#🙏🏻மார்கழி மாத சிறப்பு #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
திருப்பாவை பாடல் 27
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.
விளக்கம்:
கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்💐💐💐💐💐💐💐💐💐💐K. R💐💐💐💐
![🙏🏻மார்கழி மாத சிறப்பு - மார்கழி 27 12.01! LrL_6 27 KR திருப்பாவை வேல்லும்சீரக் கோவிந்தா! உன்தன்னைப் கூடாரை பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகமும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னேபாற் ]சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் KR CIILIS] திருப்பள்ளியெழுச்சி 7 KR அது பழச்சுவையென அமுதேன அறிதற்கு அரிதென எளிதேன , அமரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே;் எங்களை ஆண்டுகோண்டு இங்கழுந்தருளும் மதுவளர் பொழில் திரூஉத்தர கோச மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா எது எமைப் பணிகோளுமாறு அது கேட்போம்; எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே KR MI@m V மார்கழி 27 12.01! LrL_6 27 KR திருப்பாவை வேல்லும்சீரக் கோவிந்தா! உன்தன்னைப் கூடாரை பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகமும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னேபாற் ]சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் KR CIILIS] திருப்பள்ளியெழுச்சி 7 KR அது பழச்சுவையென அமுதேன அறிதற்கு அரிதென எளிதேன , அமரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே;் எங்களை ஆண்டுகோண்டு இங்கழுந்தருளும் மதுவளர் பொழில் திரூஉத்தர கோச மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா எது எமைப் பணிகோளுமாறு அது கேட்போம்; எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே KR MI@m V - ShareChat 🙏🏻மார்கழி மாத சிறப்பு - மார்கழி 27 12.01! LrL_6 27 KR திருப்பாவை வேல்லும்சீரக் கோவிந்தா! உன்தன்னைப் கூடாரை பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகமும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னேபாற் ]சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் KR CIILIS] திருப்பள்ளியெழுச்சி 7 KR அது பழச்சுவையென அமுதேன அறிதற்கு அரிதென எளிதேன , அமரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே;் எங்களை ஆண்டுகோண்டு இங்கழுந்தருளும் மதுவளர் பொழில் திரூஉத்தர கோச மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா எது எமைப் பணிகோளுமாறு அது கேட்போம்; எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே KR MI@m V மார்கழி 27 12.01! LrL_6 27 KR திருப்பாவை வேல்லும்சீரக் கோவிந்தா! உன்தன்னைப் கூடாரை பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகமும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னேபாற் ]சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் KR CIILIS] திருப்பள்ளியெழுச்சி 7 KR அது பழச்சுவையென அமுதேன அறிதற்கு அரிதென எளிதேன , அமரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே;் எங்களை ஆண்டுகோண்டு இங்கழுந்தருளும் மதுவளர் பொழில் திரூஉத்தர கோச மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா எது எமைப் பணிகோளுமாறு அது கேட்போம்; எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே KR MI@m V - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_981632_11323a32_1768086979043_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=043_sc.jpg)

