ShareChat
click to see wallet page
search
நானும் நபி(ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தபோது பள்ளிவாசலின் முற்றத்தருகே எங்களை ஒருவர் சந்தித்து, ‘இறைத்தூதர் அவர்களே! மறுமைநாள் எப்போது வரும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ அதற்காக என்ன முன்னேற்பாடு செய்து வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். உடனே அம்மனிதர் அடங்கிப் போனவரைப் போன்று காணப்பட்டார். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அதற்கு முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ தொழுகையோ தானதர்மங்களோ செய்துவைத்திருக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்’ என்று கூறினார்கள். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.(புகாரி: 7153) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - (66) முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்: ్న நீயாரை நேசிக்கிறாயோ அவருடன் முறுமையில்) இருப்பாய்' அறிவிப்பாளர் :அனஸ் இப்னு மாலிக்குரலி) புகாரி 7153 (66) முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்: ్న நீயாரை நேசிக்கிறாயோ அவருடன் முறுமையில்) இருப்பாய்' அறிவிப்பாளர் :அனஸ் இப்னு மாலிக்குரலி) புகாரி 7153 - ShareChat