👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈
அடியே படாமல் வலிக்கச் செய்வது வார்த்தைகள் மட்டுமே
மருந்தே இல்லாமல் காயத்தை குணப்படுத்துவது
அன்பான ஆறுதல் மட்டுமே...!!
வாழ்க்கையில் நாலு விஷயங்களை மட்டும் உடைத்து விடாதீர்கள்
நம்பிக்கை சத்தியம் உறவு இதயம்
ஏனெனில் இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது
ஆனால் வலி அதிகமாக இருக்கும்...!!
அவமானமும் அனுபவமும் தான் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஆசான்
அவை கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலையுயர்ந்த புத்தகமும் கற்றுக் கொடுக்காது...!!
ஒருவர் உங்களை குறை சொன்னால் கலங்காதீர்கள் ஏனென்றால் நல்லவர்கள் யாரும் மற்றவர்களை குறை சொல்லமாட்டார்கள்
குறை சொல்பவர்கள்
யாரும் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள்...!!
வாய் தவறி விழும் பேச்சுக்கள் கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.
யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுவது மிகச்சிறப்பு ஆகும்.!
தவறுகளை அடுத்தவர் மீது சுமத்தும் வரை இனிமையாகத் தான் இருக்கும்
தன் மீது வரும் போது தான் கசக்கும்...!!
யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை
யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை
யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை
ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டுமே பார்ப்பார்கள்...!!
நேரத்திற்கு தகுந்தாற் போல் வேஷத்தை மாற்றவும் ஆளுக்கு தகுந்தாற்போல் பாசத்தை காட்டவும் தெரிந்தவர்களே மற்றவர்களால் அதிகம் கவரப்படுகிறார்கள்...!!
அலட்சியம் மற்றும் புறக்கணிப்பு பெரும்பாலும் வெளிப்படையான வெறுப்பைக் காட்டிலும் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன...!!
ஒருவர் இப்படி தான் என மனதால் தீர்மானித்து விட்டால் அவர் நல்லதே செய்தாலும் மனம் குறைகளை மட்டும்தான் தேடும்
அவர் நல்லவராகவே இருந்தாலும் குறைகளை மட்டும் தான் சொல்ல தோன்றும்
இதுவே மனித இயல்பாகும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥


