ShareChat
click to see wallet page
search
*🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹* *பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.* *ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவை எனக்கு அறிவுரை தருகின்றன.* *நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது.* *உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.* *உம் ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.* *வாயை ‘ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன்.* (திருப்பாடல் 119: 14, 24, 72,103, 111,131) *✝️ஜெபிப்போமாக :🛐* *அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில், நீர் படைத்த படைப்பு அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகின்றேன், துதிக்கின்றேன், உம்மை ஆராதிக்கின்றேன்.* *இறைவா! தேனினும் இனிய உம் இறைச்சொற்கள், என் நாவுக்கு எத்துணை இனிமையானவையாக இருக்கின்றன.* *தந்தையே! எங்களுடைய வாழ்விற்கு வளமும், நலமும், இனிமையும் சேர்க்கும் உம்முடைய இறைவார்த்தையை உள்வாங்கி, அதன்படி நடக்க நாள்தோரும் முயல்வேன்.* *இயேசுவே! ஆலயத்தில் வேண்டுதல் புரியும் நேரத்தில் மற்றும் திருப்பலி நேரத்தில், மனதை ஒரு முகப்படுத்தி எல்லாம்வல்ல இறைவனாகிய உம்மிடம் நான், முழுக்கவனமும் செலுத்தாமல், எண்ணங்களை அலைபாய விட்டதற்காக, வருந்துகிறேன்.* *உமது இறைவார்த்தையை புறக்கணித்த அந்த தருணங்களுக்காக, மனம்வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். மன்னிப்பின் தேவனே! மனமிரங்கி மன்னியும் அப்பா.* *இயேசுவே! உம்முடைய வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட, தங்களது பணிகளில் ஆர்வமாய் இருக்கும் எண்ணற்ற மக்களுக்காக இன்று விஷேசமாக செபிக்கிறேன்.* *தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு கடவுளாகிய எம் இறைவா! உமது பிரசன்னம் என்னோடு என்றும் இருக்க அருள் புரியும்.* *ஆமென்.* #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - நீ செயியும் காரியங்களிலும் செல்லும் இபப்களி வெற்றி @ கப்ப அரசர்கள் 283 வெற்றி உமக்கேவெற்றி! எனெனில்உம் உமக்குதி கடவுளி துணைநிற்கிறார் 1 குறிப்பேடு 128 18 @GI பெருமையும் வலிமையுமீமாட்சியும் ஆண்ட வெறிறியும் மேன்மையும் உமக்கேஉரியன ஏனெனில் இருக்கும்அனைத்துமீ விணீணுலகி ணுலகி லும் லும் மண் உமீமுபையவை ஆணீப @IGI; ஆட்சியம் உம்முபையதே நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர் 1 குறிப்பேடு 298 11 நீ செயியும் காரியங்களிலும் செல்லும் இபப்களி வெற்றி @ கப்ப அரசர்கள் 283 வெற்றி உமக்கேவெற்றி! எனெனில்உம் உமக்குதி கடவுளி துணைநிற்கிறார் 1 குறிப்பேடு 128 18 @GI பெருமையும் வலிமையுமீமாட்சியும் ஆண்ட வெறிறியும் மேன்மையும் உமக்கேஉரியன ஏனெனில் இருக்கும்அனைத்துமீ விணீணுலகி ணுலகி லும் லும் மண் உமீமுபையவை ஆணீப @IGI; ஆட்சியம் உம்முபையதே நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர் 1 குறிப்பேடு 298 11 - ShareChat