#நல்லதே பேசு நல்லதே நினை டாக்டர் விக்னேஷ் – பிரியதர்ஷினி திருமண வரவேற்பு விழா
திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் கோ. அசோகன் – ஹேமலதா தம்பதியரின் மூத்த மகன் டாக்டர் அ. விக்னேஷ் மற்றும் ஏ. பிரியா (எ) பிரியதர்ஷினி ஆகியோரின் திருமண வரவேற்பு விழா 11.2.2026 புதன்கிழமை மாலை 7 மணிக்கு திண்டிவனம் ஜே.வி.எஸ். சக்தி மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன், திமுக மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஆர். சேதுநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் பா. சிராஜ்பேகம், முஸ்லிம் மக்கள் கழகத்தின் திண்டிவனம் நகர செயலாளர் மு. அப்துல் ஹக்கீம், ஒலக்கூர் சரஸ்வதி சட்டக் கல்லூரி மாணவி ஜை. ஆயிஷா பேகம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


