் கீர்த்தனைகள் பெரும்புகழ்பெற்றவை. பெருமாளின் மீது பக்தி ரசம் சொட்டும் 32 ஆயிரம் கீர்த்தனைகளைப் பாடியவர்.
தரிகொண்ட வெங்கமாம்பா:- பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தவர். அன்று தொடங்கிய அன்னதானம் தங்கு தடையின்றி இன்றுவரை நடந்து வருகிறது. ஒருநாளைக்கு சராசரியாக 60 ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.
ஹாதிராம் பாவாஜி: கடவுளைத் தேடி வட இந்தியாவிலிருந்து வந்தவர். திருமலையிலிருப்பவரே தெய்வமென தங்கிவிட்டார். திருமலை இன்று லட்சக்கணக்கான மக்கள் செல்லுமிடமாக இருக்கிறது. ஒரு காலத்தில் இவரது ஆசிரமத்தைப் பார்க்க பெரும் கூட்டம் சென்றுவந்தது.
பிரதிவாதி பயங்கரம் அண்ணன்: - திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு சுப்ரபாதம் இயற்றிப் பாடியவர். மணவாள மாமுனிகள் கேட்டுக்கொண்டதற் இணங்க 73 ஸ்லோகங்களாக சுப்ரபாதத்தைப் பாடினார். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி :- இவர் பாடிய சுப்ரபாதத்தில் மயங்காதவர் யார்? விடியற்காலையில் இதைக்கேட்டால் மனம் எங்கிருந்தாலும் பெருமாள் வசம் வந்து சேரும். சுப்ரபாதம் பாடல் அடங்கிய ரெக்கார்டர்கள், கேசட்டுகள், சிடிக்கள்விற்பனையின் மூலம் கிடைத்த கிடைக்கும் பணம் அனைத்தையும் பெருமாளுக்கே காணிக்கையாக்கினார். கோடிகளைத் தாண்டிய அந்தப் பணம் முழுவதும் பெருமாளுக்கும் அவர்தம் பக்தர்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.
*)
*ஓம் நமோ நாராயணா நமஹ*🌹 #god
*ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய, ஒரே நேர்க் கோட்டில் அமைந்த... மூன்று நரசிம்மர் ஆலயங்கள்!*🌹
நரசிம்ம அவதாரம் ஸ்ரீ மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகும். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதை உலகத்தோருக்கு உணர்த்திய வகையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரமாக கருதப்படுகிறது. பக்தி மட்டுமே பிரதானமாக கருதி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். ஸ்ரீ நரசிம்மருக்கு தமிழ் நாட்டில் அஷ்ட நரசிம்மர் ஆலயங்கள் என்று சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள் கோவில், அந்திலி மற்றும் சிந்தலவாடி ஆகிய இடங்களில் கோவில்கள் உள்ளன. ஆனால் ஒரே நேர்க் கோட்டில் அமைந்துள்ள மூன்று நரசிம்மர் ஆலயங்களை ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இந்த கோவில்கள் சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
1. சிங்கிரிக்குடி
புதுச்சேரியிலிருந்து சிங்கிரிக்குடி ஆலயம் மிக அருகில் உள்ளது. எனவே, ஒரே நாளில் இந்த மூன்று ஆலயங்களை வழிபட விரும்புவோர்கள் புதுச்சேரியிலிருந்து இந்த நரசிம்மர் வழிபாட்டை துவங்கலாம். சிங்கிரிக்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் திருநாமம் ‘ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்’ என்பதாகும். இவர் உக்கிர நரசிம்மராக காட்சியளிக்கிறார். இவர் 16 கரங்களுடன் காட்சியளிக்கிறார். இரண்டு கரங்கள் இரணியகசிபுவின் உடலை கிழித்தபடியும், மற்ற கரங்களில் பிரயோக சக்கிரம், ஷீரிகா என்னும் குத்துக்கத்தியால் ராட்சசனின் தலையை அறுத்தல், மற்றொரு கையில் கத்தியால் அசுரன் ஒருவனை கொல்லுதல், ஒரு கையால் இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலை கிழிப்பது, மற்ற கரங்களில் சங்கம், கதை, வில், கேடயம், வெட்டப்பட்ட தலை என்று காட்சி தருகிறார். இங்கேயிருக்கும் தாயாரின் திருநாமம் கனக வல்லி தாயாராகும். இங்கு வந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத்தடை, எதிரிகள் தொல்லை அனைத்தும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது சிங்கிரிக்குடி.
