ஈரான் அமெரிக்கா : மொஜ்தபா உரையும் வளைகுடாவின் எதிர்காலமும்
நேற்று இரவு மோஜ்தபா காமெனெய் (Mojtaba Khamenei) 12 நிமிடங்கள் ஈரான் மக்களிடம் உரையாற்றினார். ஆனால் அவர் உண்மையில் ஈரான் மக்களிடம் பேசவில்லை. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நேராக வாஷிங்டனை நோக்கியதாக இருந்தது.
முதல் ஆறு நிமிடங்களில், அவர் “அமெரிக்க குற்றங்களின் பட்டியலை” வாசித்தார்.
அவரது தந்தையின் படுகொலை, ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டது, பல தசாப்தங்களாக விதிக்கப்பட்ட தடைகள் (sanctions), இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட ஆதரவு, அரபு நிலங்களில் அமெரிக்க படைகள் இருப்பது, இவை எல்லாம் ஈரானில் வழக்கமான அரசியல் உரையாடலில் இடம்பெறுகியவையே.
ஆனால் ஏழாவது நிமிடத்தில் அவரது குரலும் உள்ளடக்கமும் மாறியது.
அவர் கடந்த காலத்தைப் பற்றி பேசுவதை நிறுத்தி, எதிர்காலத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். அவர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த கோரிக்கைகளின் முழு உரை சுவிட்சர்லாந்து மூலம் அமெரிக்க வெளியுறவு துறைக்கு அனுப்பப்பட்டது.
அமெரிக்கா மத்திய கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை மட்டுமே சில ஊடகங்கள் தெரிவித்தன ஆனால் அது முழுமையான உரையை பிரதிபலிக்கவில்லை.
காமெனெய் பயன்படுத்திய சொற்கள் மற்றும் அவர் கொடுத்த காலக்கெடு பற்றி எந்த ஊடகமும் தெளிவாக செய்திகள் ஏதும் வெளியிடவில்லை.
கோரிக்கை 1:
அமெரிக்காவின் அனைத்து இராணுவப்படைகளும் ஈராக், சிரியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து 30 நாட்களுக்குள் வெளியேறத் தொடங்க வேண்டும்.
பின்னர் அல்ல. பேச்சுவார்த்தைக்கு பிறகு அல்ல. இன்றில் இருந்து 30 நாட்களுக்குள்.
கோரிக்கை 2:
1979 முதல் ஈரானுக்கு விதிக்கப்பட்ட அனைத்து அமெரிக்க தடைகளும் 60 நாட்களுக்குள் நீக்கப்பட வேண்டும்.
இதில் அனைத்து வங்கி கட்டுப்பாடுகள், எண்ணெய் ஏற்றுமதி தடைகள், தொழில்நுட்ப பரிமாற்றத் தடைகள் அனைத்தும் அடங்கும்.
கோரிக்கை 3:
கடந்த நாற்பது ஆண்டுகளில் ஈரானுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பொருளாதார இழப்புக்கு அமெரிக்கா ஈடு தொகை (reparations) வழங்க வேண்டும்.
காமெனெய் கூறியபடி “பொருளாதார போர்” காரணமாக ஈரான் 800 பில்லியன் டாலர் வருவாய் இழந்துள்ளது.
அவர் கோரிய தொகை 500 பில்லியன் டாலர், இது 10 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், ஈரான் மூன்று நடவடிக்கைகள் எடுக்கும் என்று காமெனெய் அழுத்தமாக கூறினார்.
நடவடிக்கை 1:
30 நாள் காலக்கெடு முடிந்தவுடன், ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் உடனடியாக மூடப்படும்.
நடவடிக்கை 2:
ஈரான் “பாதுகாப்பு இராணுவ கூட்டணிகள்” என ரஷ்யா மற்றும் சீனாவுடன் உடன்படிக்கைகளில் ஈடுபடும்.
இதில் ஈரான் நிலப்பரப்பில் ரஷ்யா மற்றும் சீனாவின் இராணுவ தளங்கள் அமைக்க படலாம்.
நடவடிக்கை 3:
சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களுக்கு உள்ள உரிமையை பயன்படுத்தி முழுமையான அணு தடுப்பு திறனை (full-spectrum nuclear deterrent) உருவாக்கி பயன்படுத்துவோம் என்றும் கூறினார்.
