மார்பு தரிசனம் தரும் மாயவன் திருவல்லல்வாழ் திருவாழ்மார்பன் திருத்தலம்
கேரளாவில் பந்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள திரு வல்லவாழ் திருவல்லபஷேத்திரம்
108 திவ்ய தேசங்களில் எழுபதாவது தளம் ஆகும் தலத்தின் மிக முக்கிய அம்சம் மார்பு தரிசனம் சங்கர மங்கலத்தம்மையார் என்ற பக்தியை காக்க பெருமாள் பிரம்மச்சாரி கோலத்தில் அதாவது மேலாடை இன்றி மார்பில் அன்னை மகாலட்சுமி குடி கொண்டிருப்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் காட்சி தருவதால் இவருக்கு திருவாழ்மார்பன் என்று பெயர்
பெருமாள் இங்கு நிஸ்ட்டை பெற்ற பிரம்மச்சாரி விரதத்தை அனுஷ்டிப்பதால் கருவறை பகுதிக்குள் பெண்கள் அனுமதி இல்லை இருப்பினும் மார்கழி திருவாதிரை மற்றும் சித்திரை விஷூ ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் இந்த அபூர்வ மார்பு தரிசனத்தை காண அனுமதிக்கப்படுகிறார்கள்
50 அடி உயர கல தூணின் மேல்
கருடாழ்வார் எப்போதும் புறப்பட தயாரான அதாவது பறக்கும் நிலையில் காட்சியளிக்கிறார்
பெருமாள் அன்று விரும்பி சாப்பிட்ட உப்பு மாங்காய் மற்றும் சாதம் என்றும் வாக்கு இலையில் நைய்வேத்தியமாக படைக்கப்படுகிறது
கேரள வைணவ தலங்களில் சந்தனத்துடன் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுவது இத்தலத்தின் தனி சிறப்பு
காலை நாலு மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்
ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்ட இந்த திருவாழ்மார்பனை தரிசித்து #ஆன்மீகம் அவனது அருளை பெறுவோம்


