ஸ்ரீ (969)எகிப்து தேசத்தில் தமிழ் வைணவ நெறி.!
' ஈராறு திருநாமம் அணிந்த எழில்
வாழி
இனிதிருப்போடு எழில் ஞான
முத்திரை வாழியே.'
இந்த புகைபடத்தில் உள்ள சிற்பமானது புகழ்பெற்ற எகிப்திய ராஜ்ஜியத்தின் பண்டைய பாரோக்களின் காலத்தை சார்ந்தது. பிந்தைய மித்தானிய ராஜ்ஜியத்தின் பிம்பசு நகரிலும் இத்தகைய திருச்சின்ன முத்திரை தரித்த சிற்பங்கள் உண்டு.
நெற்றி மற்றும் உடலில் வைணவ திருசின்ன முத்திரை கையில் சடாரி.
[ இது தொடர்பான ஆதாரபூர்வமான விரிவான ஆய்வுகள் 722 பக்கங்கள் அடங்கிய
'LONG MISSING LINGS OR THE MARVELLOUS DISCOVEREIS 'நூலில் விவரிக்கபட்டுள்ளது.]
சமாஸ்ரயணம் எனும் திருச்சின்ன முத்திரைகள் தரிக்கும் வழக்கம் பெரியாழ்வார் காலத்திற்கு ( 4,5ம் நூற்றாண்டு ) முன்பே பல தலைமுறைகளாக இருந்து வந்துள்ளது. இதை ,
' தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம் '
திருப்பல்லாண்டு வரிகளின் மூலம் சந்தேகமின்றி கண்டு தெளிவு பெறலாம்.
அதே ஆழ்வார் தமது திருமொழியில்
' எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி'
எனும் அருந்தமிழ்பாவில் தனது தந்தை மற்றும் அவர் வழி ஏழேழு தலைமுறையாக திருமாலையோ வணங்கி வருகிறோம் என்கிறார்.
அப்படியானால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக திருமாலை முழுமுதற் கடவுளாக வழிபடும் மரபு தமிழரிடத்தே இருந்துள்ளது.
[ தொண்மையான நமது சங்க நூலான பரிபாடலில் திருமாலை பரம்பொருளாக குறிப்பிட்டு ஊழியின் தோற்றம், பிரபஞ்ச வெளிப்பாடு, சிருஷ்டி ஆகியவற்றில் ரிக்வேத புருஷ சூக்தத்தை யொட்டிய வேதத்திற்கும் தமிழருக்குமான தொடர்பு குறித்தும் தொல் தமிழரிடமிருந்த 'ஐம்படை தாலி ' எனும் பஞ்சாயுத காப்பு இவை பற்றியெல்லாம் இன்னொரு பதிவில் விரிவாக குறிப்பிடுகிறேன். )
தமிழ் வைணவம்.!
வைணவம் | வைஷ்ணவம் தமிழ் வேர்சொல் மற்றும் தொடர்சொற்கள்.!
விண்> வான் > விண்ணவர் > வானவர் > விண்ணவம் > >வைணவம் [விண்ணகரம் திருமால் உறையிடம் ஆழ்வார்கள் இலக்கிய பயன்பாடு சொல் ]
விண்ணகரம் > வைகுந்தம்.!
வைணவம் என்ற தமிழ் செல்லே வடமொழியில் வைஷ்ணவம் ஆயிற்று.!
சைவ சமயத்தில் முப்பட்டை விபூதி அணியும் முறையை உபநிடதங்களில் கூறப்படுவது போல சமஸ்கிருதத்திலோ பிற பழைய வடமொழி நூல்களிலோ வைணவ திருச்சின்ன முத்திரை தரிக்கும் முறை குறித்து கூறபட்டதாக தெரியவில்லை.
அதே சமயம் தமிழ் வைணவ தத்துவ நூல்கள் பஞ்ச சமஸ்கர உபதேசத்தின் ஐந்து முக்கிய கொள்கைகளில் ஒன்றான திருச்சின்ன முத்திரை குறித்து மிக ஆழமாக விவரிக்கின்றன.!
வைணவ திவ்ய தேசங்கள் 108 ல் 84 திவ்ய தேசங்களை கொண்டது தமிழ் நிலம்.!
சமஸ்கிருதம் தவிர்த்து திருமாலை முழுமுதற்கடவுளாக கொண்டு நாலாயிரம் பிரபந்த இலக்கியங்கள், தத்துவ பிரமாண நூல்கள் யாத்தபட்ட அருள்மொழி தமிழ் மட்டுமே.!
வைணவ பூர்வாச்சார்கள் அருளாளர்கள் யாவரும் தமிழரே.!
ஒவ்வொரு திவ்ய தேசங்களும் யாத்திரை சென்று மங்களாசாசனம் செய்து வைணவ நெறி பரப்பிய
ஆழ்வார்கள் அனைவரும் தமிழர்களே.!
மடாலயங்கள் மூலமாக
வைணவ நெறிமுறையை ஸ்தாபித்த எம்பத்தியேழு சிம்மாசனபதிகளும் தமிழ்குடிகளே.!
முறையான வைணவ குருபரம்பறையை கொண்டதும் தமிழ் நிலமே.!
வைணவம் என்பதன் மூலமும் வேரும் தமிழ் நிலமே என்தால் தமிழ் வைணவம் என்பதே பொறுத்தமானது.!
__மணிமேகலை. 🙏 #பெருமாள்


