ShareChat
click to see wallet page
search
#murasoli #Erodetamilanban #sorkko #tamilamudhan #kalinger ##தமிழ்அமுதன்
#தமிழ்அமுதன் - முத்தமிழறிஞரை உணர ஒரு காலசாட்சியம் ! 2012 - ஆம் ஆண்டு , டிசம்பர் 2 அன்று , திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 80 - வது பிறந்த நாள் விழா , சென்னை , ஃப்ளாஷ்பேக் பெரியார் திடலில் ' சுயமரியாதை நாள் ' எனக் கொண்டாடப்பட்டது . அன்று நடந்த கவியரங்கில் , கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் தலைமையில் , நானும் ' சொற்கோ ' கருணாநிதி அவர்களும் கவிஞர் பங்கேற்றோம் . கவியரங்கம் முடிந்து மேடையை விட்டு கீழே இறங்கும் சமயத்தில் , ஆசிரியர் அய்யா அவர்கள் வந்து , ' உங்களைத் தலைவர் அழைக்கிறார் ' என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடம் எங்களை அழைத்துச் சென்றார் . கலைஞர் அவர்கள் , எங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே பாராட்டியதுடன் , புகைப்படக் காரரிடம் படம் எடுக்கவும் சொன்னார் . முத்தமிழறிஞரின் ஞானத்தை உணர்வதற்கு , இந்தப் படம் ஒரு கால சாட்சியம் என்றே எனக்குத் தோன்றும் . தமிழ் அமுதன் - கவிஞர் தமிழ் அமுதன் , தலைவர் , தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் , சென்னை . - ShareChat