ShareChat
click to see wallet page
search
#vanthe maatharam வந்தே மாதரம் மீண்டும் ஒலிக்க போகுது! அதுகள் கதறும் பாருங்க அந்த ஒரிஜினல் பாடல் என்ன என்று தெரிய ஆவலா? 👇 Tamil Lyrics நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர் பூந்தென்றலும் கொழும்பொழிர் பசுமையும் வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை [வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ] தென்நிலவதனில் சிலிர்திடும் இரவும் தன்னியர் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேன்மொழி பொலியும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை [வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ] கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும் கோடி கோடி புயத்துணை கொற்றமார் நீடுபல்படை தாங்கி முன் நிற்கவும் கூடு திண்மை குறைந்தனை என்பதென் ? ஆற்றலின் மிகுந்தனை அரும்பதம் பூட்டுவை மாற்றவர் கொணர்ந்த வன்பகை ஓட்டுவை [வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ] அறிவு நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை மருமம் நீ , உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்தன்பு நீ ஆலயம்தோறும் அணி பெற விளங்கும் தெய்வ சிலைஎல்லாம் தேவி இங்குனதே [வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ] பத்து படைகொள்ளும் பார்வதி தேவியும் கமலத்து இடழ்கலிற் களித்திடும் கமலையும் அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ [வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ] திரு நிறைந்தனை தன்னிகர் ஒன்றில்லை தீது தீர்ந்தனை நீர் வளம் சார்ந்தனை மருவு செய்களின் நற்பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்றொளிர்ந்தனை பல்பணி பூண்டனை இரு நிலத்து வந்து எம்முயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவாம் [வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் ] 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
vanthe maatharam - atcant atcant - ShareChat