பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்ன அரசாங்கத்தின் அவல நிலை
காலம் முழுவதும் காரைக்கால் மக்கள் நல்ல சாலையில் பயணிக்க வழியே இல்லையா இல்லை வழி தான் கிடைக்குமா
காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு இனி நடைபெறும் அனைத்து விபத்துகளிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கப்பட்ட பிறகு
காரைக்கால் அம்மாசத்திரம் மதகடியில் இருந்து மீண்டும் பஞ்சர் ஒட்டும் வேலையை பொதுப்பணித்துறை ஆரம்பித்து இருக்கிறது இப்படி மாதா மாதம் பஞ்சர் ஒற்றுகின்ற செலவை ஒரு முறை தார் சாலையை போட்டுவிடும் செலவு குறைவாக இருக்கும் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் மிக அருமையான அற்புதமான அரசு
இந்த அவலங்களை எதிர்த்து கேட்க துணி இல்லாத எதிர்கட்சிகள் காரைக்கால் மாவட்ட எம்எல்ஏக்கள் மற்றும் மந்திரி
மக்கள் பணத்தை இப்படி வீணடிக்கிறோமே என்கின்ற கவலை கூட அறவே இல்லாத நல் அரசு அதிகாரிகள்
தற்போது பள்ளத்தை மூடுகின்ற வேலையை பொதுப்பணித்துறை முகூர்த்தம் பார்த்து ஆரம்பித்து இருக்கிறது இப்படி பஞ்சர் ஒட்டுவாவது இனி நல்ல விதமாக பஞ்சர் ஒட்டுங்கள் என்பதுதான் மக்களின் எண்ணம் மழை பெய்தால் கரைந்து கொண்டு செல்லாமல் இனிமேலாவது நல்ல விதமாக இந்த பஞ்சாயத்து நன்றாக ஓட்டுங்கள் என்று பொதுப்பணித்துறைக்கு அன்பான வேண்டுகோளை வைப்பதை விட வேறு வழியே இல்லை
முன்பு தமிழ்நாட்டை விட மிகச் சிறப்பாக இருந்த காரைக்கால் மாவட்ட சாலைகள் இன்று மிக கேவலமாக இருப்பதும் தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் அருமையாக இருப்பதும் ஆட்சியாளர் கையில் தான் உள்ளது #செய்தி


