ShareChat
click to see wallet page
search
தேவாரம் - சொல்லும் நா நமச்சிவாயவே நல்ல விஷயங்களைப் நம் உடலுக்கு பழகப் படுத்தி விட்டால் பின் எப்போதும் அதை மறக்காது. இறுதிக் காலத்தில் அறிவு குழம்பும், நினைவு தப்பும், புலன்கள் தடுமாறும்..., எப்போதும் நல்லதையே செய்து பழக்கப் படுத்திவிட்டால் புலன்கள் அப்போதும் நல்லதையே செய்யும். சுந்தரர் சொல்கிறார், "என் மனம் மறக்கினும், என் நினைவு உன்னை மறக்கினும், என் நாக்கு நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டே இருக்கும்". சொல்லும் நா நமச்சிவாயவே பாடல் மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💐Have a nice day🤩 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🙏ஆன்மீகம் - ShareChat
00:16