“ *அவனுக்கான பாதை”*
மகன் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.
மௌனம் அதிகமாக இருந்தது.
தந்தை அதை கவனித்தார்.
அதிகம் கேள்வி கேட்கவில்லை.
சிறிது நேரம் கழித்து மெதுவாக பேசினார்.
“உனக்குத் தெரியும் தானே…
உன்னோடு படித்த ரவி, சுரேஷ்…
இப்போ நல்ல நிலைக்கு போயிட்டாங்கன்னு?”
மகன் மெதுவாக தலை ஆட்டினான்.
“அதான் அப்பா….... நான்தான் எதிலும் சரியாக இல்லை போல.”
தந்தை சிரிக்கவில்லை.
கடுமையாகவும் பேசவில்லை.
அவனுடைய தோளில் கை வைத்து சொன்னார்:
“ஒரு விஷயம் தெளிவா கேள் மகனே.
நீ ஏன் இன்னும் வாழ்க்கையில் வெற்றி பெறவில்லை என்று.....
உன்னை நீயே குறை சொல்லாதே.
அவர்கள் வாழ்க்கைப் பாதை வேறு.
உன் வாழ்க்கைப் பாதை வேறு.
மூணு பேரும் ஒரே இடத்திலிருந்து பயணம் தொடங்கியிருக்கலாம்.
ஆனால்
யாருக்கு எப்போ வாய்ப்பு கிடைக்கும்,
யாருக்கு எப்போ வெற்றி கிடைக்கும் என்று.....
அது ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.”
மகன் எதுவும் பேசவில்லை.
தந்தை தொடர்ந்தார்:
“சிலருக்கு வாழ்க்கை என்ற கதவை சீக்கிரம் திறந்து வைக்கும்.
சிலருக்கு தட்டத் தட்ட கதவை திறக்க வைக்கும்.
சிலருக்கு கதவையே சுற்றி சுற்றி தேட வைக்கும்.
அதனால்
‘நான் தோற்றுட்டேன்’ என்று முடிவு பண்ணாதே.
நீ இன்னும் நிற்கிறாயே தவிர,
தோல்வியுற்றவன் இல்லை.”
சிறிது நேரம் அமைதி.
பிறகு தந்தை மெதுவாகச் சொன்னார்:
“உனக்கான வாழ்க்கை உன்னுக்காக காத்திருக்கிறது.
அது தாமதமாக வரலாம்.
ஆனால்
வரும்போது அது உன்னை கண்டிப்பாக தேடி வரும்.
அதுவரை
துவண்டு விடாதே.
உன்னை யாரோடும் ஒப்பிடாதே.
நீ போகும் பாதை கடினமா இருக்குதுன்னா,
அது உனக்கு பலம் சேர்க்கத்தான்.”
மகன் கண்களில் சிறிது ஒளி.
தந்தை இறுதியாக சொன்னார்:
“வெற்றி சீக்கிரம் கிடைக்க வில்லை என்றால் அது தோல்வி இல்லை.
வாழ்க்கையில் முயற்சியை விட்டு விடுவது தான்உண்மையான தோல்வி.
நீ உனது பாதையில் நடந்து கொண்டே இரு மகனே…
உனக்கான வெற்றி
உனக்கான நேரத்தில்தான் கண்டிப்பாக வந்து தீரும்.”
மகன் தலை நிமிர்த்தினான்.
அந்த நாள் முதல்
அவன் வேகமாக ஓடவில்லை.
ஆனால்
நம்பிக்கையோடு நடந்தான்.
இந்தக் கதை
பல தந்தைகளின் மனசையும்,
பல மகன்களின் பாரத்தையும் பேசும்.
நீங்கள் இதை பகிர்ந்தால்
ஒரு மகனுக்காவது
“அப்பா சொன்ன மாதிரி தான்”
என்று தோன்றினால் —
அதுவே இந்தக் கதையின் வெற்றி. 🌱 #👉வாழ்க்கை பாடங்கள் #👍வாழ்க்கை பாடங்கள்👍 #வாழ்க்கை பாடங்கள் 👉💯 #உண்மை வாழ்க்கை பாடங்கள் #வாழ்க்கை பாடங்கள்


