ShareChat
click to see wallet page
search
• தமிழ் வாக்காளர்கள் 1,14,00,000 பெயரை சந்தேகத்தின் பெயரில் நீக்கி இருந்தது தேர்தல் ஆணையம். • சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் போனது இது பற்றி கட்சிகளுக்கு தெரியாது. இதற்கு எதிராக திமுக வழக்கு போட்டது.. திமுக வாதம் • வாக்காளர்கள் பெயரை நீக்கியது குறித்து நிஜமாகவே நீங்கள் கடிதம் எழுதினீர்களா? அது அவர்களிடம் சென்றடைந்ததா? சிலர் வேலை விஷயமாக வேறு ஊர்களுக்கு சென்று இருக்கலாம். நீங்கள் பொதுவெளியில் வலைத்தளம் மூலம் நீக்கியவர்கள் பெயரை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களாகவே முன்வந்து தேவையானவற்றை செய்து கொள்ள முடியும். உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பித்த ஆணை • 1,14,00,000 பெயர்களையும் பொதுவெளியில் சொல்ல வேண்டும். • இதை கட்சிகள் சார்ந்த பூத் ஏஜென்ட்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். • பூத் லெவல் ஏஜென்ட்களுக்கு நீக்கப்பட்டவர்கள் தகவலை பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். • பெயர் நீக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்த கட்சி பூத் ஏஜென்ட்களை அழைத்து வரும்போது பூத் ஏஜெண்டுகளுக்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். • பெயர்கள் சேர்ப்பதற்கும் நீக்கிய பெயர்களை சேர்ப்பதற்கும் பெயர்களை நீக்குவதற்கும் நீங்கள் ஏற்கனவே போட்ட முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். • ஜனவரி 30 வாக்காளர் படிவம் பூர்த்தி செய்யும் பணி முடிவடையும் என்று கூறியுள்ளீர்கள். இப்பொழுது நீக்கப்பட்டவர்களை சேர்க்கும் பணிக்கும். அவர்கள் ஆதாரம் சமர்ப்பிப்பதற்கும் கூடுதல் அவகாசமாக 10 நாட்கள் கொடுக்க வேண்டும். • ஆதாரங்கள் இல்லாமல் இருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் பத்தாம் வகுப்பு சான்றிதழ் தேர்ச்சி பெற்றதோ அல்லது தோல்வியுற்றதோ இருந்தால். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பெங்கால் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள ஆணையாகும். நீதிபதிகள் கடைசி வரியில் மேல்கண்ட ஆணைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று கூறி இருப்பதால்.‌ பத்தாம் வகுப்பு சான்றிதழ் ஏற்றுக்கொள்வது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும் கட்டாயமாகிறது. உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு பரிந்துரை. • SIRல் பெயர்கள் நீக்கப்பட்டதை திரும்பி சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் நாட்களும் கூடுதல் முகாம்களும் வைக்க ஆணையிடப்பட்டுள்ளது என்பதால் தேர்தல் ஆணையத்திற்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு தற்காலிக வேலை மாற்றம் செய்து ஆட்களை நியமிக்க வேண்டும். • அதேபோல் தேர்தல் ஆணையத்திற்கு உதவ வரும் மாநில ஊழியர்களுக்கு தேவையான சம்பள உயர்வு வசதிகள் செய்து தர வேண்டும். • பெயர் சேர்க்கும் பணிகளில் எந்த அசம்பாவிதங்களும் நடக்காதவாறு காவல்துறை தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும்... (காரணம் மேற்கு வங்கத்தில் சில வன்முறைகள் நிகழ்ந்தது அதுபோல வேறு எங்கும் நிகழக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட ஆணை இது) #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - விவகாரத்தில் SIR திமுகவுக்கு வெற்றி. தேர்தல் ஆணையத்தின் தலையில் இடியை இறக்கியது உச்ச நீதிமன்றம் விவகாரத்தில் SIR திமுகவுக்கு வெற்றி. தேர்தல் ஆணையத்தின் தலையில் இடியை இறக்கியது உச்ச நீதிமன்றம் - ShareChat