ShareChat
click to see wallet page
search
*🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹* *ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.* *பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.* *அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;* *மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.* *என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் ப+சுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.* *உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.* (திருப்பாடல்கள் 23:1-6) *✝️ஜெபிப்போமாக :🛐* *இவ்வுலகை படைத்து, பராமரித்து, ஆண்டுவரும் இறைவா! இந்த நாளின் காலைப்பொழுதில் உம்மோடு உறவாட, நன்றி உணர்வோடு உம் திருமுன் வந்துள்ளேன். என்னோடு பேச வாரும், என் இதயத்தின் ஓசையை கேளும்.* *அன்பான தந்தையே! எல்லாவற்றிற்கும் நன்றி கூறுகிறேன்; இந்த புதிய நாளை எங்களுக்கு தந்தமைக்காக நன்றி கூறுகிறேன், இந்நேரம் வரை எங்களை வழிநடத்தி வந்த, உமது மேலான இரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன் அப்பா. நன்றி அப்பா.* *அன்பு ஆண்டவரே! விண்ணுலகில் உமது விருப்ப ஆட்சி மட்டுமே நடக்கிறது. ஆனால் மண்ணுலகும், அதிலுள்ளவை அனைத்தும், தீயவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்! இவ்வுலகில் நாங்கள் எல்லாவற்றுக்கும், போராடி போராடி வாழ்கிறோம். இந்த நாட்டில் சிறுபான்மையினராக வாழ்கிறோம். நாங்கள் உம்மை சார்ந்த மக்கள் என்பதால், இவ்வுலக ஆட்சியாளர்களால் எம் சமுதாயத்தில் பல பிரச்சனைகள் அப்பா. எங்களை காப்பாற்றி யருளும்.* *இவ்வுலகில் நீர் வாழ்ந்த காலத்தில், நீதிக்காக குரல் கொடுத்தீர், அநியாயத்தை எதிர்த்தீர். ஒடுப்பட்டவர்களின் கூட்டத்தில் ஒருவராக இருந்தீர். இவ்வாறு, கடவுளின் திட்டத்தை நிறைவேற்றி வெற்றி பெற்றீர்.* *ஆண்டவரே! நாங்கள், எந்த மக்களையும் இழிவாக கருதாமல், யாரையும் ஏளனம் செய்யாமல், யாரையும் ஒதுக்கி வைக்காமல், அனைவரும் உடன் பிறந்தவர்கள் என்ற உண்மையை உணர்ந்து, நாங்களும் உம்மை போல வாழ வரம் அருளும் .* *இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.* *ஆமென்.* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள் ; உங்களைக் காத்திடுவேன். திருப்பாடல்கள் 50:15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள் ; உங்களைக் காத்திடுவேன். திருப்பாடல்கள் 50:15 - ShareChat