சத்தீஸ்கர் மாநிலம் சம்பம் மாவட்டத்தில் கிருஷ்ணா படேல் மற்றும் அவரது மனைவி ரமா பாய் ஆகிய இருவரும் தங்கள் வீட்டு முத்தத்தில் இருந்த வேப்ப மரத்தில் சடலங்களாகத் தொங்குவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துத் தகவல் அறிந்த ரஹவுத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த தம்பதியினரின் ஒரே மகனான இருபத்திரண்டு வயது ஆதித்யா படேல், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்ததால், அந்தத் துயரத்தில் இருந்து மீள முடியாமல் இருவரும் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அந்தத் தம்பதியினர் ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளனர். அதில், தங்கள் மகனின் மறைவிற்குப் பிறகு கிடைக்கும் காப்பீட்டுத் தொகையைத் தனது அண்ணன்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், போலீசார் கைப்பற்றிய தற்கொலை கடிதத்திலும் மகனின் இழப்பால் ஏற்பட்ட மன உளைச்சலே தங்களின் மரணத்திற்குத் தனிப்பட்ட காரணம் என்று அவர்கள் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர். ஒரே மகனின் நினைவாகவே வாழ்ந்து வந்த தம்பதியினர், அவனது பிரிவைத் தாங்க இயலாமல் வாழ்வை முடித்துக் கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
#📢பிப்ரவரி 17 முக்கிய தகவல் 🤗


