ShareChat
click to see wallet page
search
*ஏப்ரல் 05, 1957* இந்தியாவின் கேரள மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் (கம்யூனிஸ்ட்கள்) முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சராக பொறுப்பேற்றார். உலக வரலாற்றிலேயே முதன்முறையாகப் பொதுவுடமைத் தலைவரொருவர் மக்களாட்சித் தேர்தல் வழியே மாநில ஆட்சிக்கு தலைமையேற்ற பெருமையை அடைந்தார். அவர் ஏப்ரல் 05 1957 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றது இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி பதவியேற்பதற்கு முன்னோடியாக அமைந்தது. அவரது ஆட்சியில் மக்கள் போற்றிய நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. #வரலாற்றில் இன்று #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா #இந்திய வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று - ShareChat