*இரவு நேர சிந்தனை*
17.04.26.
வாழ்க்கையில் மன்னிப்பும் புன்னகையும் ஒரு மனிதனின் மிகப்பெரிய ஆற்றலும் அடையாளமுமாக இருக்கிறது.
*நாம சரியா இருந்தா கோவப்பட அவசியமில்லை. நாம தப்பா இருந்தா கோவப்படத் தகுதியே இல்லை..*
வாழ்க்கையில் மனிதநேயத்துடன்
நீ நீயாக இருக்கும் வரை மட்டுமே
மகிழ்ச்சி உன்னுடையதாக ஆக இருக்கும்.
*அதாவது கஷ்டப் படுகிறவனிடம் சிரிப்பு இருக்காது. வாய் விட்டு சிரிப்பவனிடம் கஷ்டம் இருக்காது. ஆனால் கஷ்டத்திலும் சிரிப்பவனிடம் தோல்வி இருக்காது.*
எப்பொழுதும் மகிழ்ச்சிக்கே
முக்கியத்துவம் கொடுத்தால் .வெற்றி
நிச்சயம்.
*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.*
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
*"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்."*
*இனிய இரவு வணக்கம்*
#good nigh #good night
💫💕💫 *நாளை சந்திப்போம்* 💫💕💫 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎵Lyrical Status
💫💕💫 *இதமாகட்டும் இரவுகள்*💫💕💫 #🎵Lyrical Status #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
*💫💕💫 மெல்லிய இரவுகள்*💫💕💫 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎵Lyrical Status
விமானத்தில் தனியாக முதன்முதலாக
உலகைச்சுற்றி வந்த பெண் அமெரிக்காவைச் சேர்ந்த Jerrie Mock தனது பயணத்தை
நிறைவு செய்த தினம் இன்று.
( *17 ஏப்ரல் 1964* )
இவர் தனது பயணத்தை 19 மார்ச் 1964 ல் அமெரிக்கா Columbus, Ohio ல் துவங்கி இந்தியா உள்பட உலகம் முழுவதும் சுற்றி 17 ஏப்ரல் 1964 அன்று Columbus, Ohio ல் நிறைவு செய்தார்.
#வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
பிரிட்டிஷ் இந்தியாவில் முதன்முதலாக தற்கால மேற்கு வங்காள மாநிலம் Calcutta, Hooghly River நதிக்கரை ல் Calcutta Electric Supply Corporation Limited ல் Thermal power plant மின்சார உற்பத்தி நிலையம் துவங்கப்பட்ட தினம் இன்று.
( *17 ஏப்ரல் 1899*) #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
*ஏப்ரல் 17*
*தீரன் சின்னமலை*
இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai) 1756ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.
இவர் இருந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு வழங்கப்பட்டு வந்தபோது, ஒருமுறை இவர் வரிப்பணத்தை கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார்.
வரி கொண்டு சென்ற ஊழியரிடம் 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்' என்று கூறினார். அப்போதிலிருந்து, 'சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.
இவர் ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி இளைஞர்களுக்கு போர்ப் பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். 1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.
இவரை போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை தூக்கிலிட்டது. பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த தீரன் சின்னமலை தனது 49வது வயதில் (1805) மறைந்தார். #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
*ஏப்ரல் 17,*
*உலக ஹீமோபிலியா தினம்.*
உலக ஹீமோபிலியா தினம் (அ) உலக ரத்த உறையாமை தினம் ஏப்ரல் 17ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபிலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவு இருந்துக்கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது. இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
உயிரினங்கள் வாழ்வதற்குரிய பூமி அளவிலான புதிய Kepler-186f கிரகத்தை கண்டுபிடித்து அமெரிக்க NASA ன் Kepler உறுதி செய்த தினம் இன்று.
( *17 ஏப்ரல் 2014*)
Kepler-186f என்பது புவியிலிருந்து 492 ஒளியாண்டுகள் தொலைவில், செங்குறுமீன் கெப்லர் 186 சுழற்சிப்பாதையில் அமைந்துள்ள ஒரு புறக்கோள் ஆகும்.
#வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
#வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா விண்வெளி ஆய்வுக்கழகமான
ISRO ன் SLV வகையின் கடைசி செயற்கைக்கோளான
SLV-3, Sriharikota ல் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக
செலுத்தப்பட்ட தினம் இன்று.
( *17 ஏப்ரல் 1983*)
SLV வகை செயற்கைக்கோள்களின் திட்ட தலைவராக அணு விஞ்ஞானி A.P.J. அப்துல்கலாம் பணியாற்றினார்.
இத்திட்டத்தின்படி முதல் செயற்கைக்கோள் 1979 ல் ஏவப்பட்டது.
மொத்தம் நான்கு முறை ஏவப்பட்டதில் இரண்டாம் முறையும், கடைசி முறையும் ஏவப்பட்டவை வெற்றியடைந்தன.