அவர் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் என்று சொல்லவில்லை. அவர் அதை பயன்படுத்தத் தயாராக வைத்திருப்போம் என்று கூறினார்.
இந்த சொற்கள் மிகவும் அழுத்தமாக பாவிக்கப்பட்டன.
ஈரான் இதை ஏன் செய்தது?
அதற்கான பதில் அதிகார அரசியலில் இருக்கிறது.
மோஸ்தபா காமெனெய் தனது தந்தையைப் போல இல்லை.
அலி காமெனெய் (Ali Khamenei) பல தசாப்தங்கள் ஈரானுக்குள் உள்ள பல அரசியல் குழுக்களை சமநிலைப்படுத்தி ஆட்சி செய்தார்.
அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். சமரசம் செய்தார். நீண்டகால அரசியல் விளையாட்டை விளையாடினார்.
ஆனால் மோஸ்தபாவுக்கு நிலை இல்லை. அவர் இராணுவத்தால் பதவியில் அமர்த்தப்பட்டவர். IRGC (Islamic Revolutionary Guard Corps) அவரை அதிகாரத்தில் கொண்டு வந்துள்ளது.
அவர்கள் மோஸ்தபாவிடம் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். மோஸ்தபா மற்றும் IRGC தலைவர்கள் அவர் பதவி ஏற்ற சில மணி நேரங்களுக்குள் ஒரு கூட்டம் நடத்தினர்.
அந்த கூட்டத்தின் செய்தி தெளிவாக இருந்தது: “நாங்கள் உங்களை உச்ச தலைவராக ஆக்கியுள்ளோம். நாங்கள் விரும்புவதையே நீங்கள் செய்து கொடுக்க வேண்டும்.”
அவர்கள் விரும்புவது:
மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க தாக்கத்தை முழுமையாக அகற்றுவது
ஈரானின் இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்ப பொருளாதார வளங்கள்
அமெரிக்காவுடன் சமமான நாடாக ஈரான் பேச்சுவார்த்தை நடத்தும் சர்வதேச அங்கீகாரம் வேண்டும்
இது 1979 க்கு பிறகு இல்லாத அளவுக்கு அதிகார சமநிலையை மாற்றக்கூடியது.
நாற்பது ஆண்டுகளாக அமெரிக்கா ஈரானுக்கு விதிமுறைகளை நிர்ணயித்தது. தடைகள், அழுத்தம், தனிமைப்படுத்தல், இராணுவ அச்சுறுத்தல்கள் என ஈராநை நசுக்கியது, அதிகாரம் இல்லாமல் ஆக்கியது இப்போது அவர்கள் அந்த அதிகாரத்தை பெற்றிட துடிக்கிறார்கள்..
எண்ணெய் விலை இப்பொழுதே $121
இந்த போரை வெல்ல முடியாது என்று கூறும் பென்டகான் ஆவணம் வெளியானது
சீனாவும் ரஷ்யாவும் வெளிப்படையாக ஈரானை ஆதரிக்கின்றன
உலக பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய ஹார்முஸ் நீரிணை மூடல்
மோஸ்தபா காமெனெய் பேச்சுவார்த்தை வேண்டும் என்று தனது உரையில் ஒற்றை வார்த்தை கூறவில்லை. அவர் எதிரிகளை சரணடைவை கோருகிறார்.
அடுத்த 72 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளில் பேச்சுவார்த்தை ஏற்றுக்கொண்டால், இது மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்தின் முடிவாக வரலாற்றில் எழுதப்படும்.
அமெரிக்கா அதை நிராகரித்து போர் தொடர்ந்தால், இது பல ஆண்டுகள் அமெரிக்க வளங்களையும் நம்பகத்தன்மையையும் இழந்து, வெற்றி பெற முடியாத போரின் தொடக்கமாக நினைவில் கொள்ளப்படும்.
இது ஒரு சாதாரண வெளிநாட்டு கொள்கை சவால் அல்ல. இது உலக அதிகார அமைப்பை மறுசீரமைக்கும் தருணம்.
ஈரான் உண்மையில் இந்த மிரட்டல்களை செயல்படுத்தும் வாய்ப்பை கணக்கில் கொண்டு தனது நடவடிக்கைகளை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
உலகம் இனி எந்த திசையில் செல்லும், முழுமையான அமைதி திரும்பிட வேண்டும் என்பதே எனது விருப்பம். #👨மோடி அரசாங்கம்


