பொழிப்புரை:
கரைகளோடு கூடிய காவிரியாற்று நீர் சூழ்ந்த தண்மையான குடந்தை மாநகரில் அமைந்த காரோணத்து இறைவர் மலை போன்ற திரண்ட தோள்களை உடைய மதம் மிக்க வாட்போரில் வல்ல இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க, அவ்வளவில் தம் மணம் கமழும் திருவடி நுனிவிரலால் அம்மலையில் சேர்த்து ஊன்றி, அவ்விராவணன் தலை பத்தும் நெரித்துப் புகழ்மிக்க சாமகானத்தைப் பாடக் கேட்டு, அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்தவர் ஆவார்.
குறிப்புரை:
இராவணன் கயிலையை எடுக்க, பெருவிரலை ஊன்றி நெரித்த சிரங்கள் பத்திலிருந்தும், சாமகானங்கேட்டு அருள்செய்தவர் இவர் என்கின்றது. சீபாதந்தாங்குவார் இறைவனை இருகையில் அன்போடு கூப்பிடுகிறார்கள்; இவன் மதத்தால் இருக்கிறான்; ஆதலால் அடக்குண்டான் என்பார். மதவாள் அரக்கன் என்று உரைத்தார். விரை - மணம். உரையார்கீதம் - புகழ் நிறைந்த சாமகீதம்.
#🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய


