*அழகருக்கு தண்ணீர் பீச்சும் தோப்பறையின் ரகசியம்* 🍁
தெற்கு பகுதியில் நடக்கும் சித்திரை திருவிழாவிற்காக கள்ளழகர் பக்தர்கள் அனைவருமே விரதம் இருந்து நேர்த்திக்கடனாக கள்ளழகர் வேடம் அணிந்து தண்ணீர் பீச்சு அடிப்பதை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றார்கள்.
மதுரையின் சித்திரை திருவிழா...
வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லி விட முடியாது. வரலாற்று சிறப்புமிக்க திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நாயக்கர் மற்றும் பாண்டிய மன்னர்களை அடித்தளமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திருவிழா மதுரை மண்ணில் இன்றும் வேரூன்றி நிற்கின்றது.
15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா சைவர்கள் மற்றும் வைணவர்களை நட்புறச் செய்யும் திருவிழா. மதுரையின் வடக்கே சுமார் பத்து நாட்கள் மீனாட்சியின் திருவிழா கொடிகட்டி பறக்க, தெற்கு பகுதியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கள்ளழகர் குலுங்க குலுங்க என்று மதுரையே குலுங்கும்.. இதில் குறிப்பாக தெற்கு பகுதியில் நடக்கும் சித்திரை திருவிழாவிற்காக கள்ளழகர் பக்தர்கள் அனைவருமே விரதம் இருந்து நேர்த்திக்கடனாக கள்ளழகர் வேடம் அணிந்து தண்ணீர் பீச்சு அடிப்பதை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றார்கள்.
இத்தண்ணீர் பீச்சி அடிப்பதற்காக அக்காலகட்டத்தில் இருந்தே அதாவது மன்னர்கள் காலத்தில் இருந்து ஆட்டுத் தோப்பறைகள் மூலமாக கள்ளழகருக்கு தண்ணீர் பீச்சி அடிப்பது என்பது வழக்கமாக இருந்து வருகின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இக்காலகட்டத்திலும் கூட ஆட்டுத் தோப்பறைகளை சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சித்திரைத் திருவிழா நாளில் மட்டும் தயார் செய்கின்றார்கள்.
அதனை திருவிழாவிற்கு 10 நாட்களுக்கு முன்பு அதாவது தெற்கு பகுதியில் நடைபெறும் திருவிழாவிற்காக வடபகுதியில் உள்ள தேர்முட்டி சாலையில் இரவு பகலாக மதுரையிலேயே தங்கி இருந்து ஆட்டுத் தோப்பறைகள் விற்பனை செய்ய தொடங்குவார்கள்.மூன்றாவது தலைமுறையாக இத்தொழிலை செய்து வரும் நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே கள்ளழகருக்கு வேடமணியும் பக்தர்கள் போல் நாங்களும் விரதம் இருந்து மாலை அணிந்து இத்தொழிலை செய்ய தொடங்குவோம். பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து சக்தி வாக்காக இப்படி ஒரு வாக்கு கொடுக்கப்பட்டதாகவும், பாரம்பரியத்தை காக்கவும் இத்தொழிலை செய்து வருவதாகவும் வரும் காலங்களில் எவ்வளவு தான் எங்கள் கிராமத்துடைய அடுத்த தலைமுறைகள் படித்திருந்தாலும் அவர்களும் இத்தொழிலை சித்திரை மாதத்தில் மட்டும் கண்டிப்பாக செய்வார்கள் என்கின்றார் தங்கராசு...
சரி!.. ஒரு கிராமமே இந்த ஆட்டு தோப்பறைகளை தயார் செய்து விற்பனை செய்கின்றார்கள். ஆனால் இந்த ஆட்டு தோப்பறைகள் மூலமாக கள்ளழகருக்கு ஏன் தண்ணீர் தெளிக்கப்படுகின்றது. அக்காலகட்டத்தில் இருந்தே சித்திரை மாதத்தில் நடைபெறும் இத்திருவிழாவில் கடும் வெயிலின் தாக்கம் இருப்பதினாலும், அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பாடாகி வரும் வைகை ஆற்றில் இறங்கிய பின்பு கடும் கோபத்துடன் மீண்டும் அழகர் கோவிலுக்கு புறப்படுவதினால் அவரது கோபத்தை தணிக்கவும் மஞ்சள் தண்ணீர் பீச்சு அடிக்கப்படுவதாகவும் புராண கதைகளில் சொல்லப்படுகின்றது.
தவமாய் தவமிருந்து பிள்ளைகளை பெற்று எடுப்பது போல், மூன்று மாதங்கள் வெயில், மழையுடன் போராடி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து ஆட்டுத்தோல்களை அவரவர் வசதிகளுக்கு ஏற்ப வாங்கி அதனை கடுக்காய், சுண்ணாம்பு போன்ற பதப்படுத்தும் பொருட்களை பயன்படுத்தி ஆட்டுத் தோள்களை பதப்படுத்தி ஆட்டு தோப்புரையாக தயார் செய்யும் இவர்கள் லாபம் இல்லாமல் வெறும் அழகரின் தொண்டுக்காக செய்கின்றார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திற்கு ஏற்றார் போல் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு கடன் வாங்கி அதனை முதலீடு செய்து அதன் மூலமாக ஆட்டு தோப்புகளை தயார் செய்யும் எங்களுக்கு என்னவோ லாபம் என்பது இத்தொழியில் கிடைப்பதில்லை. அளவுக்காக மாலை பூக்களை பேரம் பேசாமல் வாங்கிச் செல்லும் இவர்கள் மூன்று மாதம் கஷ்டப்பட்டு செய்யும் ஆட்டுத் தோப்பறைகளை அடிமட்ட விலைக்கு கேட்கின்றார்கள். அதாவது ஒரு ஆட்டு தோப்பறையை 500 ரூபாய் தயார் செய்கின்றோம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எந்த ஒரு லாபமும் இல்லாமல் அதே 500 ரூபாய் தான் கூலியாக கிடைக்கின்றது. லாபமே இல்லாத ஒரு தொழிலை ஒவ்வொரு ஆண்டும் ஏன் செய்து வருகின்றோம் என்றால் அது நாங்கள் கள்ளழகாக செய்யக்கூடிய தொண்டு என்கின்றார் காமாட்சி...
இப்படி 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழக்கூடிய காரியாபட்டியில் சித்திரை மாதத்தில் நடைபெறும் கள்ளழகர் திருவிழாவிற்காக மட்டுமே இத்தொழிலை எந்த ஒரு லாபமும் இல்லாமல் செய்து வருகின்றார்கள் என்பதும் மற்ற நாட்களில் கூலி வேலைக்குச் சென்று தங்களது வாழ்க்கையை வழிநடத்தி செல்கின்றார்கள்.லாபமே இல்லாத ஒரு தொழிலை நான்கு மாதங்களாக செய்கிறார்கள் என்றால் அது சற்று நமக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். ஆனால் இவை அனைத்தும்
அந்த ஒரே ஒரு நபர் மதுரை கள்ளழகருக்குத்தான்என்று சொல்லும் பொழுது கள்ளழகரின் புகழ் ஓங்கி நிற்கச் செய்கின்றது. #madurai #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏


