#maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
👉🏻 தன் உயரம் அறியாதவர் 👈🏼
நான் பல ஆயிரம் முறை சொல்லி இருக்கேன்
கமல்ஹாசன் எனும் நடிகன் திறமைசாலி அறிவாளி சிந்தனையாளன் படிப்பாளி பகுத்தறிவாளி நேர்மையான கொம்பனை இந்த உலகம் பார்த்ததும் இல்லை இனி பார்க்க போவதும் இல்லை 👈🏼
நீ தொடாத உயரம் அல்ல
உனக்கு இல்லாத புகழ் இல்லை
நீ போகாத இடம் இல்லை
இருந்தாலும் இந்த கமல்ஹாசன் எங்கே சறுக்கினார் என்றால்
என் தமிழ் மொழியால் சறுக்கி விட்டார் 👈🏼
6 மொழியில் பேசும் வல்லவன்
தமிழோ தெலுங்கோ ஹிந்தியோ அந்த அந்த வட்டார வழக்கு மொழியும் அறிந்தவன் நீ 👈🏼
எதையும் காலத்தில் பயிர் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்
காலம் உன்னை தேடி வந்த போதெல்லாம் தட்டி விட்டு காலம் போன கடைசியில் களம் கண்டதும் நமக்கு ஒரு பெரிய பின்னடைவு தான் 👈🏼
இருந்தாலும் உன் முயற்சி வீன் போயிருக்காது
இருந்தும் இந்த வீழ்ச்சிக்கும் காரணமும் நீங்க தான்
( public communication)
மொழி தான் உம் மிக பெரிய பிரச்சினை 👈🏼
என் மக்கள் கலைஞர் கருணாநிதி பேசும் தமிழ் புரியவில்லை என்று சொல்லவில்லை
வைகோ வைரமுத்து அவ்வளவு ஏன் ததகா புதகானு ( குண்டடியால் ) பேசிய
எம்ஜிஆர் பேச்சு கூட யாரும் புரியவில்லை என்று சொல்லவில்லை
ஆனால் ஆறு மொழி தெரிந்தவன் வட்டார மொழி அறிந்தவன் பேசும் போது புரியவில்லை புரியவில்லை என்று ஏன் சொல்கிறான் 👈🏼
கர்நாடகாவில் பிறந்த 👈🏼
ரஜினிகாந்த்
பிரகாஷ் ராஜ்
அர்ஜீன்
ரமேஷ் அரவிந்த்
மலையாளி 👈🏼
மம்முட்டி
மோகன்லால்
தெலுங்கு 👈🏼
வெங்கடேஷ்
சீரஞ்சீவி
மகேஷ் பாபு வரை
தமிழ்நாட்டில் தமிழ் தான் பேசுகிறார்கள் 👈🏼
இவர்கள் தமிழை யாரும் புரியவில்லை என்று சொன்னது உண்டா
ஆனால் தமிழ்நாட்டில் பொறந்து தமிழ் பால் குடித்த உம் பேச்சு உம் பேச்சு 👈🏼👈🏼👈🏼👈🏼
புரியவில்லை என்று எல்லோரும் சொல்லும் போது அதில் என்ன பெருமை வேண்டியது இருக்கு உமக்கு
தான் என்ற அகந்தையா அல்லது அறிவாளி என்ற செருக்கா உமக்கு 👈🏼
இன்று கமலுக்கு இம்புட்டு ரசிகன் இருக்கான் என்றால் எல்லாம் உம் தமிழ் சினிமா பார்த்து வியந்து ரசித்து கூடிய கூட்டம் தான்
அந்த சினிமாவில்
எல்லா வட்டார மொழி பேசி எங்களை ஈர்த்தவர் நீங்க 👈🏼
இதே நம்பிக்கையில் தான் உம் அரசியலை எதிர் நோக்கி என் போன்றோர்கள் காத்திருந்தோம்
சினிமாவில் பல வேஷம் கட்டியவன்
அரசியலில் வேஷம் கட்ட மறந்தது தான் இந்த இழப்பு 👈🏼
நாம் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும்
எளிய மக்களுக்கு புரியாதபடி பேசினால் அந்த அறிவாளியை யாரும் ரசிக்க மாட்டார்கள் அதான் உமக்கு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கு தெரிந்தும் நீங்க அடம்பிடித்தால் கேலி கிண்டலை அனுபவித்தே ஆக வேண்டும் கமல் சார் 👈🏼
நேற்று கட்சி தொடங்கியவன் கூட A.4 சீட்டில் ஏற்றம் இறக்கமா பேசி 53 பேரை கொன்னும் இன்னும் அவன் தான் ஹீரோனு ஒரு மாபெரும் கூட்டம் அவன் பின்னால் ஓடுது ஏன்
அவன் பொதுவெளியில் நடிக்கும் நடிப்பு மக்களுக்கு பிடிச்ச மாதிரி பேசுவதால் இந்த கூட்டம் இன்னும் குறையைவில்லை
இந்தியாவில் அறிவாளியை விட புத்திசாலி தான் சாதிப்பான் 👈🏼
இப்பவும் சொல்கிறேன் உன்னை போல் அறிவாளி திறமைசாலியை வெளிநாட்டில் பொறந்து இருந்தால் தலையில் வைத்து கொண்டாடி இருப்பான்
நீ என்ன பாவம் செய்தயோ இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பொறந்து விட்டாய்
நீர் அடிக்கடி சொல்லும் அந்த விதையும் எல்லா மண்ணிலும் முளைத்து விடாது தரமான மண்ணில் விழுந்தால் தான் அந்த விதையும் விருட்சமாக வளரும்
உம் அரசியல் பயணம் இன்னும் முடிவுக்கு வரவில்லை
பேச்சில் வீர்யம்
எளிய மக்களுக்கு புரியும் படி பேசினால் மீண்டும் உமக்கு ஒரு வாய்ப்பு இருக்கு 👈🏼
இல்ல நான் இப்டி தான்
என்னை மாதிரி நீங்க எல்லாம் மாறுங்க என்றால் தனியாக களம் கானவும்
எங்களால் தொடர்ந்து முட்டு கொடுக்க முடியாது
தன் ரசிகனின் மனநிலை அறியாதவன் மக்களின் மனநிலை எப்டி புரியும் 👈🏼
இனி உன் சினிமாவை நான் கொண்டாடுவேன் உம் பேச்சு மாறாமல் உன் அரசியலை கொண்டாட மாட்டேன்
பொடி பசங்ககிட்டலாம் போராட முடியவில்லை ஐயா
மன்னிக்கவும்
😭😭😭😭😭😭😭
Take care ..... Kamal sir
Thanks
R.venkatesh
South Africa