2. பூவரசங்குப்பம்
நேர்க்கோட்டில் உள்ள நரசிம்மர் வரிசையில் இரண்டாவதாக செல்ல வேண்டியது பூவரசங்குப்பம் நரசிம்மர் ஆலயம். இது சிங்கிரிக்குடியிலிருந்து 26 கி. மீ தொலைவில் உள்ளது. இந்த தலத்திலும் ‘ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ‘ என்னும் திருநாமத்துடனேயே அருள்பாலித்து வருகிறார். மூலவர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் அமிர்தவல்லி தாயாரை அணைத்து கொண்டிருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். இந்த நரசிம்மரை வழிபட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிணிகள், மற்றும் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
3. பரிக்கல்
பூவரசங்குப்பத்தில் இருந்து 39 கி. மீ தொலைவில் உள்ளது மூன்றாவதாக வழிபட வேண்டிய பரிக்கல் நரசிம்மர் ஆலயம். இங்கேயும் இறைவன் திருநாமம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், தாயார் திருநாமம் கனகவல்லி தான். பதவி உயர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள், இழந்த பதவியை மீண்டும் அடைய முயற்சிப்பவர்கள் இங்கே வந்து வழிபாடு செய்து பயன் பெறலாம். விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் சுமார் 21 கி. மீ தொலைவில் பரிக்கல் இருக்கிறது.
இந்த மூன்று லட்சுமி நரசிம்மர் கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. ஒரே நாளில் இந்த மூன்று நரசிம்மர் ஆலயங்களுக்கும் சென்று இறைவனை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. வரிசைப்படி காலையில் சிங்கிரிகுடி, பகலில் பூவரசங்குப்பம், இறுதியில் பரிக்கல் என்று தரிசிக்க வேண்டும். இந்த முறையில் தரிசித்தால் கடன், குடும்பப்பகை, மற்ற குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.🌹 #god
அமாவாசைக்கு அடுத்த திதி பிரதமை. அதற்கு அடுத்த திதி துவிதியை. அமாவாசையை அடுத்து வரும் துவிதியை இரவு நேரத்தில் இருக்குமானால், அந்த நாளை சந்திர தரிசன நாளாக ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் குறிப்பார்கள்.
காலண்டர்களிலும் சந்திர தரிசனம் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதை மூன்றாம் பிறை என்றும் சொல்வர்.
மூன்றாம் பிறை தரிசனம் பலவகையிலும் மனிதர்களுக்கு நன்மையை அளிக்கும். சிலருக்கு ஜாதகத்தில் ஆயுள் தோஷம் இருக்கும். சிலருக்கு தீராத நோய் இருக்கும். அவர்களுக்கு சந்திர தரிசனம் மிகச் சிறந்த பரிகாரம்.
சந்திர தரிசனத்தன்று ( இன்று ) மாலையில் சூரியன் மறைந்த பிறகு இரவு 7.30 மணிக்குள் வானில் தெரியும் பிறைச்சந்திரனை தரிசித்து விட வேண்டும்.
சந்திர தரிசனம் சனிக்கிழமைகளில் வருவது மிகவும் சிறப்பானது. அதிலும் சித்திரை மாதத்தில் வரும் சனிக்கிழமையில் சந்திர தரிசனம் செய்வது ஒரு ஆண்டு மூன்றாம் பிறையை பார்த்த பலனை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மன பலத்தை தருபவர் சந்திரன். மனபலம் இருந்துவிட்டால் நோய்கள் அணுகாது, எந்தவித பயமும் இருக்காது, செயல்களில் தடங்கல் இருக்காது.
எனவே மனபலம் பெற்று வாழ்வை தைரியத்துடன் நடத்த இன்றைய தினம் சந்திர தரிசனம் செய்வோம்.
அவ்வாறு தரிசிக்கும் போது,
__எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி ..._
_திருவருள் தருவாய் சந்திரா போற்றி ..._
_சத்குரு போற்றி. சங்கடந் தீர்க்கும். சதுரா போற்றி._
#god
*அம்பலப்புழா கிருஷ்ணன்: பக்தர்களின் குறையறுக்கும் ‘பால கோபாலன்’!*🌹
தென்னாட்டின் துவாரகா என போற்றப்படும் அம்பலப்புழா கிருஷ்ணர் கோவில் மிகவும் பழமையானது. அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் கேரளாவில் உள்ள ஏழு பெரிய வைணவ கோவில்களில் ஒன்றாகும்.
ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் அர்ஜுனனின் தேரோட்டியான பார்த்தசாரதி கோலத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வலது கையில் சாட்டையுடனும், இடது கையில் சங்கு ஏந்தியும் காட்சி தருகிறார்.
இக்கோவில் கி.பி.பதினேழாம் நூற்றாண்டுகளில் செம்பகச்சேரி சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான பூராடம் திருநாள் தேவ நாராயணன் தம்புரானால் கட்டப்பட்டது.
இக்கோவில் கேரள கட்டடக்கலை பாணியில் அமைந்துள்ளது. கருவறையை சுற்றியுள்ள சுவர்கள் அழகான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் பால்பாயசம் முக்கியமான பிரசாதமாகும். இக்கோவில் பாயசத்தை தினம் குருவாயூரப்பன் வந்து ஏற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. அரிசி, ஏலக்காய், பால், சர்க்கரை சேர்த்து செய்யப்படும் இந்த பிரசாதம் மதிய நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இக்கோவில் காலை 3 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். 1789 ல் திப்பு சுல்தான் படையெடுப்பின் போது குருவாயூர் கோவிலின் கிருஷ்ணர் சிலை இங்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் இக்கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. ஆற்றங்கரையில் கட்டப்பட்டதால் இந்த இடம் 'அம்பலப்புழா' என அழைக்கப்படுகிறது. அம்பலம் என்றால் கோவில், புழை என்றால் ஆறு.
இக்கோவிலில் 'ஆராட்டு விழா' சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இவ்விழாவின்போது 'வேலக்களி' எனும் ஆட்டம் நடத்தப்படுகிறது. அது தவிர ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ராம நவமி போன்ற விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து வேண்டிச் செல்ல அவர்களின் துன்பங்கள் நீங்கி விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.🙏🌹 #god
இன்று உலக பாரம்பரிய தினம்...!!
மனித இனத்துக்கே பொதுவானவை இயற்கை வளங்கள். ஆனால் கவனிப்பாரற்று இந்த பழங்கால பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இனத்திற்கும் பல்வேறு ஒவ்வொரு வகையான பாரம்பரிய பெருமைகள் உண்டு. நாட்டுக்கு அழகும் பெருமையும் சேர்ப்பது அதன் பழங்கால சின்னங்கள், இயற்கை எழில் மிகுந்த இடங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவையே. ஆனால் மாறிவரும் நவீன உலகத்தில் எண்ணற்ற பாரம்பரியங்களை இழந்துள்ளோம். இன்றும் இழந்து கொண்டே தான் இருக்கிறோம்.
மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் மேலும்
பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1983-ம் ஆண்டு ஏப்., 18ம் தேதி யுனெஸ்கோ(UNESCO) நிறுவனத்தால் உலக பாரம்பரிய தினம்(World Heritage Day) ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. 😊😊😊 #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
*📖✍
~வரலாற்றின்~
~தொகுப்புகள்~
`🌍 ஏப்ரல் 18 – உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்`
1. 1506 – வத்திக்கானில் புதிய St. Peter’s Basilica ஆலயத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.
2. 1521 – ஜெர்மனியில் நடந்த Diet of Worms கூட்டத்தில் மார்ட்டின் லூதர் தனது கருத்துகளை திரும்பப் பெற மறுத்தார்.
3. 1689 – போஸ்டனில் Sir Edmund Andros ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி எழுந்தது.
4. 1738 – ஸ்பெயினில் Royal Academy of History நிறுவப்பட்டது.
5. 1775 – அமெரிக்க விடுதலைப் போரின் முன்னோட்டமாக Paul Revere தனது புகழ்பெற்ற இரவு சவாரியைத் தொடங்கினார்.
6. 1783 – அமெரிக்காவில் Three-Fifths Compromise என்ற வரலாற்றுச் சட்டத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
7. 1831 – அமெரிக்காவின் University of Alabama நிறுவப்பட்டது.
8. 1847 – அமெரிக்கா மெக்சிகோ போரில் Battle of Cerro Gordo வெற்றி பெற்றது.
9. 1864 – Battle of Dybbøl போரில் Prussia மற்றும் Austria இணைந்து Denmark-ஐ தோற்கடித்தன.
10. 1897 – Greco-Turkish War அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
11. 1906 – அமெரிக்காவின் San Francisco நகரை பேரழிவு நிலநடுக்கம் தாக்கியது; ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
12. 1923 – நியூயார்க் நகரில் புகழ்பெற்ற Yankee Stadium முதல் முறையாக திறக்கப்பட்டது.
13. 1942 – இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் Doolittle Raid ஜப்பான் டோக்கியோ மீது நடத்தப்பட்டது.
14. 1945 – புகழ்பெற்ற போர் செய்தியாளர் Ernie Pyle ஓகினாவா போரில் கொல்லப்பட்டார்.
15. 1949 – Ireland அதிகாரப்பூர்வமாக குடியரசாக அறிவிக்கப்பட்டது.
16. 1951 – European Coal and Steel Community உருவாக்கப்பட்டது; இது பின்னர் ஐரோப்பிய ஒன்றியமாக வளர்ந்தது.
17. 1955 – உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி Albert Einstein மரணமடைந்தார்.
18. 1956 – மொனாக்கோ இளவரசர் Rainier III, நடிகை Grace Kellyயை திருமணம் செய்தார்.
19. 1980 – Zimbabwe பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடானது.
20. 1983 – லெபனானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுத் தாக்குதல் நடந்தது; 63 பேர் உயிரிழந்தனர்.
21. 1999 – ஹாக்கி வீரர் Wayne Gretzky தனது கடைசி NHL போட்டியை விளையாடினார்.
22. 2012 – அமெரிக்க தொலைக்காட்சி பிரபலமான Dick Clark மரணமடைந்தார்.
23. 2016 – இசை நாடகம் Hamilton Pulitzer Prize வென்றது.
24. 2023 – Fox News, Dominion வழக்கில் $787.5 மில்லியன் இழப்பீடு வழங்க ஒப்பந்தமானது.
*🇮🇳 இந்திய வரலாற்றில் இன்று ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்*
1. 1859 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தாந்தியா தோப்பே பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டார்.
2. 1898 – கல்கத்தாவில் பிளேக் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
3. 1906 – இந்திய தேசியவாத இயக்கத்தில் சுதேசி உணர்வு வலுவடைந்த காலகட்டம்.
4. 1917 – மகாத்மா காந்தியின் சம்பரான் சத்தியாகிரகப் போராட்டம் தீவிரமடைந்தது.
5. 1919 – ஜல்லியன்வாலாபாக் படுகொலைக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் தொடர்ந்தன.
6. 1930 – உப்பு சத்தியாகிரகப் போராட்டம் பல மாகாணங்களில் விரிவடைந்தது.
7. 1938 – இந்திய தேசிய காங்கிரஸ் தொழிலாளர் உரிமைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றியது.
8. 1942 – க்விட் இந்தியா இயக்கத்துக்கான முன்னோட்ட அரசியல் ஆலோசனைகள் நடந்தன.
9. 1946 – பிரிட்டிஷ் அமைச்சரவை குழு இந்திய அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது.
10. 1948 – சுதந்திர இந்தியாவில் அகதிகள் மறுவாழ்வு திட்டங்கள் முன்னேற்றப்பட்டன.
11. 1950 – இந்திய தேர்தல் ஆணையத்தின் நிர்வாக அமைப்புகள் பலப்படுத்தப்பட்டன.
12. 1955 – பண்டிட் நேரு தலைமையில் ஆசிய-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு பேச்சுகள் முன்னேறின.
13. 1961 – இந்தியா பாதுகாப்புத் துறையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
14. 1965 – இந்தியா–பாகிஸ்தான் எல்லை பதற்றம் அதிகரித்த காலம்.
15. 1971 – கிழக்கு பாகிஸ்தான் அகதிகள் இந்தியாவுக்கு பெருமளவில் வந்தனர்.
16. 1975 – இந்திய விண்வெளி ஆராய்ச்சி முயற்சிகள் விரிவடைந்தன.
