ShareChat
click to see wallet page
search
"ஷவ்வால் பிறை 🌙 1 முதல்‌ 29 (or) 30 க்குள் ஆறு நோன்புகள் வைக்கலாம் ஷவ்வால் முதல் ஆறு நாட்கள் தான் தொடர்ச்சியாக நோன்பு வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை உங்கள் சூழ்நிலை மற்றும் உடல்நிலயைப் பொறுத்து வைத்துக் கொள்ளுங்கள் இன் ஷா அல்லாஹ் ❤️ காலமெல்லாம் நம்மால் நோன்பு வைக்க முடியுமா? ஆனால் ரமளானைத் தொடர்ந்து இந்த ஆறு நோன்புகள் வைத்தால் காலமெல்லாம் நோன்பு வைத்த நன்மையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தருகிறான் சுப்ஹானல்லாஹ் ❤️ So Don't Miss It....‼️ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார். இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 2159. கேள்வி : *ஷவ்வால் ஆறு நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டுமா.?!* பதில் : *ஷெய்ஹ் முஹம்மது ஸாலிஹ் அல் உஸைமீன் (ஹ) கூறிகின்றார்கள் :* நன்மைகளை விரைவுபடுத்துதல் என்ற அடிப்படையில் பெருநாளை தொடர்ந்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து ஷவ்வாலின் ஆறு நோன்புகள் தோற்பது தான் சிறந்ததாகும். பெருநாளை தொடர்ந்து தொடர்ச்சியாக தான் ஷவ்வாலின் ஆறு நோன்புகள் நோற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாறாக அதற்குப் பிறகும் நோற்றுக் கொள்ளலாம். ஷவ்வால் மாதம் முடிவதற்குள் ஏதேனும் ஆறு நாட்களில் இடைவேளை விட்டும் நோன்பு நோற்றுக்கொள்ளலாம். காரணம், *நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :* யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புகளை நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார். *நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1167* ஷவ்வாலின் ஆறு நோன்புகள் தொடர்ச்சியாக ரமலான் முடிந்தவுடனே வைக்க வேண்டும் என நபி (ஸல்) நிபந்தனை வைக்கவில்லை. எனவே ஷவ்வாலின் ஆறு நோன்புகளை இடைவேளை விட்டு வைத்துக் கொள்ளலாம். 📽️அரபு மூலம் வாசிக்க : https://binothaimeen.net/content/10119 #⚡ஷேர்சாட் அப்டேட் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
⚡ஷேர்சாட் அப்டேட் - ஆறு நோன்பு" ரடளான் பரதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் பாதத்தல் ஆறு நோன்பு நோற்றவர் காலவல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றாவார்!! [முஸ்லிம் 2|59] 5" ஆறு நோன்பு" ரடளான் பரதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் பாதத்தல் ஆறு நோன்பு நோற்றவர் காலவல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றாவார்!! [முஸ்லிம் 2|59] 5" - ShareChat