“முஹம்மது நபி(ஸல்) அவர்களை விட நான் புன்புறுவல் பூக்கும் ஒருவரை நான் பார்க்கவில்லை”
என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: திர்மிதி: 3641, அஹ்மத்: 17704
மனித வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விளையாட்டுக்கள், பேச்சுக்கள், நடத்தைகள் அனைத்தையும் இஸ்லாம் தடுத்திருப்பதாக சிலர் நினைக்கின்றனர். பேசாமல், சிரிக்காமல் முகத்தை ‘உம்’ என்று வைத்திருப்பதுதான் உண்மையான தக்வாவின் அடையாளம் என்று சிலர் நினைத்துள்ளனர். இது தவறாகும். சிரித்த முகத்துடன் காட்சியளிப்பதும் பிறரை மகிழ்வூட்டுவதும் மார்க்கம் போதிக்கும் நல்ல பண்புகளில் உள்ளவைதான்.
“மலர்ந்த முகத்துடன் உன் சகோதரனை சந்திப்பது போன்ற எந்த நற்செயலையும் குறைத்து மதிப்பிட்டு விடாதே என எனக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்” என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(நூல்: முஸ்லிம் 2626-144)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


