*புனித சந்தியாகப்பர் நவநாள்*
❣️💎❣️💎❣️💎❣️💎❣️💎❣️
வேதசாட்சியான புனித சாந்தியப்பரே...!
உமது பிள்ளைகள் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! - 3
குரு : வேதசாட்சியான புனித சாந்தியப்பரே! எங்களின் நம்பிக்கையும் வழித்துணையுமாய் இருப்பவர் நீரே!
எல் : இன்று நாங்கள் அனைவரும் / உம்மிடம் வருகிறோம் / நீர் எங்களுக்கு பெற்றுத்தந்த / எல்லா அருள் வரங்களுக்கும் / இறைவனுக்கும் நன்றி செலுத்துகின்றோம். இறைவனின் புனிதரே / எங்களின் பாதுகாவலரே / நாங்கள் உம்மை நேசிப்பது மட்டுமல்லாமல், எங்கள் அன்பினால் உமக்கு எப்போதும் சேவை செய்வோம் என்றும் / பிறரையும் உம்மிடம் கொண்டுவர / எங்களால் இயன்றவரை செய்வோம் என வாக்களிக்கின்றோம்.
குரு : இறைவனின் புனித சீடரே இயேசுவின் அன்பைப் பெற்றவரே நாங்கள் கேட்கும் இந்த மன்றாட்டுகளை இறைவனிடம் பரிந்து பேசி எங்களுக்கு பெற்றுத்தாரும்.
எல் : துன்ப துயரங்களை பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளவும் / சோதனைகளை வெல்லும் பலத்தையும் / இயேசு கிறிஸ்துவின் தூய அன்பையும் / நல்ல மரணம் அடையும் அருளையும் / உன் அன்பிலும், அன்னை மரியாளோடும் / உயிர்த்த கிறிஸ்துவோடும், என்றென்றும் வாழ அருள் புரியும்.
குரு : வேத சாட்சியான புனித சந்தியாகப்பரே
எல் : எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
குரு : எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உமது அழைத்தலை ஏற்று, உம்மை பின் தொடர்ந்த சீடர்களை, உமக்குப் பின் உமது பணியை தொடர்ந்து செய்து, மறைசாட்சிகளாய் இருக்கும் அருள் அளித்தீரே அவர்களின் புனிதப் பணியால் புதுமைகளை செய்து உம்மைப் புகழும் வரத்தை தந்தீரே! எங்கள் பாதுகாவலரான புனித சந்தியாகப்பரின் மகிமையை போற்றி புகழ, இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுகளைக் கேட்டருளும். உமது அருட் செயல்களுக்காய் எங்கள் மனமார்ந்த நன்றியை ஏற்றுக் கொண்டு எங்கள் விண்ணப்பங்களை கேட்டு அருள்புரிவீராக.
எல் : சக்தி வாய்ந்த புனித சந்தியாகப்பரே / வல்லமை நிறைந்த உமது திருப்பெயரை / கூவி அழைக்கின்றோம் / வாழ்வோரின் பாதுகாவலும் / மரிப்போரின் துணையுமாய் இருக்கிறவரே! உமது திருப்பெயர் என்றும் எங்கள் நாவில் ஒலிப்பதாக. எங்கள் சோதனை நேரங்களிலும் / மரண வேளையிலும் உமது திருப்பெயரை கூவியழைத்து / உமது திருப்பெயரின் சக்தியையும், நம்பிக்கையையும் பெறுவோமாக! இயேசுவால் அதிகம் அன்பு செய்யப்பட்ட புனிதரே / உம்மை அழைக்கும் போதெல்லாம் / எம்மோடு இருப்பீராக / நாங்கள் உம் திருப்பெயரை அழைப்பதோடு மட்டும்மல்லாமல், நீரே எங்கள் முன்மாதிரியை என்று / எங்கள் அனுதின வாழ்வில் / பிறருக்கு எடுத்துக்காட்டாய் வாழ்வோம் என உறுதியளிக்கிறோம்.
குரு : நமது தேவைகளுக்காக நம் திருத்தலப் புனிதரை நோக்கி ஒரே குடும்பமாய் மன்றாடுவோமாக.
