ShareChat
click to see wallet page
search
உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன், தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். சங்கீதம் 138:1 உமது பரிசுத்த ஆலுயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன், உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர். சங்கீதம் 138:2 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர், சங்கீதம் 138:3 கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். சங்கீதம் 138:4 கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள். சங்கீதம் 138:5 கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். சங்கீதம் 138:6 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர், என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர், உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். சங்கீதம் 138:7 கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார், கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது, உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக. சங்கீதம் 138:8 Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை www.bible2all.com
✝️இயேசு - ShareChat
Tamil Bible (தமிழ் பைபிள்) - Apps on Google Play
Tamil Bible (தமிழ் பைபிள்) offline loaded with rich features enhancing users