சோழர்கால கட்டிடக்கலைகளுக்கும் புராண காலத்து அற்புதங்களுக்கும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மலை கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் சான்றாக திகழ்கிறது
இந்தக் கோயிலின் கருவறைக்கு இடது புறம் ஒரு குறவரை சன்னதி உள்ளது அங்குதான் விசேஷமான சிவ வடிவம் வைத்துள்ளது பொதுவாக சிவன் கோயில்களில் அம்பிகையும் சுவாமியும் தனித்தனி சன்னதிகளில் அல்லது அருகருகே அமர்ந்திருப்பார்கள் ஆனால் இங்கு சிவபெருமான் தனது இடது கையால் அம்பிகையின் கையை பிடித்தபடி திருமண கோலத்தில் சுகாசன நிலையில் அமர்ந்திருக்கிறார்
தலையில் மகுடம் காதில் குண்டலங்கள் கையில் மோதிரம் மற்றும் கங்கணம் என ஒரு மணமகனுக்கு உரிய சகல ஆபரணங்களுடன் சிவன் காட்சி அளிக்கிறார்
மணப்பெண் போல ஞானத்துடன் தனது கையை தரையில் ஊன்றி அமர்ந்திருக்கும் காட்சி காண்போரைக் கவரும்
திருமணத்திற்குப் பிறகு சிவனும் பார்வதியும் இங்குதான் சொக்கட்டானாடி மகிழ்ந்ததாக தல வரலாறு கூறுகிறது இத்தகைய கோலத்தை வேறு எங்கும் காணோம் முடியாது
சிவனின் வடிவத்தை போலவே இங்குள்ள முக்குருணை விநாயகரும் விசேஷமானவர் இந்த விநாயகர் சிலையின் பின்புறம் பார்த்தால் சிவபெருமானுக்கு இருப்பது போன்ற தடை முடி அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது தந்தையையே தனக்குள் அடக்கிய பிள்ளையாக இவர் அருள் பாலிக்கிறார்
பொதுவாக பைரவருக்கு நாய் வாகனம் இருக்கும் ஆனால் இங்கே நாய் வாகனம் இல்லை அவர் கையில் கதை ஏந்தி கம்பீரமாக காட்சி தருகிறார்
மகிஷாசுரனே வதம் செய்த கோலத்தில் இருக்கும் துர்க்கைக்கு இங்கு சிம்மம் மற்றும் மான் என இரண்டு வாகனங்கள் இருப்பது தனி சிறப்பு
உமா சங்கீத மூர்த்தியை மனம் உருகி வேண்டினால் திருமண தடைகள் நீங்கி நல்லவன் அமையும் என்பது நம்பிக்கையான ஐதீகம்
தம்பதிகளுள் ஒற்றுமை பெருக இத்தலத்து சிவன் பார்வ தரிசனம் சிறந்தது
இங்குள்ள பொய்கை தீர்த்தத்தில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது காசிகள் செய்வதற்கு இணையான பலனை தரும்
காலை 8 மணி முதல் ஒரு மணி வரை நடை திறந்திருக்கும் #ஆன்மீகம்