எல் : வேத சாட்சியான புனித சந்தியாகப்பாரே! எங்களின் பாதுகாவலரே / இறைவனின் அன்பு சீடரே / உம்மீதுள்ள முழு நம்பிக்கையுடன் உம் திருமுன் முழந்தாளிடுகிறோம். எங்கள் அனுதின வாழ்வில் அலைக்கழிக்கும் / துன்ப துயரங்கள், சிக்கல்கள் / ஏற்றத்தாழ்வுகள், வறுமை, பிணிகள், முதலியவற்றால் வேதனையுற்று / எப்பக்கமும் துன்பமே நிறைந்து இருக்கின்றது. தன்னலம் / பொறாமை, கோபம் முதலியவற்றால் கட்டப்பட்டு, எங்கள் பலவீனத்தால் / கிறிஸ்துவ வாழ்வின் / அடையாளத்தை இழந்து / வழி தெரியாது தவிக்கின்றோம். இரக்கம் நிறைந்த புனிதரே / எங்கள் மேல் இரக்கம் வைத்து தீய வாழ்விலிருந்து விடுபட்டு / உம்மைப் போல் புனித வாழ்வு வாழ / இயேசுவிடம் மன்றாடி எங்களுக்கு அருள்புரியும் / இறைவனின் திட்டத்தின் பொருட்டு வரும் துன்பங்களை ஏற்கவும் / சோதனைகளை எதிர்த்து நின்று / சாதனை புரியும் பலத்தையும் / சகிப்புத் தன்மையையும் எங்களுக்குத் தாரும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் / கிறிஸ்துவின் அன்பிலும், வல்லமையிலும் நம்பிக்கை வைத்து / உமது பரிந்துரையோடு அருள்புரிய / கெஞ்சி மன்றாடுகிறோம் - ஆமென்.
*🌹🌿விண்ணப்பங்கள் மற்றும் நன்றியறிதல்களை வாசித்தல் பொது மன்றாட்டுகள்🌿🌹*
1. அன்பின் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைத்து துறவியர்கள், நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், அனைவருக்கும், ஞானத்தையும் விவேகத்தையும் தந்து, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை சரியான வழியில் நடத்தி செல்ல வேண்டுமென்று.
எல் : வேதசாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் ஆண்டவரே! மக்கள் அனைவரும் சமாதானத்திலும், ஒற்றுமையிலும், அன்பிலும் நிலைத்து வாழ்ந்து முதல் கிறிஸ்துவர்களைப் போல், ஜெபத்திலும், பகிர்தலிலும் ஒரே அன்பியமாய் வாழ வேண்டுமென்று.
எல் : வேதசாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. இரக்கம் நிறைந்த இறைவா! இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் அனைத்து இளைஞர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர், தங்கள் எதிர்கால வாழ்வை தூய ஆவியின் துணையால் கண்டுணர்ந்து தீமைகளை அகற்றி, நன்மைகளை புரிந்து, பெற்றோர், பெரியோர், வழிகாட்டுதலில் நலமுடன் வாழ வேண்டுமென்று.
எல் : வேதசாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நம்பினோர்க்கு வாழ்வளிக்கும் இறைவா! இங்கு உம்மை நம்பி வந்துள்ள அனைவரின் கருத்துகளுக்காகவும், மன அமைதிக்காகவும், உடல் நலத்திற்காகவும், குடும்பத்திலும் ஊரிலும் ஒற்றுமையையும், சமாதானத்தையும், வறுமை, வறட்சி நீங்கி வளமான வாழ்வையும் தந்து காத்தருள வேண்டுமென்று.
எல் : வேதசாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இறைவா மக்கள் அனைவரும் உமது வல்லமையை காணவும், உமது அளவில்லா அன்பை உணர்ந்து, அதில் நிலைத்து வாழவும், உம்மை நம்பி இறந்துபோன அனைத்து விசுவாசிகளின் ஆன்ம இளைப்பாற்றிக்காவும், இறக்கும் தருவாயில் அவதிப்படும் அனைவருக்கும் அமைதியான நல்ல மரணத்தை தந்தருள வேண்டுமென்று.
எல் : வேதசாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நன்றியறிதல் ஜெபம்!
இறைவா! உம் மக்களாகிய எங்களுக்கு / புதிய அருள் வாழ்வை அளிப்பதற்காகவும் / திருச்சபை மூலம் நீர் தந்துள்ள / திருவருட் சாதனங்கள் வழியாக / நாங்கள் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் இந்த நவநாள் வழிபாட்டில் பங்கு பெற்று / அடைந்த எல்லா வரங்களுக்காகவும் எங்கள் நம்பிக்கையால் / நாங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள / அனைத்து உதவிகளுக்காகவும், வேத சாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக / இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம். மென்மேலும் நாங்கள் / உம்மீது உள்ள நம்பிக்கையை இழக்காது / என்ன நேர்ந்தாலும் உறுதியான மனதோடு / உம்மை பின் செல்லும் வரம் தாரும் - ஆமென்.
*✝️நோயாளிகளை ஆசிர்வதித்தல்❣️*
குரு : நாம் அனைவரும் இறைவனின் ஆசிரை நிறையப் பெற்று, உடல் உள்ள நோய்களிலிருந்து விடுபட ஒன்று சேர்ந்து ஜெபிப்போமாக.
எல் : தந்தையே இறைவா / உடல் நோயால் வருந்தும் உம் மக்களை பாரும் / நீர் உருவாக்கிய ஆன்மாக்களுக்கு / ஆறுதல் தாரும் / நாங்கள் துன்பங்களினால் தூய்மை அடைந்து / உமது இரக்கத்தினால் விரைவில் / எங்கள் உடல் உள்ள நோய்கள் குணமாகும்படி / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் / உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம் ஆமென்.
குரு : (வலது கரத்தை நீட்டி) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களை / காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாக இருக்க, உங்களுக்கு பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக பிதா சுதன் தூய ஆவியின் பெயராலே.
எல் :ஆமென்.
குரு : இங்கு கூடியுள்ள நாம் அனைவரும் புனித சந்தியாகப்பரை நோக்கி நம்பிக்கையுடன் ஜெபிப்போம்.
(குருவானவர் இப்போது தீர்த்தம் தெளிப்பார்)
எல் : தேவ தாயினால் மிகவும் அன்பு செய்யப்பட்ட சந்தியாகப்பரே / துன்புறும் மக்களுக்கு / என்றும் உதவி செய்ய முன்வரும் புனித சீடரே / உலக, உடல் ஆசையாலும் / சாத்தானின் சோதனைகளினாலும் / நாங்கள் படும் துன்பங்கள் ஏராளம் / எங்களின் கவன குறைவினால் / உமது வார்த்தைகளை மறந்து / ஜெபத்தில் ஆர்வமின்றி / நம்பிக்கையை இழந்து / துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்றோம் / எனவே நீர் எங்கள் மீது இரக்கம் வைத்து / எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி / துன்ப வேளையில் நாங்கள் மனம் தளர்ந்து போகாமல் / இறைவனின் முழு நம்பிக்கை உள்ளவர்களாக / வாழச் செய்தருளும் / துன்பங்களை தீர்க்கும் புனித சந்தியாகப்பரே / அலகையின் எந்த சூழ்ச்சிக்கும் இடம் தராது / இடியின் மகனாய் வாழ்ந்தவரே / எங்கள் பலவீனத்தால் தவறி விழாமல் காத்தருளும் / இரக்கம் நிறைந்த புனித சந்தியாகப்பரே / எங்களை சூழ்ந்திருக்கும் இடையூறுகளிலிருந்து நாங்கள் கலங்கி தவிக்காதபடி / தேற்றி அரவணைத்தருளும் / காணாமல் போன பொருட்களை கண்டடையச் செய்தருளும் / உம்மை நம்பி வேண்டும் / எங்கள் அனைவரின் ஜெபங்களையும் / நீர் ஏற்று, வெற்றி பெறச் செய்து / எங்கள் மனம் மகிழச் செய்தருளும். எங்களை சூழ்ந்திருக்கும் / அனைத்து தீய சக்திகளையும் விரட்டியடித்து / உம்மைப் போல் இறைவனுக்கு சாட்சியம் புரிந்து / வாழும் வரத்தை பெற்றுத் தாரும் / எங்கள் புனித வாழ்விற்காக இறைவனை மன்றாடும் / உமது புனித வாழ்வில் / மரியன்னை உமக்கு துணை புரிந்தது போல / எங்களுக்கும் அன்னை துணை புரிய மன்றாடும் / எங்கள் வாழ்வை உமது புகழ்ச்சியோடு / ஒன்று சேர்த்து / இறுதியில் நல்ல மரணம் அடைந்து / விண்ணக வாழ்வின் பேரின்பத்தை பெற / இறைவனை மன்றாடும் / - ஆமென்.
குரு : இறைவனின் அன்னையும் நம் அன்னையுமான புனித மரியாளின் துணையை புனித சந்தியாகப்பர் போன்று நாமும் வேண்டி, புகழ்ந்து அன்னையின் வல்லமை மிக்க பாதுகாப்பில் நம்மை அர்பணிப்போமாக.
எல் : அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க ...
குரு : இயேசு கிறிஸ்து தரும் அன்பையும் அருள் வரங்களையும் பெற நாம் தகுதி உள்ளவர்களாகும்படியாக,
எல் : இயேசு கிறிஸ்துவின் முதல் மறைசாட்சி அப்போஸ்தலரான புனித சந்தியாகப்பாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
*குரு :* *ஜெபிப்போமாக .*
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உமது சீடரான புனித சந்தியாகப்பரை போற்றி புகழும் எங்களுக்கு, என்றும் உதவி செய்ய தயாராக இருக்கும் புனிதரை எங்களுக்கு தந்துள்ளீரே அந்த புனிதரின் புதுமையை நாடி வரும் நாங்கள், உமது மீட்பின் பலன்களை இறுதிவரை அடைந்து, உமக்கும் புனித சந்தியாகப்பருக்கும், அன்னை மரியாளுக்கும் ஏற்ற மக்களாக வாழ்ந்து, உம்மை சாட்சிகளாய் என்றும் வாழ எங்களுக்கு அருள் தாரும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
*ஆமென்.*
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்


