சிவில் சேவை தினம் (Civil Service Day)
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று சிவில் சேவை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாறி வரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
சிவில் சேவையானது நாட்டின் நிர்வாக இயந்திரத்தை இயக்கும் முதுகெலும்பாக செயல்படுகிறது. இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மூலம் நிர்வாகத்தை இயக்க வேண்டியுள்ளது. அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இந்திய ஆட்சிப் பணிக்கு (Civil Service) உள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு சேவையானது பிரிட்டிஷ் அரசு கடைபிடித்த ஆட்சிப்பணி முறையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. இது 1947ஆம் ஆண்டிற்குப் பிறகே உருவாக்கப்பட்டது. உள்நாட்டு சேவைகளின் பொறுப்பை இந்திய நிர்வாகம் இயக்கி வருகிறது. 😊😊😊 #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா


