ShareChat
click to see wallet page
search
#பத்தி #ஆன்மீக #தெரிந்து கொள்வோம் நாராயண லஷ்மி நாராயண *லஷ்மி நாராயண லஷ்மி நாராயண *ராம கிருஷ்ண பரம ஹம்சர் குரு நமக்கு உபதேசம் செய்கிறார் கேளுங்கள் நண்பர்களே 🙏 மனிதனுடைய எண்ணத்துக்கு ஏற்றவாறு அவனுக்கு வாழ்க்கையில் பயன் கிடைக்கிறது ஒரு மனிதன் படாதபட்டு கல்வி பயின்று கல்வியில் மேல் நிலைக்கு வந்து ஒரு நீதிமன்றத்தில் நீதிபதி ஆகிறான் இப்போது நான் உயர்ந்த பதிவில் இருக்கிறேன் அனைத்து சம்பத்துகளையும் அடைய பெற்று இன்புற்று இருக்கிறேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று எண்ணுகிறான் அப்பொழுது அவன் உள்ளத்தில் மனசாட்சியாக இருக்கும் ஈசன் நீ இந்தபெரும் நிலையில் இன்புற்று இருப்பாயாக என்கிறார் அதாவது அவனுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே போதும் என்று நினைக்கிறேன் பகவான் நீ அப்படியே இருப்பாயாக என்கிறார். மனிதன் தன்னுடைய கடமைகள் எல்லாம் முடித்த பிறகு உத்தியோகத்தில் இருந்து விலகி உபகார சம்பளம் பெற்று வாழ்ந்திருக்கும் பொழுது தனக்கு அந்திம காலம் நெருங்குவதை அவன் உணருகிறான் அப்பொழுது அவனுக்கு பகவானின் நினைவு வருகிறது ஆனால் அவனும் அந்திமகாலத்தில் இருக்கிறான் ஏதேனும் தர்மமோ இல்லை யாருக்காவது உதவியோ இல்ல நாம ஸ்மரனையோ பஜனையோ தீர்த்த யாத்திரை யோ‌ எதுவும் செய்யவில்லை கோயிலில் சென்று விபூதி கூட பூசவில்லை ஒரு காணிக்கை கூட செலுத்தவில்லை பகவானை நினைக்கவில்லை.அப்போது அவனுக்கு நாம் ஏதோ தவறு செய்து இருப்பதாக நினைக்கிறான் இவை அனைத்தும் நமக்கு இறைவன் அருளால் தான் நடந்தது நாம் அவரை மனதார வழிபட வில்லை நாம் சாதித்தது தான் என்ன என்று எண்ணி மனம் கலங்குகிறான் இப்போது உள்ளிருக்கும் பகவான் ஈசன் இறைவன் சொல்கிறார் ஆம் நீ சாதித்தது ஒன்றுமில்லை என. ஆம் அப்படியே அவன் உயிரும் போகிறது இதனால் நமக்கு என்ன கிடைக்கிறது ஒன்றுமில்லை மறுபடியும் நாம் மறுபடியும் பிறப்பு எடுத்து இந்த உடம்புக்குள் வரப் போகிறோம் என்று மட்டும் தெரிகிறது அதாவது இந்த உடம்பிலேயே அடைப்பட்டிருக்கிறது நம் ஆத்மா அதை விடுவிக்க தான் ஒவ்வொரு வாய்ப்பு கொடுக்கிறார் ஒவ்வொரு சட்டையாக ஒவ்வொரு பிறப்பாக அந்த ஒவ்வொரு சட்டையை கழட்டும் கழட்டும்போது கூட அவருக்கு ஞானம் வரவில்லை. மாயையை உடைத்து வெளியே வரமுடியவில்லை காரணம் நம்மை சுற்றி சுற்றி சந்தோஷம் இருக்கிறது ஐம்புலன்களால் அவன் அனுபவிக்கிறான். இறுதியில் அவன் பகவானை நினைக்கவே இல்லை பகவானை எப்போது நாம் நினைக்கிறோமோ இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி அப்போதுதான் நமக்கு பக்தி உண்டாகும் பக்தி உண்டானால் நமக்கு வைராக்கியம் கிடைக்கும் அந்த வைராக்கியமே இறுகி இறுகி ஞானம் உண்டாகும் அந்த ஞானத்தின் பார்வையால் நமக்கு அனைத்தும் ஒன்றாக தோன்றும் இன்பம் துன்பம் அனைத்தும் ஒன்றாக துவங்கும் நாம் யார் என்று ஆத்ம விசாரம் செய்ய துவங்கும் இங்கு இருக்கும் உறவினர்கள் மூலம் நமக்கு நிரந்தரமாக இன்பம் கிடைக்காது அது ஒரு விதத்தில் துன்பமே. நம்மிடம் செல்வம் மற்றும் ஆரோக்கியம் இல்லாமல் போனால் எல்லாம் காணாமல் போகும் நம்முடன் யாரும் வரப்போவது இல்லை என்று உணர்ந்து விட்டான் ஏனெனில் அந்திம காலத்தில் அவன் நோய் வாய் பட்டு இறக்கும் போது அவரது மனைவி உறவினர்கள் ஓரளவு தான் கவனித்து வந்தார்கள் நாட்கள் செல்ல செல்ல வெறுமனே கவனிக்க துவங்கி இறுதியில் வெறுப்புடன் நடந்து கொண்டார்கள் அப்போது அவனுக்கு கடவுள் மீது பக்தி வருகிறது இறுதியில் தான் அவன் பகவானை நினைக்கிறேன் அது நமக்கு முக்தி கொடுக்காது வாழ்நாள் முழுவதும் பக்தி ஞானம் வைராக்கியம் கிடைத்தவனுக்கு தான் மோட்சம் கிடைக்கும் என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நமக்கு உபதேசம் செய்கிறார் பாருங்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது
பத்தி - ShareChat