*புரட்சி கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம் இன்று*
பாரதிதாசன் ( ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல்
21 , 1964 )
பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்)
பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர்.
இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம்.
தமிழாசிரியராக பணியாற்றிய இவர்,
சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால்
பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும்
பாவேந்தர் என்றும் பரவலாக
அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும்
கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி
வந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய
வணிகராயிருந்த கனகசபை முதலியார்,
இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு
பிறந்தார். கவிஞரின் இயற்பெயர்
கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில்
பழநி அம்மையார் என்பாரை மணந்து
கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு
மொழிப் பள்ளியில் பயின்றார்.
ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற
காலமே கூடியது. தமது பதினாறாம்
வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்
மொழிப் பற்றும் முயற்சியால்
தமிழறிவும் நிறைந்தவராதலின்
இரண்டாண்டில் கல்லூரியிலேயே
முதலாவதாகத் தேர்வுற்றார்.
பதினெட்டு வயதிலேயே அவரின்
சிறப்புணர்ந்த அரசியலார் அவரை
அரசினார் கல்லூரித்
தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும்
அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி
அளிக்கத் தலைப்பட்டன.
சிறு வயதிலேயே
சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன்
எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக்
காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப்
பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப்
பாடினார். பாரதியாரும்
அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால்
கவிஞருக்கு அது தெரியாது.
அப்பாடலே அவரை பாரதியாருக்கு
அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று
பாரதி கூற பாரதிதாசன்
"எங்கெங்குக் காணினும் சக்தியடா"
என்று ஆரம்பித்து இரண்டு பாடலை
பாடினார். இவரின் முதற் பாடல்
பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய
கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக
சுப்புரத்தினம் எழுதியது
என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன்
இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ்
ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன்,
கிண்டல்காரன், பாரதிதாசன் என பல
புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிரத்
தொண்டராகவும் விளங்கினார்.
மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில்
மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
அதன் காரணமாக கடவுள் மறுப்பு,
சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை
தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக்
கதாசிரியரும் பெரும் கவிஞருமான
பாரதிதாசன் அரசியலிலும் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டார்.
புதுச்சேரி
சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா
அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று
பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு
கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற
நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய
அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய
படைப்புகள் தமிழ்நாடு அரசினரால்
1990இல் பொது
உடைமையாக்கப்பட்டன.
மறைவு
பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.
பாரதிதாசன் எழுதிய
புகழ் பெற்ற சில
வரிகள்.
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
பாரதிதாசனின்
ஆக்கங்கள்
பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை,
இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம்,
கட்டுரை ஆகிய வடிவங்களில்
வெளிட்டார். அவற்றுள் சில:
1. அம்மைச்சி (நாடகம்)
2. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு
(1948)
3. உரிமைக் கொண்டாட்டமா?,
குயில் (1948)
4. எது பழிப்பு, குயில் (1948)
5. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
6. கழைக்கூத்தியின் காதல் (நாடகம்)
7. கலை மன்றம் (1955)
8. கற்புக் காப்பியம், குயில் (1960)
9. சத்திமுத்தப் புலவர் (நாடகம்)
10. நீலவண்ணன் புறப்பாடு
11. பிசிராந்தையார், (நாடகம்) பாரி
நிலையம் (1967)
12. பெண்கள் விடுதலை
13. விடுதலை வேட்கை
14. வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,
குயில் புதுவை (1959)
15. ரஸ்புடீன் (நாடகம்)
இவை தவிர திருக்குறளின் பெருமையை
விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக்
கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
🌹🌹🌹 #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா


