ShareChat
click to see wallet page
search
இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு பெரியார் விருது வழங்கிய விழாவில் அவர் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. "..சினிமா துறையில் என்னை ஒரு ஆளாக்கியது ராம் சார் தான். அவர் என்கிட்ட அடிக்கடி சொல்ற வார்த்தை என்னானா 'அவரை விட சிறந்த இயக்குனர்னு நான் பேரு வாங்கனும். அதுதான் அவருக்கான மகிழ்ச்சி. அப்பத்தான் ராம் சரியா சொல்லி கொடுத்துருக்கானு தனக்கு திருப்தியாக இருக்கும்' சொல்லுவாரு. அதுக்கு பேரு தான் "ஆசானை மீறுதல்"னு சொல்லுவாங்க. கத்துகொடுத்தவர மீறி ஜெயிச்சு வரணும். ஆனா பெரியார் கிட்ட இருந்து தொடங்கிட்டு நாலு வரி கோர்வையாக மேடையில் பேச தெரிஞ்சதும் அவரையே திட்டி அவதூறு செஞ்சு அதுல கிடைக்குற விளம்பரத்தை வெற்றினு சொல்ல முடியாது. உண்மையிலேயே பெரியாரை நீங்க மீறிவரணும்னா அவருடைய வாழ்நாள்ல அவரு செஞ்சதை விட ஒரு படி மேல நீங்க செய்ங்க அப்புறம் பேசலாம்னு.." சீமான் கன்னத்தில் பளார்னு அடிச்சிருக்காரு நம்ம மாரி. இதை கேட்ட போது 15ஆண்டுகளாக மே17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ஒவ்வொரு மேடையிலும், விமர்சனம் என்ற பெயரில் பெரியாரை அவதூறு பரப்பி வரும் சங்கி சீமான் ஐயா மணியரசன் போன்றோருக்கு கொடுத்துவரும் பதிலடியை வழிமொழிந்திருக்கிறார் என்பது மிகுந்த மகிழ்ச்சி. உண்மைகள் யார் சொன்னாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். மாரியின் இந்த பேச்சு GenZ தலைமுறையினரால் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. பிரம்மாண்ட வெற்றிகளை குவித்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜ் போன்றோர் தெளிந்த அரசியலோடு சரியான வழியில் பயணிக்கின்றனர். ஆனாலும் பாருங்க காலாவதியான இயக்குனர் சீமானுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை. #🤭அரசியல் மீம்ஸ் #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #மாரி செல்வராஜ்
🤭அரசியல் மீம்ஸ் - 56 BU 817 இயக்கம் 56 BU 817 இயக்கம் - ShareChat