17. 1980 – இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு விரிவாக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
18. 1989 – போஃபோர்ஸ் விவகாரம் தொடர்பான அரசியல் விவாதங்கள் நாடாளுமன்றத்தில் எழுந்தன.
19. 1991 – பொருளாதார சீர்திருத்தத்துக்கான முன் ஆலோசனைகள் நடைபெற்றன.
20. 1999 – கார்கில் முன்பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்புகள் வலுப்படுத்தப்பட்டன.
21. 2001 – தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் உலகளாவிய வளர்ச்சி கவனம் பெற்றது.
22. 2008 – சந்திரயான் திட்டத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமடைந்தன.
23. 2014 – இந்திய பொதுத் தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் உச்சத்தை எட்டியது.
24. 2020 – கொரோனா கால ஊரடங்கு நடவடிக்கைகள் பல மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டன.
25. 2023 – இந்தியா டிஜிட்டல் சேவை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய திட்டங்களை அறிவித்தது.
🌟 சிறப்பு குறிப்புகள்:
தாந்தியா தோப்பே தூக்கிலிடப்பட்ட நாள் (1859) இந்திய விடுதலை வரலாற்றில் மிக முக்கியமான நினைவு நாள்
~🇮🇳 இந்திய வரலாற்றில்~ ~ஏப்ரல் 18ஆம் தேதி~
~🎂பிறப்புகள் &⚰️ இறப்புகள்~
`🎂 பிறப்புகள்`
1. 1858 – தூண்டி கேசவ கர்வே (Dhondo Keshav Karve) – பெண்கள் கல்வி முன்னோடி, சமூக சீர்திருத்தவாதி.
2. 1901 – கே. எம். முன்ஷி – எழுத்தாளர், அரசியல்வாதி, பாரதிய வித்யா பவன் நிறுவனர்.
3. 1902 – ஜி. வி. மாவளங்கர் – சுதந்திர இந்தியாவின் முதல் லோக்சபா சபாநாயகர்.
4. 1916 – லலிதா பவார் – இந்திய திரைப்பட நடிகை.
5. 1927 – நரசிம்ம ராவ் (P. V. Narasimha Rao) – முன்னாள் இந்திய பிரதமர் (சில ஆதாரங்களில் வேறு தேதி குறிப்பிடப்படுகிறது).
6. 1937 – டி. என். சேஷன் – முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்.
7. 1947 – ஜெயராம் ரமேஷ் – இந்திய அரசியல்வாதி, எழுத்தாளர்.
8. 1955 – சங்கர் மகாதேவன் – இசைக்கலைஞர் (சில ஆதாரங்களில் வேறு தேதி).
9. 1963 – பாலசுப்ரமணியம் குடும்பத்தைச் சேர்ந்த கலைத் துறையினர் பிறந்த தின குறிப்புகள் சில ஆதாரங்களில் வருகிறது.
10. 1972 – சமகால விளையாட்டு/கலைத் துறையினரின் பிறப்புகள் பல பதிவுகள் உள்ளன.
11. 1980கள் – பல இந்திய நிர்வாகிகள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் இந்த தேதியில் பிறந்துள்ளனர்.
`⚰️ இறப்புகள்`
1. 1859 – தாந்தியா தோப்பே (Tantia Tope) – 1857 இந்திய கிளர்ச்சியின் வீரத் தலைவர்; தூக்கிலிடப்பட்டார்.
2. 1955 – சி. ராஜகோபாலாச்சாரியின் நெருங்கிய அரசியல் சகாக்கள் தொடர்பான நினைவு நாள் பதிவுகள்.
*📖✍
~வரலாற்றின்~
~தொகுப்புக்கள்~
~நிறைவு~🙏
#வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
*இரவு நேர சிந்தனை*
17.04.26.
வாழ்க்கையில் மன்னிப்பும் புன்னகையும் ஒரு மனிதனின் மிகப்பெரிய ஆற்றலும் அடையாளமுமாக இருக்கிறது.
*நாம சரியா இருந்தா கோவப்பட அவசியமில்லை. நாம தப்பா இருந்தா கோவப்படத் தகுதியே இல்லை..*
வாழ்க்கையில் மனிதநேயத்துடன்
நீ நீயாக இருக்கும் வரை மட்டுமே
மகிழ்ச்சி உன்னுடையதாக ஆக இருக்கும்.
*அதாவது கஷ்டப் படுகிறவனிடம் சிரிப்பு இருக்காது. வாய் விட்டு சிரிப்பவனிடம் கஷ்டம் இருக்காது. ஆனால் கஷ்டத்திலும் சிரிப்பவனிடம் தோல்வி இருக்காது.*
எப்பொழுதும் மகிழ்ச்சிக்கே
முக்கியத்துவம் கொடுத்தால் .வெற்றி
நிச்சயம்.
*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.*
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
*"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்."*
*இனிய இரவு வணக்கம்*
#good nigh #good night
💫💕💫 *நாளை சந்திப்போம்* 💫💕💫 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎵Lyrical Status
💫💕💫 *இதமாகட்டும் இரவுகள்*💫💕💫 #🎵Lyrical Status #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
*💫💕💫 மெல்லிய இரவுகள்*💫💕💫 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎵Lyrical Status








![வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா - Tndias Wor1d {ೆ Heritage Sites amy 710 Rountuin Kalka Shlmla 1 LUILONILr ٥ ٢ ٢ + "80-0 On Mhal Fatchhpur Sihn Agra Fort Hll fort'olRan ihan ٥ ٧٨ a5 An 'Oldನ< _4]+10 ٢ 4 Wldlitc +5^00013 4443117513 110 9 70U7 ச07h0 Bodh Gayn | hampancr-Pawagadh ನDanl P0 SundarbanFNslional Park AAnla Caves Ellora Caves O೦runomp೧ auப و O೦lಧ 1 W,lern Ghats LOಭly0r 0ನ 4Uansinn 1411713 మ OUII 110 0Juq 4- 00 +|0 1951ட1 Chol 0 ٥ IHilqiil l[ Ghats' త Tndias Wor1d {ೆ Heritage Sites amy 710 Rountuin Kalka Shlmla 1 LUILONILr ٥ ٢ ٢ + "80-0 On Mhal Fatchhpur Sihn Agra Fort Hll fort'olRan ihan ٥ ٧٨ a5 An 'Oldನ< _4]+10 ٢ 4 Wldlitc +5^00013 4443117513 110 9 70U7 ச07h0 Bodh Gayn | hampancr-Pawagadh ನDanl P0 SundarbanFNslional Park AAnla Caves Ellora Caves O೦runomp೧ auப و O೦lಧ 1 W,lern Ghats LOಭly0r 0ನ 4Uansinn 1411713 మ OUII 110 0Juq 4- 00 +|0 1951ட1 Chol 0 ٥ IHilqiil l[ Ghats' త - ShareChat வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா - Tndias Wor1d {ೆ Heritage Sites amy 710 Rountuin Kalka Shlmla 1 LUILONILr ٥ ٢ ٢ + "80-0 On Mhal Fatchhpur Sihn Agra Fort Hll fort'olRan ihan ٥ ٧٨ a5 An 'Oldನ< _4]+10 ٢ 4 Wldlitc +5^00013 4443117513 110 9 70U7 ச07h0 Bodh Gayn | hampancr-Pawagadh ನDanl P0 SundarbanFNslional Park AAnla Caves Ellora Caves O೦runomp೧ auப و O೦lಧ 1 W,lern Ghats LOಭly0r 0ನ 4Uansinn 1411713 మ OUII 110 0Juq 4- 00 +|0 1951ட1 Chol 0 ٥ IHilqiil l[ Ghats' త Tndias Wor1d {ೆ Heritage Sites amy 710 Rountuin Kalka Shlmla 1 LUILONILr ٥ ٢ ٢ + "80-0 On Mhal Fatchhpur Sihn Agra Fort Hll fort'olRan ihan ٥ ٧٨ a5 An 'Oldನ< _4]+10 ٢ 4 Wldlitc +5^00013 4443117513 110 9 70U7 ச07h0 Bodh Gayn | hampancr-Pawagadh ನDanl P0 SundarbanFNslional Park AAnla Caves Ellora Caves O೦runomp೧ auப و O೦lಧ 1 W,lern Ghats LOಭly0r 0ನ 4Uansinn 1411713 మ OUII 110 0Juq 4- 00 +|0 1951ட1 Chol 0 ٥ IHilqiil l[ Ghats' త - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_748758_8e4fc23_1776534746821_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=821_sc.jpg)

